Monday, March 30, 2015

கலைஞரின் விசிஷ்டாத்வைதம்


திமுக தலைவர் கலைஞர் அவர்களின் முகநூல் பக்கத்தை அலங்கரிக்கிறார்
விசிஷ்டாத்வைதம்  தத்துவம் பேசிய ஸ்ரீராமானுஜர்.
ராமானுஜர் பற்றிய நூல்களை எழுதி இருக்கும் இந்திரா பார்த்தசாரதியிடம் போய் வெற்றிலைப் பாக்கு தேங்காய் பழம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கியாச்சு. அவாளும் அந்தக் காலத்திலேயே (11ஆம் நூற்றாண்டு)
ஒருவர் இவ்வளவு சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்டிருந்தார் என்பதால் கருணாநிதி இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்னு சொல்லி "நன்னா இருங்கோ"னு ஆசிர்வாதம் செய்துட்டார்.
ஆனா இந்திரா பார்த்தசாரதிக்கு கலைஞரையும் தெரியும்,
ராமானுஜரையும் நன்னாவே தெரியும். ஒரு மனிதன்
எப்போது வசிஷ்டாத்வைதம் வாசிக்க ஆரம்பிக்கிறான்
என்பதையும் மிக நன்றாகவே அறிந்தவர் இந்திரா பார்ததசாரதி.
அதனால் தான் அவர் சொல்கிறார்,
"கருணாநிதி ஆன்மீகத்தை நாடுகிறாரோ என்றும் தனக்குத்
தோன்றுவதாகச் "சொல்கிறார்.
கலைஞ்ரின் விசிஷ்டாத்வைத  அவதாரத்தால் கலைஞருக்குசிறப்பா என்று கேட்டால் அதைத் தீர்மானிக்கும் முழு அதிகாரமும்
அவர் உடன்பிறப்புகளுக்கே உண்டு.!
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இதனால் ராமானுஜருக்கோ
அவர் காட்டிய  தத்துவத்திற்கோ எந்தச் சிறப்பும்
வந்துவிடப்போவதில்லை. இதனால் பயப்பட வேண்டியவர்
உண்மையில் உண்மையான விசிஷ்டாத்வைத  ராமானுஜ பக்தர்கள் தான்

இனி வசிஷ்டாத்வைதத்தை திமுக தொண்டர்கள்
அனைவரும் கவிஷ்டாத்வைதம்  என்று கொண்டாட ஆரம்பிப்பார்கள்.
கலைஞருக்கு ஆழ்வார்களின் ஆழ் (ள்)வார் என்ற புதிய பட்டம் ஏதாவது
கொடுக்கலாம்..
வாழ்க கலைஞரின்  விசிஷ்டாத்வைதம்.
பாவம் , கலைஞ்ர் தொலைக்காட்சியைப் பார்க்கும் தமிழ்மக்கள்


ref:
http://www.bbc.co.uk/tamil/india/2015/03/150319_ramanujarkarunanidhi


No comments:

Post a Comment