Tuesday, June 5, 2018

ரஞ்சித்தா ? காலாவா??


ரஞ்சித்தா.. காலாவா..?

காலாவில் நடித்த நடிகரின் பெயர்..மறந்துவிட்டது!”



கொஞ்சம் இக்கட்டான தருணமிது .
எனக்கு ரொம்ப பெரிசா சினிமா பற்றிய விவரமெல்லாம் கிடையாது.
ஆனால் சினிமாவின் சமூக தாக்கமும் அரசியல் தாக்கமும் விளைவுகளும்
ஓரளவு தெரியும். அந்தக் காலத்தில் நானும்வாத்தியார்படத்திற்கு விசில்
அடித்திருக்கிறேன்.!!
ரஞ்சித்திற்கு சினிமாவை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும்
கருதவில்லை. தன் கருத்துகளுக்கு பிரபலங்களை ஆயுதமாக பயன்படுத்த
முடியுமா என்று முயற்சி செய்து அதில் தோற்றுப் போனவராகக் கூட கருத
இடமிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் ரஞ்சித்திற்கு ஒரு பார்வை இருக்கிறது
என்பதில் ஐயமில்லை.
அடுத்த அவர் எடுத்திருக்கும்காலாதிரைப்படம்.
யார் இந்த காலா?
காலாவுக்கும் தாராவிக்கும் என்ன தொடர்பு?
ஞ்சித் தாராவியை காலாவின் எப்படி காட்டுகிறார்?
தாராவி என்றால் ஆசியாவின் நாற்றமெடுக்கும் குடிசைப்பகுதி என்றும்
தாராவி என்றால் அம்மணமாகத் திரியும் அபலைப் பெண் என்றும்
தாராவி என்றால் மலமும் குப்பையும் கொட்டப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டி என்றும்
தாராவி என்றால் தாதாகளின் அட்டகாசங்கள் இரவிலும் நடக்கும் களம் என்றும்
தாராவி என்றால் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் வாழும் இடம் என்றும்
தாராவி என்றால்
தாராவி என்றால்
இப்படியான ஓரிடம் என்றும் இதுவரைக் காட்டப்பட்ட சினிமாக்காரர்களின்
காமிராக்கண்களின் அதே பார்வையை ரஞ்சித்தும் கொடுத்திருக்கிறாரா?
ரஞ்சித்திற்கு தாராவி குறித்து என்னமாதிரியான கருத்து இருக்கிறது?
ரஞ்சித் அவர்கள் தாராவி வாழி இளைய சமூகத்தை சினிமா என்ற
பெரிய வெளிச்சத்தில் வந்து விழுகின்ற விட்டில் பூச்சிகளாக நினைத்திருக்கிறாரா?
இப்போதைக்கு எனக்கு எந்தக் கருத்தும் இல்லை.
ரஞ்சித் அவர்களை காலா திரைப்படத்தின் சூட்டிங் மும்பையில் நடந்தப்போது
சந்தித்திருக்கலாம் தான்! ஆனால் என்னவோ இடைவெளியை அப்படியே
வைத்துக்கொண்டேன். அதெல்லாம் இருக்கட்டும்.
இப்போது ரஞ்சித்திற்காக காலா திரைப்படத்தைப் பார்க்கலாம் என்று ஒரு சாரார்.
அதில் நடித்திருக்கும் நடிகருக்காக அத்திரைப்படத்தைப் புறக்கணிக்க வேண்டும்
என்று ஒரு சாரார்இவர்கள் சொல்லும் கருத்துகள்.. விவாதங்கள்
.. 
ஒரு திரைப்படம் வெளிவரும் போது இம்மாதிரியான விவாதங்கள் எழுவது
தமிழுலகில் ஒன்றும் புதிதல்ல. ஆனால் காலா திரைப்படமும் அத்திரைப்படத்தில்
தங்களையும் இணைத்துக் கொண்டதற்காக தாராவியில் ஏற்பட்டிருக்கும் 
சின்னதா ஒரு மகிழ்ச்சியும் என்னை இப்படம் குறித்து நிறைய யோசிக்க வைத்திருக்கிறது.
எந்த ஒரு சினிமா நடிகருக்கும் ரொம்ப பெரிசா சமூகப் பிரக்ஞை இருந்தது/இருக்கிறது
என்றொ அது என்னவோ காலாவில் நடித்தவருக்கு மட்டும் இல்லை என்றொ
பேசுவதெல்லாம் அபத்தம். பிரச்சனை இதுவல்ல.
காலாவுக்கும் காலாவில் நடித்தவருக்கும் எதுவும் சம்பந்தமே இல்லை
அதை காலாவின் தாராவி களமும் தாராவி வாழ் என் தமிழ் இளைஞர்களும்
புரிந்த கொள்ள வேண்டும் என்பது மட்டுமே !
இப்போது என்னைப் போன்றவர்கள் முன் எழுந்திருக்கும் தலையாய பிரச்சனை.
எல்லா பக்கத்திலிருந்தும் அடிவாங்கிக்கொண்டிருக்கும் எங்களுக்கு
இப்பிரச்சனையின் இன்னொரு முகமும் தெரியும்.
காலாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பமும் சிக்கலும் எம் 
மக்களின் சில உணர்வுகள் சார்ந்தவை. 
அவர்களின் முகங்களில் மத்தாப்பு பூ போல
பூத்த புன்னகையைக் கண்டு அதில் பங்கு பெறவும் முடியாமல்
விலகி நிற்கவும் முடியாமல் தவிப்பதை அவர்கள்
அறிந்திருக்கிறார்களா? தெரியவில்லை. 
தந்தை பெரியாரின்  தடியை ஊன்றி எழுந்த எம்மக்கள் 
அம்பேத்கரின் அறிவாயுதம் என்ற வெளிச்சத்தில் 
பயணிக்க ஆரம்பித்திருக்கும் இத்தருணத்தில்

