Wednesday, October 23, 2019

சிவசேனாவின் அரசியல் முகம் மாறுகிறதா

Image result for shiv sena saamna
மா நில அரசியலில் சிவசேனா
சிவசேனாவின் முகம் மாறுகிறது..
இப்பதிவை தேர்தல் நேரத்தில் எழுத விரும்பவில்லை.
இன்று தேர்தல் முடிவுகள் வரும். அதன் பின் எழுதுவதும் 
சரியல்ல. இதோ இதுதான் தருணம்.
சிவசேனாவின் முகம் மாறுகிறது.
தன்னை வலுவான மா நில கட்சியாக மட்டுமல்ல
மா நில உரிமைகளை எதற்காகவும் விட்டுக்கொடுக்க
மாட்டோம் என்ற அரசியலை தன் செயல்பாடுகளில்
வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
மா நில சுயாட்சி என்று பேசியவர்கள் நாம்.
நம்மவர்கள் இன்று சிவசேனா காய் நகர்த்தும்
வித்தையைக் கவனிக்க வேண்டியவர்களாக
இருப்பதும் மொழியுணர்வை அவர்கள் கையாளும்
அரசியலும் கவனிக்கத்தக்கவை.

அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தில் பிஜேபி
சொன்னது.. “மராட்டிய மா நிலத்தில் எங்களுடன்
போட்டியிட யாருமில்லை ! “ 
பிஜேபியுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனாவுக்கு 
இது எரிச்சலை ஏற்படுத்தியது. 
பிஜேபி இப்படி சொல்வதன் பின்னால் இருக்கும் 
அரசியலை மிகவும் சரியாக அடையாளம்
 கண்டு கொண்ட து சிவசேனா. அதனால் தான் மறு நாளே
 தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் போதே....
சிவசேனாவின் சாம்னா பத்திரிகை எழுதுகிறது.
“ மராட்டிய மா நிலத்தில் பிஜேபிக்கு எதிர்க்கட்சியே
 இல்லை என்றால் எதற்காக பிரதமர் மோதியும்
 அமித்ஷாவும் வந்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள்?”
அத்துடன் தங்கள் மா நிலத்தில் அரசியல் நட த்திய
 சரத்பவார் நடுவண் அரசியலுக்குப் போனது தவறு, 
என்பதையும் இப்போதும் சொல்கிறது சாம்னா.
இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளே இல்லாமல்
பிஜேபி ஆட்சியை அமைக்கும் திட்ட த்தில்
பிஜேபி கூட்டணியில் இருந்து கொண்டே
அடிக்கடி தன் பிடரியை சிலிர்த்துக் கொண்டு
உறுமிப் பார்க்கிறது சிவசேனா.
நேற்றுவரை சிவசேனாவின் பால்தாக்கரே குடும்பம்
தேர்தலில் நிற்கவில்லை. ரிமோட்கண்ரோல் ஆட்சி
என்று சொன்னார் பால்தாக்கரே. ஆனால் இன்று
அவருடைய பேரன் ஆதித் திய தாக்கரே அரசியல்
தேர்தல் களத்தில் நேரடியாக வந்துவிட்டார்.
கட்டாயமாக வெற்றியும் பெறுவார்.
அதன் பின் நடக்கும் அதிகாரப்பகிர்வு போட்டியில்
சிவசேனாவின் உறுமல் தொடருமா
அல்லது சர்க்கஸ் கூடாரத்திற்குள் அடைப்பட்டுவிட்ட
நிலை ஏற்படுமா? 
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கூட்டணிக்குள் இப்படியும் இருக்க முடியும் என்பதற்கு
சிவசேனாவும் சிவசேனாவின் சாம்னாவும்
 ஒரு வித்தியாசமான தேவையான அரசியலை
 மிகவும் நுணுக்கமாக கையாளுகின்றன.

எனக்கு சிவசேனாவுடன் பல கருத்து வேற்பாடுகள்
உண்டுதான். ஆனால்
 இந்த ஆட்டம்.. தொடர வேண்டும் 
என்று நானும் விரும்புகிறேன்.

No comments:

Post a Comment