Thursday, August 29, 2019

RBI ரூ 176,000 கோடி.... கோவிந்தா.. க்க்கோவிந்தா



கோவிந்தா க்கோவிந்தா
Image result for rbi 1.76 lakh crore

RBI க்கு கோவிந்தா..
தொகை கொஞ்சம் பெரிசு..
ரூ 176,000 கோடி..
யாருக்குமே இப்படி ஒர் அறிவுப்பூர்வமான படா கில்லாடித்தனமான
 பொருளாதர சிந்தனை வரவே இல்லை. அடேங்கப்பா….
அடிச்சிப் புடுச்சி.. இல்லாத தகிடு்தத்த்தமெல்லாம் செய்து 
கடைசியா.. பிடுங்கின தொகை..
ரூ. 176,000 கோடி.
பிஜேபி அரசுக்கு இதுக்காகவே 176 வடை செய்து 
வடைமாலை சாத்தனும்..
அப்புறம்.. இந்தப் பொருளாதர வல்லுனர்கள் எல்லாம்
 இருக்கும் இந்திய நாட்டின் மத்திய வங்கி..
ரிசர்வ் பேங்க்க்.. க்கு
கோவிந்தா கோவிந்தா..
இனிமே .. என்ன பொருளாதர சரிவு வந்தாலும்
எங்க பணப்பெட்டி பீரோவும் 
அடுக்களையில் காயம் டப்பாவில் போட்டு வச்ச 
சில்லறையும் காப்பாத்திடும்னு எகானிமிக்ஸ் டைம்ஸில
ஃபீலா விட்டீங்க.. .. 
அப்போ தான் இருக்கு.. 
உங்களை எல்லாம் துண்டைக் காணும் துணியைக் காணும்னு
 பாஷா ரேஞ்சில ரிசவ்ர் வங்கி முன்னால அப்படியே 
அந்த பங்குச் சந்தையைச் சுற்றி சுற்றி ஓட விடனும்.. 

எந்தப் பொருளாதரத்தில் இப்படி எல்லாம்
 சொல்லிக்கொடுத்தாங்கனு தெரியலயே..

ட்டேய்.. சரவணா.. 
எங்களுக்கும்.. ஆடிட்டரை ஏப்பம் விடறதிலிருந்து
 வருமான வரியை ஏமாத்தற வித்தை வரை தெரியும்.
 எண்களுடன் எப்புடி விளையாடறதுனு  வித்தை எல்லாம்
 தெரியும்டே.. ஆனா..
இப்படி ஒரு வித்தையை எவராலும்
 கற்பனை கூட பண்ண முடியாதோடேய்..
….
ரிசர்வ் வங்கி சாமியாடிக்கெல்லாம் 
என்ன பூஜை செய்தாங்கனு தெரியலையே.
அது என்னப்பா.. போன நிதியாண்டில் 50,000 கோடியாக
 இருந்த உபரி வருமானம் (EXCESS INCOME) 
இந்த நிதியாண்டில் ரூ 176,000 கோடி நு
ச்சுய்ங்க் நு மேல ஏறிடுச்சி..
எப்பா.. என்ன செஞ்சு தொலைச்சீங்கனு தெரியலையே..
சரவணா..
ரூபாய் மதிப்பு ஏறுவதும் இறங்குவதும்..
அதுவும் இப்போ எல்லாம்
ஒரே இறங்குமுகத்தில் குடை ராட்டினம் ரிப்பேராகி
 கிடக்கும் போது
என்னத்தை செய்து இந்த அதிக வருமானம் 
காட்டுனாகனு தெரியலையே
மவராசா.. கணக்கு எங்க்டேயோ உதைக்குதே வாத்தியாரே..
Image result for rbi 1.76 lakh crore

எப்பா.. இந்த தேசத்தின் பொருளாதர சரிவுகளை 
சரிகட்ட டாலரை விற்பதுனு கேள்விப்பட்டிருக்கேன்..
 அது நடந்தும் இருக்கு.
ஆனா.. இவுக தொந்தரவு பொறுக்காமா.. நீங்க பாட்டுக்கு 
வெளி சந்தையிலே
வச்சிருக்கிற டாலர் பணத்தை வித்துட்டீகளா..
ஒன்னுமே புரியல..
எப்படிப்பா இம்புட்டு அதிகமாச்சு திடீர்னு..
2018ல் உங்க கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்தப்போவே
 உங்க திட்டம் படா டேஞ்சரா தான் இருக்கும்னு தோணிச்சி.
இப்போ..என்னவோ .. நடந்துப் போச்சு.
ட்டேய் சரவணா.. அப்படி என்ன
சமாளிக்க முடியாத பேரிடர் வந்துவிட்ட து?
தேசத்தின் இன்சூரன்ச் பாலிசி அதன் வட்டி 
இதெல்லாம் தான் ரிசர்வ் வங்கியின் இச்சேமிப்பு.

இதை எடுத்து செலவு செய்ய வேண்டிய அளவுக்கு
இந்திய தேசத்தின் பொருளாதர நிலை இருக்கிறதுனு..
ஒத்துக்கிட்டாங்கய்யா...
நிச்சயமாக யானைப் பசிக்கு இது சோளப்பொரிதான்..

பி.கு:
நிர்மலா சீதாராமன் அவர்களின் பட்ஜெட் பாடல் வரிகளைக் 
கொண்டு ரிசர்வ் பேங்கிடம் எப்படி பணம் வாங்குவது 
என்பதை விளக்கவும்.
விளக்கவுரை:
“காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பல்நாட்டு ஆகும்
நூறுசெறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே
வாய்புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே
கோடியாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவன் ஆகி,வைகலும்
வரிசை அறியாக் கல்என் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போல
தானும் உண்ணான் உலகமும் கெடுமே ! “
(புறம் 184)
அரசே! நெல்லை அறுத்து யானைக்கு உணவு சமைத்துப் போட்டால், அது பலநாட்களுக்கு உணவாகும். அதுவே, யானையே சாப்பிட்டுக் கொள்ளட்டும் என்று யானையை நெல்வயலில் விட்டால், அது பசியாற உண்பதைக் காட்டிலும் அதன் காலால் மிதித்துச் சிதைப்பது மிகுதியாகும். அதுபோல அறிவுடைய அரசனே குடிமக்களிடம் (ரிசர்வ் பேங்க்கிடம்)முறையாக வரி (உபரி வருமானத்தை ) வாங்கினால் கோடியாக செல்வம் வளரும் நாட்டு மக்களும் விரும்புவர். முறையற்று தன் ஆட்களை ஏவி கருணை இன்றிப் பிடுங்கும் செல்வமானது யானை புகுந்த நிலம் போல் ஆகும். தானும் உண்ண மாட்டான். மக்களும் கெடுவார்கள்” என விளக்குகின்றார்.
----------------------------
இதனால் அறிய வருவது என்னவென்றால் பிசிராந்தையார் கோபித்துக் கொள்ள மாட்டார் என்பது தான்.. !
--- நாளைக்கு இன்னொரு ப்ரேக் நியுஸ் வந்திட்டா
சரவணா..நம்ம ஆட்கள் அதில ப்ஸியாகிடுவோமில்ல.

No comments:

Post a Comment