காலா.. காலா.. தாராவிக்கும் தாராவி வாழ் மக்களுக்கும்
எந்த ஓர் அடையாளமும் அல்ல.
நமக்கான அடையாளங்கள் இமயமலையில் இல்லை.
தாராவியின் அடையாளம் மித்தி நதிக்கரையில் இருக்கிறது.
மித்தி நதி சாக்கடை அல்ல.
நமக்கு அது என்றும் நதிதான். 
நதியின் ஓட்டத்தை எவனும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

காலாரஞ்சித் படம். 
ரஞ்சித் .. காலாவின் மகன்.
மற்றபடி கறுப்பாக இருப்பதாலேயே எல்லோரும் காலாவாகிவிட முடியாது.
வேஷம் போட்டவெல்லாம் காலாவாகிவிட முடியாது.
நம்மவராகிவிடவும் முடியாது.

காலா திரைப்படம் மூலம் இன்னொரு தளத்திற்கு
என் தாராவி வாழ் இளைஞர்கள் வந்திருப்பார்கள்.
அவர்களையும் அவர்கள் உணர்வுகளையும் மதிக்கிறேன்.
கொண்டாடுகிறேன். 
சில தருணங்களில் நம்மோடும் நம் உணர்வுகளோடும் நாம்
போராட வேண்டி இருக்கிறது.
நம் பாதை அப்படி ஒன்றும் ரொம்பவும் சீர்செய்யப்பட்டதல்ல.
தனித்தும் கூட பயணிக்கும் தருணங்கள் வருகிறது.
தாராவி .. அப்போதும் நம்முடன் இருக்கும்.
……

(காலாவில் நடித்த நடிகரின் பெயர் மறந்துவிட்டது. அதனால் தான்
பதிவில் குறிப்பிடவில்லை!
சினிமா ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டுமாக..)
#தாராவி_காலா_ரஞ்சித்

5 comments:

  1. My humble opinion is that YOU SHOULD NOT BE WATCHING this movie!

    **அந்தக் காலத்தில் நானும் “வாத்தியார்” படத்திற்கு விசில்
    அடித்திருக்கிறேன்.!!***

    Really?

    ரொம்ப பெருமைப் பட வேண்டிய விசயம்தான். உங்க "resume" ல போட்டா ஈசியா நல்ல பொசிஷன் கிடைக்கும்.

    BTW, who is this "guy" vaaththiyaar? A teacher?!

    Must be an uneducated guy who hardly knows how to teach, Right? :)

    ReplyDelete
    Replies
    1. Hai, thanks Varun, you already told us not to judge you from your responses. so I relaxed. thanks Varun for your comment.

      Delete
  2. தவறான நிலை,நம்மவர் யார்? இந்த நிலையில் நீங்கள் எப்படி சமத்துவம் பேண முடியும்? யாதும் ஊரே யாவரும் கேளீர் ...

    ReplyDelete
  3. I just watched this movie today. Very good one. It is in fact a Ranjith movie. Rajini and Nana patekar and Eswari Rao have done excellent job. Well, after watching the movie, I changed my mind, I seriously think you must watch this movie. I am positive you would not only like the contents but also Rajnikanth, the actor whose name you could not remember!

    ReplyDelete