Sunday, August 21, 2016

வாழ்க்கை சக்கரம்




வாழ்க்கையை சுழலும் சக்கரம் என்று சொன்னவன்
எதை நினைத்து சொன்னான்?
செக்குமாடு போல சுழலும் வாழ்க்கையை
அசைப்போட்டுக்கொண்டிருக்கிறது
எங்கள் திண்ணை.
நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும்
பூமிக்கு பரிசாக கிடைத்த்து
வசந்தமும் தென்றலும்
கார்மழையும் வெயில்நதியும்.
வட்டப்பாதையைவிட்டு விலகி
பிரபஞ்சத்தில் பால்வீதியில்
சுழன்று சுழன்று...
பிரபஞ்சங்கள் கடந்து .
அடடா.. எல்லாமே ..
பிரமாண்டமாக இருக்கிறது.
காலடியில் சின்ன நீல பந்து
பூமி உருண்டியயைப் புரட்டிப்போட
சொல்கிறது அந்த வானம்பாடி
எங்கிருந்தோ
வநத உன் நினைவுகள்
மீண்டும் மீண்டும் சூரியமண்டலத்திற்கே
இழுத்துவருகின்றன.
இதை நீ புவியீர்ப்பு சக்தி என்று சொல்லி

பாடம் நடத்தாதே.

No comments:

Post a Comment