Tuesday, October 13, 2020

திராவிடம் என்பது அரசியல் சொல்லாடலா ?

  திராவிட "என்பது அரசியல் சொல்லாடல் மட்டும் தானா?

" சாதிகள் இல்லையடி பாப்பா" பாடபேதமா?!!
ஒரு புத்தகத்தை வாசித்தவுடன் அதை எழுதிய எழுத்தாளரைத் தொடர்பு கொண்டு நான் பேசுவது என்பதெல்லாம் அரிதுதான். ஆனாலும் நேற்று
அந்த அரிதினும் அரிதான செயலைச் செய்ய வைத்துவிட்ட து தோழர் பாட்டாளி அவர்களின் புத்தகம் “ திராவிட நாடும் தேசிய இன விடுதலையும்”
ஒரு பரந்துபட்ட வாசிப்பும் அரசியல் விமர்சனமும் கொண்ட பாட்டாளி போன்ற தோழர்களால் தான் இம்மாதிரியான கருத்தாக்கங்களை
முன்வைக்க முடியும்.
திராவிடம் இருக்கிறதா .. இல்லையா..?
இருந்தப் போதும் அதில் திராவிடம் இருந்த தா இல்லையா?
என்ற விசாரணையில் ஆரம்பித்து .. தமிழகச் சூழலில் நிகழ்ந்த பல்வேறு செயல்களையும் ரகசியக் கூட்டங்களையும் வெளிச்சப் படுத்தி இருக்கிறது இப்புத்தகம்.
அரசியல் அன்றும் இன்றும் சதுரங்க ஆட்டம் தான்.
காய்களை நகர்த்தி வீர்ர்களை வீழ்த்தி அதிகாரம் என்ற ராணியைக் கைப்பற்றுவதில் எத்தனை விதம் விதமான போராட்ட உத்திகள்!
திரைமறைவில் கதாநாயகர்கள் கூட வில்லங்களாக தான் விளையாண்டிருக்கிறார்கள்.
காய் நகர்த்தி ஆடிய ஆட்ட த்தில் திராவிடம் என்பது ஒரு அரசியல் குறியீடாகி.. அதுவும் பிற்காலத்தில் தேசிய முற்போக்கு திராவிடமாகும் போது ..
எந்த தேசியத்தில் எந்த திராவிடம்?
என்ற முரணை மிகத் தெளிவாக
முன்வைக்கிறது.
திராவிடம் என்ற சொல் அதன் அர்த்தப்பாடுகளை இழந்துவிட்ட பிறகும் அதை உதிர்த்து விடாமல் தொடர்ந்து வைத்திருப்பதன் காரணத்தையும்
திராவிடம் உதிர்ந்தப் பின் எஞ்சி நிற்பது தமிழர் தமிழ் நாடு மட்டும் தான் என்பதையும் பாட்டாளி பல்வேறு விமர்சனங்களுடன் அலசி ஆராய்ந்து
பார்க்கிறார்.
திராவிடம் என்பதுடன் ஓரளவு தொடர்புடைய நேரு
கொண்டுவர நினைத்த “தட்சணப்பிரதேசம் “ கொள்கையை பெரியார் ஏன் முழுமூச்சுடன் எதிர்த்தார் என்பதை பாட்டாளி அவர்கள் ஒரு செய்தியாக சொல்லிச் சென்றாலும் இன்றையஅரசியலுடன் பொருத்திப்பார்க்கும் போது பெரியார் தமிழர்களுக்கு
செய்த மிகப்பெரிய உதவி , இதுதான்.. தட்சிணப்பிரதேசம் செயல்பாட்டில் வந்திருந்தால்..! அப்படி ஒன்று நடந்திருக்குமென்றால் ..?
தமிழன் இன்று என்னவாக இருந்திருப்பான்?
இந்த மிக முக்கியமான புள்ளியை திராவிட மேடைகளோ அல்லது திராவிட சிந்தனையாளர்களோ ஏன் பேசுவதில்லை?
(பாவம்.. அவர்களுக்கு துதிப்பாடவே மேடைகள் கொடுக்கப்படுகின்றன என்பதால்.. மன்னித்துவிடலாம்!)
நம் அரசியலமைப்பு இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் (Union of States) என்று தான் சொல்லுகிறது. மைய அரசு, மத்திய அரசு,
நடுவண் அரசு..என்று நாம் தான் இந்திய அரசியலமைப்பு சட்டம்
சொல்லாத ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கிறோம். !
மா நிலங்கள் என்ற சொல்லாடல் கூட எவ்வளவு கேலிக்குரியது!
தமிழக அரசு, கேரள அரசு என்று தான் சொல்ல வேண்டும். அவை மா நில அரசுகள் அல்ல அவை தனியான அரசுகள் என்றஅரசியலைப்பு சொன்னதை வேண்டுமென்றே திசைத்திருப்பி இல்லாத
சொல்லாடலை உருவாக்கி இந்தியா ஒற்றை தேசக் கருத்தாடலைகொண்டு வந்திருக்கிறோம் என்பதை புரிய வைக்கிறார் பாட்டாளி.
பாரதியாரின் புகழ்ப்பெற்ற பாடல் வரிகளான
“சாதிகள் இல்லையடி பாப்பா” என்பதையும் பாடபேதம் என்று போட்டு உடைக்கிறார் பாட்டாளி. ஒரு சாதிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டு
சாதியக் கொடுமைகளைக் கண்முன்னே கண்டு கொதித்து எழுந்து, எதிர்த்து எழுதிய பாரதி, இப்படி முழுப்பொய்யை சொல்லி இருப்பாரா?!
