Tuesday, October 20, 2020

மன விகாரத்தின் மூத்திர நெடி





ஆணின் அது என்ன அதிகாரத்தின் குறியீடா..
இச்சமூகத்தின் இந்த மன நிலை..
கேவலமாக இருக்கிறது..
அருவெறுப்பா இருக்குடா…
விஜய் சேதுபதி மகளிடம் எதைக்
கண்டாயோ அது உன் மகளிடமும்
இருக்கிறது தானே.
எப்படிடா… நீ எல்லாம் தலை நிமிர்ந்து
உன் மகளை உன் மனைவியை
உன்னைப் பெற்றவளை
உன் அக்கா தங்கையைப் பார்ப்பாய்…?
அவர்கள் இனி தெருவில் இறங்கிப் போனால்
பார்க்கும் கண்கள் ..
“ஓ..இப்படி சொன்னானே அவனோட
அம்மா, அவனோட பொண்டாட்டி,
அவனோட பொண்ணுனு இந்த ஊரும்
உலகமும் பார்க்குமேடா..
அதில ரெண்டு மூணு பேரும் உன்னை மாதிரியும்
இருப்பாங்கடா.. பாவி..
நீ எல்லாம் இச்சமூகத்தின் பால்வினை வியாதி.
மனவிகாரத்தின் மூத்திர நெடி..
கப்புனு அடிக்குடா..
பாவி ..
உன்னைப் பெத்தவளை நினைச்சு
உன்னோட படுத்தவளை நினைச்சி
மனசு பதறுதுடா…
போங்கடா.. நீங்களும் உஙக .....ம்ம்
Parimelazhag

3 comments:

  1. சிறப்பு தெறிக்கவிட்ட நெருப்பு

    ReplyDelete
  2. தேர்ந்தெடுத்த சொற்கள்!

    உண்மையில் துவிட்டரில் அந்த இழிபதிவைப் பார்த்ததும் மிகவும் அதிர்ந்து போனேன். பெண்களைப் பற்றி இப்படித் தரக்குறைவாக எழுதுபவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு குழந்தையை - அதுவும் குழந்தை எனச் சொல்லியே அவன் எழுதியிருக்கும் சொற்கள் நம் சமுகத்தின் மனநிலை எந்த அளவுக்குச் சீழ் பிடித்துப் போயிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

    தவிர, இந்த இழிபதிவு முத்தையா முரளிதரன் படத்தில் நடிக்க வேண்டா என்று விசய் சேதுபதிக்கு அழுத்தம் கொடுத்த தமிழ் உணர்வாளர்கள் தரப்பிலிருந்து எழுதுவது போன்ற சொற்களால் பதிவு செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள், இன உணர்வாளர்கள் அனைவரும் இப்படித்தான் போலும் எனும் ஒரு பழித் தோற்றத்தை உருவாக்கும் முயற்சியோ என்றும் தோன்றுகிறது.

    ReplyDelete
  3. உண்மை தோழர் அசிங்கம் பிடித்தவர்களாக ஆணாக பிறந்துவிட்ட ஒரே காரணத்தால் ..எவ்வளவு ஆணவம்..அந்த அசிங்கத்தை பெற்றவளும் பெண் தானே

    ReplyDelete