Saturday, February 9, 2019

சுதா மூர்த்தி

சுதா மூர்த்தி
Image result for sudha murthy

இந்தப் பெண் எனக்கு மிகவும் நெருக்கமானவள்.
இன்றுவரை இப்பெண்ணை நான் சந்திக்கவில்லை.
சந்திக்க வேண்டும் என்றெல்லாம் பெரிதாக
எதுவும் முயற்சிக்கவும் இல்லை!
சுதா எழுதியதை எல்லாம் கொண்டாடுகின்றேனா
என்று கேட்டால்… இல்லை என்பது தான் என் பதிலாக
இருக்கும். ஆனால் சுதாவை நான் கவனிக்கிறேன்.
கவனித்துக் கொண்டே இருக்கிறேன்…
பொதுவாக விலை உயர்ந்த ஆடை அணிகலன் கள்
நான் விரும்புவதில்லை.
சுதாவும் அப்படித்தான் என்று அறிந்தப்பின்
சுதாவை ரொம்பவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேனா
தெரியவில்லை!
எனக்குள் சுதாவைக் கண்டேனா என்பதும்
இன்னும் புரியாத புள்ளி தான்.
சுதாவின் வாழ்க்கையில் அந்த ஆரம்பம் 
எனக்குப் பிடித்திருக்கலாம்..
டாடா மோட்டார்ஸ் வேலைக்கான தகுதியில்
 “ஆண்கள் மட்டும்”என்று விளம்பரம் வருகிறது. 
( LADY CANDITATE NEED NOT APPLY )
சுதா அதை வாசிக்கிறார். ஓர் அஞ்சல்
அட்டையில் டாடாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். 
டாடாவிடமும் அக்கடிதம் போய் சேர்ந்துவிடுகிறது.. 
டாடா சுதாவை அழைக்கிறார்.
அவருக்கான நேர்காணல்.. 
டாடா மோட்டார்ஸ்சில் சுதா என்ற பெண்ணும்
 நியமிக்கப்படுகிறாள்…
இப்படியாக ஆரம்பிக்கும் சுதாவின் வாழ்க்கையில்
மூர்த்தியுடனான அவர் காதல்…
மூர்த்தி யின் இன்றைய இன்போஷிஸ் 
அன்று புனாவில் தொடங்கப்பட்ட போது
 சுதாவின் உழைப்பு
சுதா…
எனக்கு இப்போது ஆண் பெண் உறவு நிலையில்
பெண்ணின் சமபங்கினை எப்படி கொடுக்க வேண்டும்
 என்று சொல்லாமல் சொல்கிறார்.
அதே சுதா … கண்வன் மனைவி இருவரும் 
ஒரே நிறுவனத்தில் இருப்பதா என்ற நிலையில்
 மூர்த்திக்காக மூர்த்தியின் கனவுலக
இன்போஷிசை விட்டு வெளியில் வருகிறார்.
இன்போஷிஸ் மூர்த்திக்கு மட்டும் தான் கனவா?
சுதாவுக்கு…?
இதை அறிய வரும் போது துடித்துப் போகிறேன் நான்..
பெண்களுக்கு சுதாவின் இந்த முடிவு
ஒரு தவறான முன் உதாரணமாகிவிட்ட்தே
என்று கவலைப்பட்டிருக்கிறேன்…
..
ஆனால்.. சுதா தன்னை இழந்துவிடவில்லை.

“மூர்த்தியின் விசுவரூபத்திற்கு முன்னால்
 நான் தொலைந்துப் போய்விட்டேனா?
ந் நோ. நான் மூர்த்தியின் மனைவியாக இருக்கலாம்,
 என் குழந்தைகளுக்குத் தாயாக இருக்கலாம், 
இன்போஷிஸ் பவுண்டேசன் டிரஸ்டியாக இருக்கலாம்.
ஆனால் நான் சுதா..
எல்லா பெண்களையும் போலவே 
எனக்கும் பல கடமைகள் பல முகங்கள்..
அதனாலேயே நான் என் சுயத்தை
என் அடையாளத்தை
இழந்துவிட்டேன் என்று அர்த்தமல்ல…
சரியான தேர்வுகளைச் சரியான
நேரத்த்தில் செய்யும் போது நாம்
 நம் சுதந்திரத்தை இழப்பதில்லை
(OUR CHOICE DICTATED BY US, NOT BY THE WORLD)
இன்று நம் பெண்கள் மிகவும் அதிகமாக
சுதாமூர்த்தி போன்றவர்கள்
ஆரம்பித்து வைத்த ஐடி நிறுவன ங்களில்
 வேலைப் பார்க்கிறார்கள்.
ஆனால் அவர்களில் யாருமே
ஏன் சுதாவைப் போல இல்லை!..
சுதா ஒன்றும் கடந்த காலமல்ல.
சுதாமூர்த்தி கற்பனையும் அல்ல.
இப்போதும் எனக்கு சுதா என்ற பெண்ணை
ரொம்ப ரொம்ப பிடிக்கும்…
I LOVE YOU SUDHA.

4 comments:

  1. yes mam. her own Rs. 10000 is the capital upon which, infi was born and earning crores and generating employment for thousands of people. We all know many apps and indian government's aadhar based digi india project is getting done under infi's knowledge only. everything started due to her sacrifise of leaving her secured job for murthi sir's dream and supporting for the growth of infi from scratch. Lets salute her noble sacrifise and hardwork.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அரவிந்த். சுதாவும் சுதாவின் தனித்துவத்தைப் புரிந்து கொண்ட மூர்த்தியும் கற்பனை பாத்திரமல்ல என்பதை எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

      Delete
  2. Replies
    1. ஆம்... நாம் கொண்டாட வேண்டிய நம் காலத்தின் பெண். மிக்க நன்றி வெங்கட்

      Delete