Tuesday, December 15, 2020

FARMERS law .. is only farmers issue!


 (see this list. 20 out of 22 agri logistics ltd .. of ADANI were set up during MODI rule)

Why I stand with FARMERS
 this is really Farmers issue ...
! who will be affected ? 
கொரொனா காலத்தில் நாடு மிகப்பெரிய 
ஒரு பொருளாதர சிக்கலையும் சந்தித் துக்கொண்டிருக்கும் போது
 அரசு அதுவும் ஜனநாயக அரசு இப்படியான
 ஒரு சட்ட த்தை அவசரம் அவசரமாக கொண்டுவர
 வேண்டியதன் அவசியம் என்ன?
 இப்போது இதற்கான தேவை என்ன? 
இப்படியான ஓரு சட்ட த்தை எந்த அரசாவது 
கொண்டுவந்திருக்கிறதா! சர்வாதிகாரியைப் போல
 சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு
 விவசாயிகள் உழைப்பாளர்கள் உரிமையை மட்டும்
 இந்தச் சட்டம் பாதிக்கவில்லை. 
இந்த சட்டங்க:ள் மீறப்பட்டால் விவசாயி நிதீமன்றம்
 செல்ல முடியாது என்பது மட்டுமல்ல, 
 இந்தியக்குடிமகன் எவருமே இச்சட்டம் குறித்து நீதிமன்றம் செல்லும் உரிமையை மறுக்கிறது

. Article 19 in the Indian Constitution is about freedom of expression, freedom of assembly, but here it (farm laws) is about exempting any cog in the govt machinery of legal scrutiny,” Sainath said. “And it does not specify that farmers could not do it. It says nobody can. You are going to see these clauses in every law that comes in. “விவசாயிகளால் அதைச் செய்ய முடியவில்லை 
என்று அது குறிப்பிடவில்லை. யாராலும் முடியாது 
என்று அது கூறுகிறது. வரும் ஒவ்வொரு சட்டத்திலும்
 இந்த உட்பிரிவுகளை நீங்கள் காணப் போகிறீர்கள். ” -சாய்நாத் 


 அம்பானியும் அதானியும் மிக அதிகமான கொள்ளளவு கொண்ட மண்டிகளை godowns 2019 ல் இந்தச் சட்டம் வருவதற்கு முன்பே கட்ட 
ஆரம்பித்துவிட்டார்கள். ஒட்டுமொத்த விவசாய விளைப் பொருட்களையும் நாளைக்கு இவர்கள் தங்களிடம் பதுக்கி வைத்துக் கொள்ளலாம். 
அந்தப் பதுக்கலை சட்டம் ஏற்றுக்கொள்கிறது. எந்த ஒரு பொருள் விளைச்சலுக்கும் விலைக்கும் சம்பந்தமே இருக்காது.
 அதைத் தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக இவர்களே
 இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட உணவு தானியத்தை 
முழுவதும் கைவசமாக்கி இவர்கள் 
பற்றாக்குறையை / தட்டுப்பாடுகளை உருவாக்க முடியும். 
 அதாவது இவர்கள் நினைத்தால் தட்டுப்பாடு தானே உருவாகும் . திட்டமிடப்பட்ட வளர்ச்சியைக் கேள்விப்பட்டிருக்கின்றீர்கள்.. திட்டமிடப்பட்ட பற்றாக்குறையை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா! 

 இந்த ஆண்டு பருப்பு விளைச்சல் அமோகமாக இருந்ததே.. அப்படியும் ஏன் சந்தையில் இந்த விலை? இவ்வளவு டிமாண்டு என்று நம்மை யோசிக்க விடமாட்டார்கள்! இவர்களே பொருளாதர வல்லுனர்களை உருவாக்கி கொள்ளையடிப்பது என்று சொல்லாமல் புதியப் புதிய பொருளாதரக் கொள்கைகளாக பேச வைப்பார்கள்! 
 காலனி ஆதிக்கத்தில் என்ன நடந்த தோ அதுவே 
இப்போதும் நடக்கிறது. அப்போது சுரண்டியவன் 
அடுத்த நாட்டுக்காரன். ஆங்கிலேய அரசு. 
இப்போது சுரண்டுபவன் நம்ம நாட்டுக்காரன்,
 நாம் தேர்ந்தெடுத்த அரசு.. 

 விவசாயிகள் போராட்டமாக இதைச் சுருக்கிவிட வேண்டாம். 
 இது எல்லோருக்குமான இருத்தலுக்கான வாழ்க்கைக்கான போராட்டமாகிவிட்டது.

No comments:

Post a Comment