என்று கேட்கிறார். பாரதி எழுதியது..
“சாதிப் பெருமையில்லை பாப்பா
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”
என்று நமக்கு ஏற்றுக்கொள்கிற மாதிரி ஒரு கருத்தை பாட்டாளி பதிவு செய்திருக்கிறார் . (ஆதாரம் என்ன என்பதை பாட்டாளி தெளிவுப்படுத்தவில்லை !)
ஆரியர் என்று சங்க இலக்கியத்தில் சுட்டப்படும் அதே ஆரியர்கள் தானா இன்று நாம் பேசும் திராவிட எதிர் நிலையில் வைக்கும் ஆரியர்கள்?
குறுந்தொகையில் ஆரியர் என்றால் கழைக்கூத்தாடிகள் என்ற குறிப்பு இருக்கிறது (பக் 59)
அக நானூறு பாடலோ ஆரியர் என்றால் பெண் யானையைக் கொண்டு ஆண் யானையைப் பழக்குபவர்கள் என்று சொல்கிறது?
நாம் புரோகிதப்பிரிவு ஆரியர்களை மட்டுமே ஆரியர்களாகஇன்று முன்வைக்கிறோம் என்பதையும் திராவிட என்ற சொல்லாடல் ஏன் சங்க இலக்கியத்தில் இல்லை என்பதையும் பல்வேறு சான்றுகளுடன் முன்வைக்கிறார் பாட்டாளி.
பாட்டாளி அவர்கள் வைத்திருக்கும் ஒரு சில தரவுகளுடன்...
எனக்கு சில கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. குறிப்பாக 1963 ல்
நேரு கொண்டுவந்த அரசியல் திருத்த சட்டம் 16.
பாட்டாளி அவர்கள் சொல்வது போல பிரிவினைக் கோரும் அமைப்புகளுக்கு தான் தடை, இயக்கத்திற்கு அல்ல என்று குறிப்பிடுவது
மீள்வாசிப்புகுரியது. பார்க்க :
மேலும் பக். 132ல் நீதிக்கட்சியின் முக்கியமான பங்களிப்பை குறிப்பிடும் போது அதன் பஞ்சமர் , பறையர் என்ற இழிசொல் மாற்றப்பட்டு ஆதிதிராவிட என்ற ஆணைப்பிறப்பிக்கப்பட்ட
தகவலில் சி நடேசனார் மற்றும் பனகல் அரசரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன. மிக முக்கியமான செயல்பாட்டாளாரான
காரணமாக இருந்த எம். சி ராஜாவின் பெயர் விடுபட்டிருக்கிறது.
1918ல் ஆதிதிராவிட மகாஜன சபா அரசாங்கத்திற்கு ஒரு மனு கொடுத்தது.
பறையர் என்கிற பெயருக்குப் பதிலாக தொன்றுதொட்டு நிலவி வருவதும்
தங்களுக்கு உரிய பெயருமாகிய 'திராவிடர் ' என்கிற பெயரால் தாங்கள் அழைக்கப்பட வேண்டும் என்றும் அப்பெயரை அரசும் அங்கீகரிக்க வேண்டும்"
என்றும் கோரிக்கை வைத்தனர்.
அக்கோரிக்கையின் நீதிக்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்ட ஒடுக்கப்பட்ட
மக்கள் அமைப்பின் பிரதிநிதியான எம்.சி. ராஜ் அவர்கள் சென்னை மாகாண
சட்ட சபையில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். நீதிக்கட்சியும் அத்தீர்மானத்தை நிறைவேற்றியது.
மேற்கண்ட இரு கருத்துகளையும் குறிப்பிடாமல் நானும் விலகிச்செல்வது வரலாற்று பிழைகளை மவுனமாக ஏற்றுக்கொள்வதாகவே
இருக்கும் என்பதை பாட்டாளி அவர்களும் அறிவார்.
பாட்டாளியின் கட்டுரை வரிகளுக்கு நடுவில் வெளிப்படையாக சொல்லாமல் பொதிந்திருக்கும் செய்திகள் சுவையானவை. அரசியல்
விமர்சகர்களுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் தேவையானவை. அதையும் சேர்த்து வாசிக்க வேண்டியது ஒரு தேர்ந்த வாசகனின்
திறமை.. !
சமகால திராவிட என்ற அரசியல் சொல்லாடலை
மேற்கத்திய நாடுகளின் ஆய்வார்கள் முதல் சங்க இலக்கியம் தமிழக அரசியல் காட்சிகளின் ஊடாக பயணித்து தேசிய இன அடையாளத்தை விளக்கி பல்வேறு சான்றுகளுடன் பதிவு செய்திருக்கும் பாட்டாளி.. சமகால அரசியலை அறிவாயுதம்
ஏந்தி அணுகும் முறை பாராட்டுதலுக்குரியது.
தோழர் பாட்டாளி அவர்களுக்கு வாழ்த்துகளுடன்…
Image may contain: 4 people, text that says "திராவிட நாடும் தேசிய இன விடுதலையும் பாட்டாளி"
2
and 1 othe

Puthiyamaadhavi Sankaran
 updated her profile picture.

S11 issOncttoStoeudbeptnr atcu lfo1hn2gssor:oe

No comments:

Post a Comment