Wednesday, July 6, 2016

காட்சிப் படிமங்களின் அலைவரிசை


முகநூலில் 3 மணிநேரம்
கூகுளில் 1 மணீநேரம்
வாட்ஸ-அப் 1 மணிநேரம்
கைபேசியில் குறுஞ்செய்திகள் மற்றும்
அழைப்புகளில் 2 மணிநேரம்
இதெல்லாம் காணாது என்று நடுவீட்டில் உட்கார்ந்திருக்கும்
டிவி திரையில் எதையோ பார்த்துக்கொண்டு
மதிய இரவு உணவு நேரமும் சேர்த்து 3 மணிநேரம்
ரொம்ப சோர்வாகிவிட்டால் பாட்டுகேட்கிறேன்
என்று யு ட்யூப்பில் 2 மணிநேரம்..
சராசரியாக இன்றைய மனிதனுக்கு ஒருநாளில் பாதி பொழுது
அதாவது 24 மணிநேரத்தில் 12 மணிநெரம்
காட்சிகளை காண்பதில் கழிகிறது.
(அதுவும் இப்போதெல்லாம் கணிப்பொறியாளர்களால்
நிரம்பி வழியும் தமிழ்ச்சமூகத்தில்
அவர்கள் ஆபிஸில் கணினியின் முன்னால்
உட்கார்ந்து மாரடிக்கும் 10 மணிநேரமும் ! கணக்கில்
எடுத்துக்கொள்ளப்படவில்லை)
இப்படியாக..
மூளையில் காட்சிகள் படிந்து படிந்து
படிந்து படிந்து பாசிப்பிடித்து
அதே காட்சிகள் வெவ்வேறு வண்ணத்தில்
அடிமனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

பாட்டைக் கேட்டுக்கொண்டு கண்மூடி ரசித்தக் காலம்
ஒன்றுண்டு.
அப்போதெல்லாம் பாட்டுகளும் வாழ்க்கையுடன்
ஒட்டியதாக இருக்கும்.
வெறும் சப்தங்களின் அலறல்களாக இருப்பதில்லை.
வாசிப்புக்கு என்று சராசரி மனிதர்கள் ஒதுக்கும்
நேரமும் கணிசமாக இப்போது குறைந்துவிட்டது.
பயணங்களில் வாசித்துவிட்டு இருக்கைக்கு அடியில்
தூரவீசிவிட்டு நகரும் பக்கங்களாக ...
இந்த புழுக்கமான இருட்டறையில்
சிக்கி மூச்சுமுட்டி செத்துக்கொண்டிருக்கிறான்
கொஞ்சம் வித்தியாசமாக யோசிப்பவனும் எழுதுபவனும்.
கிட்டத்தட்ட ஒரு யோகியைப் போல
அவன் வாழ வேண்டி இருக்கிறது.
அதுவும் சாத்தியபடாத சூழலில் யோகியைப் போல
தன்னைப் பாவித்துக்கொண்டு
(கொஞ்சம் சரக்கு ஏற்றிக்கொண்டு!!)
தன்னை ஏமாற்றிக்கொண்டாக வேண்டும்.
தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வதை
அவன் உணர்ந்து கொள்ளும் தருணம்
அவனைப் பொறுத்தவரையில்
மரணத்திற்கு முன்னான மரணம்.

No comments:

Post a Comment