Friday, February 22, 2019

ஆளுமைகள் இல்லாத அரசியல் களம்

அப்பா இல்லாமல் தேர்தலைச் சந்திக்கும் வாரிசு
அம்மா இல்லாமல் தேர்தலைச் சந்திக்கும்  பக்தன்..

மொத்தத்தில் ஆளுமைகள் இல்லாமல் தேர்தலைச்
சந்திக்க இருக்கும் வாக்காளர்கள்..
எனவே இந்த தேர்தலில் மக்கள் தங்கள் வேட்பாளர்களை 
எப்படி தேர்வு செய்வார்கள்..?

கூடுகின்ற கூட்டத்தை வைத்து தேர்தல் கணிப்புகளைச்
 சொல்லிவிட முடியாது.
கூட்டணிகளின் வாக்குவிகிதத்தை வைத்தும்
 தேர்தல் கணக்கை கணித்துவிட முடியாது.
பெரிசா கொள்கை எல்லாம் பார்த்து மக்கள் 
வாக்களிப்பார்கள் என்று இன்னும் யாராவது 
மார்த்தட்டி சொல்லிக்கொள்ள முடியாது... காரணம்
கொள்கை மண்ணாங்க்கட்டி வெங்காயம் எல்லாம்
உரித்துப் பார்த்துவிட்ட மக்கள் தான் .
..

ஒவ்வொரு தொகுதியிலும் தரமான மனிதர்களை..

ஆம்... சமூகத்தளத்தில் 'இவரு நல்ல மனுசன் பா.." 
என்று பெயர் எடுத்திருக்கும் வேட்பாளரை
 மக்கள் தேர்ந்தெடுக்கும் மன நிலையில் இருப்பார்கள்..
அதை அறிந்து வேட்பாளர்களை நிறுத்தியாக வேண்டும்..
. அப்படி எல்லாம் நீங்க சொல்லுகிற மாதிரி 
நல்ல மனுஷன் களெல்லாம் எந்தக் கட்சியில்
இருக்காங்கனு கேட்டா என்னிடம் அதற்குப் 
பதிலில்லை தான். 
இதை விட்டுட்டு எவன் தொகுதியில் அதிகம் பணம்
செலவழிப்பான், யாரு குட்டிச்சாக்குப் போட்டு 
பண்ணத்தைக் கொண்டு கட்சிக்கு கொடுப்பாங்கனு
திட்டம் போட்டா... அம்போ தான்...
யோசிக்கிற நேரத்தில... சும்மா .. ஒவ்வொருவரையா
மாறி மாறி சந்திச்சிக்கிட்டு..

சரவணா... இன்னும் எவ்வளவு நாட்களுக்கு 

இப்படியே பயந்துக்கிட்டு இருக்க முடியும் சொல்லு?!
எனக்குத் தனியா பயம்மா இருக்கு மச்சி..நீயும் எங்க்கூட
 பாத்ரூம் போக வர்றியானு .. தொடை நடுங்கிக் கேட்கிறதைப் பார்த்து .. வாக்களர்களும் பயந்துவிடக் கூடாது பாரு..... \

என்னவோ போ.. சரவணா..

உன் பயத்தைப் போக்க வாக்களர்கள் தான்
எலுமிச்சைப் பழத்தோட வரணும்னு
அடம் பிடிக்காதே.

No comments:

Post a Comment