Thursday, October 15, 2020

சாஹித்திய அகாதமி SAKITYA AKADEMY

 சாகித்திய அகாதமி.. எப்படி செயல்படுகிறது?

ஒவ்வொரு ஆண்டும் படைப்பிலக்கியம் மற்ற

மொழியாக்கத்திற்கு விருதுகள் அறிவிக்கப்ப

பின் முன்பெல்லாம் ஒரு சலசலப்பு ஏற்படும்.

விருது யாருக்கு கொடுக்கப்பட்ட தோ அவரைப்பற்றி அவர் பிறப்புச் சான்றிதழ் பற்றி இந்த விருது இந்த ஆண்டு கொடுக்கப்பட்ட தற்கு

“இட ஒதுக்கீடு” காரணமா என்ற அளவுக்கு

மயிர்ப்பிளக்கும் விவாதங்கள் நடந்திருக்கின்றன.

மேலும் இதில் காரசாரமாக விவாதம் செய்தவர்களின் வாயை அடைக்க அவருக்கே

விருது கொடுத்து.. அவரும் இப்போதெல்லாம் அதைப் பற்றி பேசுவதில்லை.

இதைவிட இன்னொரு கொடுமை.. சில படைப்பிலக்கியவாதிகளுக்கு அவர்கள் செய்த மொழிபெயர்ப்புக்காக விருது கொடுப்பார்கள்.. அப்போது அவரும் வேறு வழியில்லாமல் அதை ஏற்கும் பரிதாபக்காட்சிகளும் உண்டு. 

இன்னும் சில காமெடிகள் அரங்கேறுகின்றன.பாரதிதாசனுக்கு பிசிராந்தையார் எழுதியதற்கு கொடுத்த விருது மாதிரி..!

 

தமிழ் இலக்கிய சூழலில் ஒரு எழுத்தாளர் சாகித்திய அகாதமி விருது பெற்றுவிட்டால் அதன் பின் அவரைப் பற்றி எழுதும் போதும் அச்சிடும் போதும்அழைப்பிதழ் முதல் மேடைகள் வரை “சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் “ என்று அழைப்பது கட்டாயமான மரபாகிவிடுகிறது. நான் அறிந்த வரை வேறு எந்த மொழி இலக்கிய வட்ட த்திலும் இம்மாதிரியான ஓர் அடையாளத்தை மரபாக்கியதாக தெரியவில்லை. சாகித்திய அகாதமி

விருது என்பது அந்த எழுத்தாளரின் சுய அறிமுகத்தில் கடைசிவரியாக இருக்கும். அவ்வளவுதான்.இதை எல்லாம் கவனிக்கும் போதுதமிழ் இலக்கியப் பரப்பில் இதற்கான மவுசு ரொம்பவே அதிகம்தான்.

இனி, மக்கள் வரிப்பணத்தால் இயங்கும் தன்னாட்சிபெற்ற சாகித்திய அகாதமி எப்படி செயல்படுகிறது?

ஒவ்வொருஆண்டும் விருதுக்கு பரிந்துரை செய்பவர்கள் யார்?

புத்தகங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற என்ன தகுதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது? 

ஒரு புத்தகம்/ படைப்பாளர் விருதுக்குரியவராகதேர்வு செய்யப்பட்ட பின் அதற்கான காரணத்தையும்பிற படைப்புகளை விட அக்குறிப்பிட்ட புத்தகம்/படைப்பாளர் தேர்வு செய்யப்பட்ட தற்கான

காரணத்தையும் ஒரு வெள்ளை அறிக்கையாகஒளிவு மறைவின்றி சாகித்திய அகாதெமி வெளீயிடுமா?அப்படி வெளியிட்டால் தானே போட்டிக்கு இருந்தவ வரிசையில் குறிப்பிட்ட ஒரு படைப்பு தேர்வு செய்யப்பட்ட தற்கான நியாயங்கள் வெளிப்படும்!


விருதுகள் முக்கியமா என்று கேட்டால்

முக்கியமில்லை தான். ஆனால் அந்த விருது

யாருக்கு கொடுக்கப்படுகிறதோ அவரை வைத்துக்கொண்டு அவருடைய படைப்புகளைவைத்துக்கொண்டு தான் 2000 ஆண்டுகால செம்மொழியாம் தமிழ்மொழியின் இன்றைய இலக்கியமுகம் வெளியுலகத்திற்கு அறிமுகமாகிறது.

இந்த விருது தேர்வு மட்டுமல்ல,சாகித்திய டன் அகாதமி குழுவில்  நியமிக்கப்பட்டிருக்கும்

சிறப்பானவர்களை நியமிப்பது யார்?

எந்த அடிப்படையில் அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்?

இதுவும் தெரிந்து கொண்டால் இந்தக் குழுவில்இடம் பிடித்து எதோ என்னால் முடிந்ததை

செய்துவிட … .

No comments:

Post a Comment