Monday, July 25, 2016

கம்யூட்டர் கவிதை

பத்து  வார்த்தைகளை எடுத்துக்கொள்.
அவை இடக்கரடக்கலாக இருப்பது உத்தமம்.
அந்த வார்த்தைகளைக் குலுக்கல் முறையில்
கவிதையில் போட்டு வை.
அனுபவம், உணர்வு, உணர்வு நிலையின் பரிணாமம்
நிஜமும் புனைவும் கனவில் கலந்த ரசாயணவித்தை
இதெல்லாம் எதுவும் தேவையில்லை.
குலுக்கலில்  வந்துவிழும் கம்ப்யூட்டர் கவிதையை
கொஞ்சம் மவுஸின் உதவியுடன்
கடித்துக் குதறி வாந்தி எடுத்து
கலர் கலராக துப்பு.
க்டைசியில் கவிதைக்கு காசநோயோ புற்றுநோயோ
எதோ ஒன்று வந்து தொலைக்கட்டும்
எப்படியோ ..
தமிழ்த்தாய்.. செத்துப் பிழைத்தாள்
என்று செய்தி வாசிப்பில் வராமலா போய்விடும்?. 

No comments:

Post a Comment