Sunday, February 3, 2019

கலாச்சார இந்துவும் இன்றைய அரசியலும்


"கலாச்சார இந்து"
இந்த அடையாளம் நேருவுக்கு தேவைப்படவில்லை.
ஆனால் ராகுல்காந்திக்கு தேவைப்படுகிறது.
ராகுல் ஜி தன்னை கலாச்சார இந்து என்று
சொல்லிக்கொள்ளலாம்.. நன்றி ஜெ.மோ.
I am English by education, Muslim by culture
 and Hindu merely by accident,”
(JUST BORN AS A HINDU BY ACCIDENT)

நேரு தன்னைப் பற்றி இப்படி 
சொல்லிக்கொண்ட தாக பிஜேபியின்
ஐ.டி. துறை அமித் மாளவியா 2015ல்
தன் டுவிட்டரில் டுவிட்டினார்!
இந்த டுவிட்டல் வைரஸாக பரவியது.
அதன் பின் 2018 செப்டம்பரில் பிஜேபி
சார்பாக பேசியவரும் - ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சியில் 
இதே வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார்.
ஆனால் நேரு எங்கே இதைப் பேசினார்,
எந்த இட த்தில் என்றெல்லாம் இவர்கள்
சொல்லவில்லை. அது அவர்களின்
நோக்கமும் அல்ல. 

நேரு குடும்பத்தைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம்

பி ஆர் ந ந்தா எழுதியது. மோதிலால் & ஜவஹர்லால்,
அப்புத்தகத்தில் இந்து மகாசபை தலைவர்
என் பி காரே நேருவைப் பற்றி சொன்ன விமர்சன
வரிகள் தான் மேற்கண்ட வரிகள். நேரு எவ்விட த்தும்
தன்னைப் பற்றி இப்படிசொல்லிக்கொள்ள வில்லை!!

இனி, அண்மையில் வாசித்த இன்னொரு புத்தகம்

ஜெயமோகன் எழுதிய “கலாச்சார இந்து”.
அப்புத்தகத்திலும் பக் 28 & 29 ல் நேருவைப் பற்றிய
இன்னொரு கருத்து வைக்கப்படுகிறது.

“ என் நினைவு சரி என்றால் கலாச்சார இந்து

என்ற சொல்லாட்சியை நான் நேருவின் எழுத்துகளில்
வாசித்திருக்கிறேன்” என் கிறார் ஜெ.மோ.
அவரும் அதற்கான எந்த தரவுகளையும் கொடுக்கவில்லை.
மேலும், ஜெ.மோ அவர்கள் 
“நேரு தன்னை நாத்திகர் என்று உணர்ந்தவர்.
அவர் நாத்திகம் என்பது ஐரோப்பிய தாராளவாதச்
சிந்தனகளில் பின்புலம் கொண்ட து……..
ஆனால் இந்தியப் பண்பாட்டின் துளியாகவே
நேரு எப்போதும் தன்னை உணர்ந்தார். இந்தியப்
பண்பாட்டின் த த்துவச் சிந்தனைகள். அழகியல்,
உணர்வு நிலைகள் ஆகியவற்றுடன் அவர் பின்னிப்
பிணைந்திருந்தார். அவை அடிப்படையில் இந்துப்
பாரம்பரியம் சார்ந்தவை என்றும் அவர் அறிந்திருந்தார்.
அவற்றை நிராகரிக்க தன்னால் முடியாது என அவர்
உணர்ந்தார்.
அதன் பொருட்டு அவர் கண்ட டைந்த அடையாளமே
கலாச்சார இந்து என்பது…”

என்று ஜெ.மோ நேருவை
 ஒரு கலாச்சார இந்துவாக வடிவமைக்கிறார்.
நேரு எவ்விட த்திலும் தன்னை ஒரு கலாச்சார
இந்து என்று பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லை.
( அப்படி சொல்லி இருந்தால் தெரியப்படுத்துங்கள்
தோழர்களே.. ) 
ஆனால் இந்துமத த்தின் எந்த ஆசாரங்களையும் 
பின்பற்றாதவன் ஒரு கலாச்சார இந்து
 என்ற முடிவுக்கு வருவோம் என்றால் 
நேரு கலாச்சார இந்து தான்..!
அதில் ஐயமில்லை.
மேலும்
இந்திரகாந்தியின் இளைய ம ருமகள், அவர்
கணவர் சஞ்சய்காந்தியின் அகால மரணத்திற்குப்
பின் (சொத்து வழக்கு என்று நினைக்கிறேன்) 
நீதிமன்றத்தில் இந்திராகாந்தி இந்துவல்ல
 என்று வழக்குத் தொடுத்தார்.
ஆனால் அதை விசாரித்த நீதிபதி 
1942ல் இந்திரா-பெரோஸ் திருமணப் புகைப்பட த்தை
 ஆதாரமாக கொண்டு இந்திராவின் திருமணம் 
இந்து முறைப்படி நடைபெற்ற திருமணம் 
என்று முடிவு செய்தார். அப்படியானால்
நேரு தன் மகளுக்கு இந்து முறைப்படி தான்
 திருமணம் செய்தார் என்பதும் உறுதி ஆகிறது.
இப்படியாக நேரு கலாச்சார இந்து என்று தன்னை
அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும்
கலாச்சார இந்துவாகவே இருந்தார் என்ற முடிவுக்கு
வரலாம். …
எனவே… இதனால் சொல்ல வருவது என்னவென்றால்…
காங்கிரசுக்கார ர்கள் அதிலும் குறிப்பாக
ராகுல் ஜி இனிமேல் சட்டையைத் தூக்கிக்
காட்ட வேண்டாம். நான் ஒரு கலாச்சார இந்து
என்று உரக்கச் சொல்லிக்கொள்ளலாம்.
சொல்ல வேண்டும். 

ஜெ.மோ.. ராகுல் ஜிக்காக இதை எழுதவில்லை
என்றாலும் ராகுல் ஜிக்கு “கலாச்சார இந்து”
என்ற அடையாளம் ஓட்டு அரசியலுக்கு
ரொம்பவும் வசதியாக இருக்கும்.

#cultural_hindu
#Rahul_gandhi


No comments:

Post a Comment