Thursday, October 30, 2025

சூ.. மந்திரகாளி.☠️

 











மந்திரங்கள் பூமியின் ஒலி வடிவம். ஆதிமனிதன் அதை அறிந்திருந்தான். 

அதிகாரத்தின் எழுத்து மொழி பிறப்பதற்கு முன்

அவன் அனைத்து ஜீவராசிகளுடனும் (ஒலி அலை) பேசிக் கொண்டிருந்தான்.

💥💥💥💥 


வீரபத்திரன் முதலில் அரவங்களை ஏவலில் இருந்து விலக்கித் தமது கட்டுக்குள் கொண்டு வரும் வேலை தொடங்கியது.


விபூதி அட்சரங்கள் பலவும் உருவாக்கி மூல மந்திரங்களை ஒத ஓதப் பாம்புகள் சுட்டவிழ்ந்து ஓடின. அரவத்தை மந்திர ஏவலில் இருந்து விடுவிக்கும் மந்திரங்களை வீரபத்திரன் உச்சரிக்கத் தொடங்கினார்.


அவ்வும் வசிய என்று உச்சரிக்க அரவம் ஓடும்


ஓம் அம் என்று உச்சரிக்க அரவம் படமெடுத்து ஆடும்


அவ்வும் வசி என்று உச்சரிக்க அரவம் சீறும்


ஓம் அவ்வும் என்று கூற அரவம் சீறிப் புடைக்கும்


ஓம் அவ் என்று கூற அரவம் நின்ற நிலையில் நிற்கும்


அவ்வும் சிவாய நம என்று கூற அரவம் நிலைபெறாமல் நின்றாடும்


அங் அங் சிவாய நம என்று கூற அரவு வணங்கி நிற்கும்


ஓம் அம் அம் என்று கூற அரவு கடிய வேமெடுத்து ஓடும்.


ஆங் ஆங் சிவாய நம என்று கூற அரவு தலை சாய்த்து வணங்கும்


ய நம சிவ என்று கூறக் கடுகிச் சிறி கடிவாயில் வரும்


சிவாயநம என்று கூற அரவம் ஆடாது நிற்கும்


வீரபத்திரன் இவ்வாறான மந்திரங்களைக் கூறும் போது உரிய அட்சரங்களையும் இயற்றி நாகங்களை ஏவல் கொண்டார். இதன் காரணமாக நாகங்ககள் வேகமெடுத்து விலகிச் சென்றன.


 அரவத்தை அல்லது நாகத்தை கட்ட என்று மூல மந்திரம் உண்டு. இந்த மூல மந்திரமே ஏனைய மந்திரங்களுக்கு அடிப்படை. ந்திரங்களுக்கு அடிப்படை. அதுபற்றி வீரபத்திரன் வரித்துக் கூறத் தொடங்கினார்.


தேவியின் சக்கரம் எழுதிக் காராம் பசுவின் பால் விட்டரைத்துச் சக்கரத்தில் தடவி வா, வா வென்று 100 உரு செவிக்க அரவு கட்டுப்படும். மேலும் சக்கரத்தைத் தோப்பின் நடுவே உள்ள மரத்தின் கீழ் புதைத்துத் தோப்பின் நான்கு திசையிலும் சேவலைப் பலி கொடுத்து உதிரம் தெளிக்க வேண்டும். 108 நாள் செபித்து உருவேற்ற சக்கரம் சக்தி பெறும்.


இவ்விதமாக அரவத்தின் ஏவலை நீக்கிட நாகங்கள் கம்ப சேவை விழா நடைபெறும் இடத்தை விட்டு உடனே அகன்றன.


அடுத்ததாகக் கருடன் மந்திரக் கட்டை உடைத்து வரவழைக்கும் சடங்குகள் செய்யப்பட்டன.


ஒரு பெரிய தட்டில் திருநீற்றைச் சமமாகப் பரப்பி அதன் மீது ஊசி முனை கொண்டு அட்சரங்கள் எழுதப்பட்டன. அட்சரங்களின் இடங்களில் எங்கெங்கு பலி கொடுத்துக் குருதி தூவ வேண்டுமோ அங்கெல்லாம் குங்குமத்தைத் தூவினார் வீரபத்திரன்.

பக். 92 & 93

💥💥💥


மந்திரங்கள் வசியம் செய்வது  இதில்  எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆனால் பூமியில் அனைத்து ஜீவராசிகளும் ஒலி அலைகளுக்கு கட்டுப்பட்டவை. 

அதை அறிந்தவன்

அந்த ஒலிகளைக் சொற்களாகவோ அல்லது பொருளற்ற ஒலிக்குறிப்புகளாகவோ மந்திரம் வசியம் என்ற பெயரில் தலைமுறைகளாக வாய்மொழி வழி கடத்தி வந்திருக்கிறான்.


இதில் மதநம்பிக்கைகள் கலந்து விடும்போது சடங்குகள் மத வழிபாடாகி தொன்மங்கள் இன் வரலாறு  புனைவுகளின் ஊடாக தன்னைப் போர்த்திக் கொண்டு மதச்சடங்கு , அதன் வழியான நம்பிக்கைகளாக மாறி விடுகின்றன.


இந்த ஒலி அலை மந்திரச் சொற்களை அறிந்த இனக்குழு காலப்போக்கில் 

பெருந்தெய்வ வழிபாடுகளின் பிரம்மாண்டத்தில் கொள்ளைப் புறத்தில் ஒதுக்கப்பட்டுவிட்டது.

உலகெங்கும் மனித நாகரிக வரலாற்றில் இவை நடந்திருக்கின்றன.


ஏழாம் வீரபத்திரனின் வாரிசுகள் தங்கள் மூதாதையர் அறிந்திருந்த ஒலி அலைகளை இழந்துவிட்டார்கள்.

பிழைப்புக்காக 

" சூ.. மந்திரகாளி" 

என்று எதையோ மந்திரம் போல பாவனை செய்கிறார்கள்.

No comments:

Post a Comment