Wednesday, February 6, 2019

நன்றி ஓ ஹென்றி


 நன்றி.. ஓ ..ஹென்றி..
ஹென்றி பழைய பக்கம் தான் என்றாலும்
புத்தகமாக கையில் கிடைக்கும் போது
ஒரு தனி சந்தோஷம் வரத்தான் செய்கிறது.
நன்றி ஓ ஹென்றி..

பெண்ணியம் பேசுகிறேன் பேர்வழி என்று
சொல்லிக்கொண்டு சொற்களை மட்டுமே
திருடி தின்று அதுவும் செரிக்காமல் வாந்தி
எடுக்கும் எல்லாமும் இப்போதெல்லாம்
மிகுந்த ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
  நல்லவேளை ஓ ஹென்றி அப்படியல்ல.
தீபாவளிக்கு பஜாரில் புதுசு புதுசாக
கடைகள் முளைத்துவிடுகின்றன.
இந்தக் காட்சி ஒவ்வொரு ஆண்டும்
எல்லோருக்கும் இன்றுவரை காணக்கிடைக்கும்
காட்சி தான். நம்ம ஹென்றிக்கு மட்டும்
“அகலமான பஜார் தெருவே கோமண
சைசுக்கு ஆகிவிட்ட து” என்று  சொல்லத்
தெரிகிறது. கோமணத்தை அறியாதவர்
யார்?!! ஆனாலும் பஜார் கோமண சைசுக்கு
ஆவதைக் கவனிப்பவர் யார்! இதை ஒரு
பெண் எழுத முடியாது. அவளுக்கு கோமணம்
எல்லாம் நினைவுக்கு வருமா ..? எனக்கு
சந்தேகமா தான் இருக்கு. அவளுக்கு வேறு
எதாவது நினைவுக்கு வந்து தொலைக்கலாம்.
ஆனாலும் ஹென்றி.. தன் பார்வையில்
தனித்து நிற்கும் இடம் இது தான்.
நல்லாவே இருக்கு ஹென்றி..

இனி…
ஹென்றியைப் பற்றி நான் எப்போதும்
சொல்ல வேண்டும் என்று  நினைத்து
சொல்லாமல் இருக்கும் இன்னொரு கதை..
ஹென்றியின் கதைகளை விட ரொம்பவும்
சுவராஸ்யமானது…
ஹென்றி அவர் வீட்டு உறவினர் திருமணத்தில்
கலந்து கொள்ள மும்பை வந்திருந்தார்..
எங்களை அழைத்தார். 
(என்னுடன் கே ஆர் மணி மற்றும் மதி)
 ஓ ஹென்றி.. நாங்கள்
எப்படி வரமுடியும் உங்கள் உறவினர் வீட்டு
திருமணத்திற்கு? என்று நாங்களும் கேட்கவில்லை!
அப்படியான எதுவும் இல்லாமல் (சொல்லப்போனால்
வெட்கமில்லாமல்..!) நாங்கள் ஹென்றியைச்
சந்திக்கப் புறப்பட்டு விட்டோம். எங்களைப்
பார்த்த தில் ஹென்றிக்கும் ஏக க் கொண்டாட்டம்!
மாடியில் திருமண வீட்டாரின் சடங்குகள்
நடந்து கொண்டிருந்தன. நாங்கள் ஹாலில்
அதாவது டைனிங்க்  ஹாலில்.. ஒதுக்குப்புறமாக
இட த்தைப் பிடித்து உட்கார்ந்துவிட்டோம்.
ஹென்றி பெண் வீட்டுக்கார ரா?
மாப்பிள்ளை வீட்டுக்கார ரா?
எங்களுக்குத் தெரியாது.
ஆனால் சென்னையிலிருந்து திருமணத்திற்கு
குடும்பத்துடன் வந்திருக்கும் முக்கியமானவர்
என்பது மட்டும் புரிந்த து.
டைனிங்க் ஹாலில் பரிமாறுபவர்கள் எங்களுக்குச்
சூடான காஃபி, பஜ்ஜி, கேசரி, வடை என்று
பரிமாறிக்கொண்டே இருந்தார்கள்…
பஜ்ஜி கேசரிக்கு ஏற்ற மாதிரி எங்கள்
இலக்கியமும் தன் வாசலைத் திறந்து கொண்டு
வெள்ளமென பாய்ந்து ஓடிக்கொண்டிருந்த து.
ஹென்றி… ரொம்பவும் மூடில் இருந்தார்.
அப்போது… ரொம்பவும் வெள்ளந்தியாக
அவரிடம் கேட்டு வைத்தேன்..
ஓ ஹென்றி… இதெல்லாம் இருக்கட்டும்..
நம்ம பாட்டிகளுக்கும் இப்படியான
நிறைய காதல் இருந்திருக்குமா?!!! “ என்று.
ஹென்றிக்கு இன்னும் உற்சாகம் அதிகமாகி
விட்ட து. பாட்டியிடம் இதை எல்லாம் நாம்
பேசுவதில்லை. பேசிப் பாருங்கள்.. இன்றைய
பெண்ணியத்தை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு
விடுவார்கள் நம் பாட்டிகள் “ என்றார்.
ஹென்றி இப்படி சொன்னாலும் சொன்னார்..
எனக்கு அப்போதே எந்தப் பாட்டியிடம்
எதைக் கேட்கலாம் என்ற எண்ணம் வந்த து.
ஸ்கூல் , கல்லூரி, ஏன் ஆபிஸ் போகும் போது கூட
அடிக்கடி பாட்டிகளை சாவடித்து லீவு கேட்ட
 நான் என் பாட்டிகளின் மறைவுக்காக முதன்
முதலாக உண்மையாகவே வருத்தப்பட்டேன்
என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..

இப்படியாக நான் பாட்டிகளைத் தேட
ஆரம்பித் த்தில் ஹென்றி தான் எனக்கு
 குருவாக இருந்தார்…
அப்படி ஒரு பாட்டியை.. அதுவும் என்
மகளின் திருமணத்தில் சந்தித்தேன்.
அந்தப் பாட்டியிடம் போய் கதை எல்லாம்
கேட்கவில்லை. ஆனாலும் அந்தப் பாட்டி
செய்த சில விளையாட்டுகள் பாட்டியின்
கதையை என் புனைவுகளுக்குள் கொண்டுவந்த து.
இப்படியாகத் தான்
“பாட்டி என்ன சொல்லி விட்டாள்?!”
என்ற சிறுகதையை எழுதினேன்.
இந்தக் கதையை ஹென்றியிடம் சொல்ல
வேண்டும் என்று  நினைத்தேன்.
நன்றி ஓ ஹென்றி..

டியர்.. ஹென்றி..
மும்பையில் இருக்கும் உறவினர் வீட்டு
விசேஷங்களுக்கு .. இப்போதெல்லாம்
வருவதில்லையா என்ன..
ஹென்றியுடன் கதைப் பேசுவதும்
கதைக் கேட்பதும் சுவராஸ்யமான அனுபவம்.
  நன்றி.. ஓ.. ஹென்றி..
(எழுத்தாளர் எஸ். சங்கர நாராயணன் அவர்களுக்கு
நன்றியுடன்.. )




No comments:

Post a Comment