Friday, November 14, 2014

இதை எப்படி புரிந்து கொள்வது?





அண்மையில் பண்டித ஜவஹர்லால் நேரு  அவர்கள் பாபாசாகிப்
அம்பேத்கருக்கு எழுதிய கடிதம் ஒன்று என் வாசிப்புக்கு கிடைத்தது.

திரு ஜவஹர்லால் நேரு,
இந்தியப் பிரதமர்,

எண் : 2196
பி எம் எச் 56,
புதுடில்லி

செப்டம்பர் 15, 1956

என் அன்புக்குரிய டாக்டர் அம்பேத்கர் அவர்களே,

செப்டம்பர் 14 தேதியிட்ட உங்கள் கடிதம் கிடைத்தது.

நீங்கள் கூறியபடி உங்கள் புத்தகத்தின் பிரதிகளை
அதிக அளவில் வாங்கமுடியுமா என்பது எனக்கு
ஐயமாகவே இருக்கிறது. புத்த ஜெயந்தியின் போது
வெளியீடுகளை வாங்குவதற்கு ஒரு தொகை
ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகை முழுவதும்
செலவழிந்த தோடல்லாமல் அதற்கும் அதிகமாகவே
பணம் செலவிடப்பட்டுவிட்டது. புத்தமதம் சம்பந்தமாக
எங்கள் உதவியுடன் வெளியிடப்பட்ட இருந்த சில
புத்தகங்கள் பற்றிய பிரேரணைகள் ரத்து செய்யப்படும்
நிலை ஏற்பட்டுவிட்டது. புத்த ஜயந்திக் குழுவின் தலைவரான
டாக்டர். ராதாகிருஷ்ணனின் பார்வைக்கு உங்கள் கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது.

பல வெளிநாட்டவர்கள் வருகை தரும் புத்த ஜயந்தி
விழாவின் போது உங்கள் புத்தகம் புதுடில்லியிலும்
இதர இடங்களிலும் விற்பனைக்கு வரட்டும் என்று
யோசனை கூறுகிறேன். அப்போது நல்ல விற்பனை
இருக்கும்.

தங்கள் உண்மையுள்ள,

(ஓ-ம்) ஜவஹர்லால் நேரு.

பி.கு. தன்னால் இவ்விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது
என்று அன்றைய குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்
அம்பேத்கருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.


இதை எப்படி புரிந்து கொள்வது?
நேரு விதிகளைப் பின்பற்றினார் என்று எண்ணி
பெருமை கொள்ளவா?
அப்படியானால், ஏன் குடியரசு தலைவருக்கு
அனுப்ப வேண்டும்.?

14 அக்டோபர் 1956, அம்பேத்கர் 365,000 பேருடன் புத்தம் தழுவிய நாள்.
சரியாக அதற்கு ஒரு மாதத்திற்கு முன் , செப்டம்பர் 14ல் இக்கடிதத்தை
எழுதுகிறார். , ஒரு வகையில்
சொல்லப்போனால் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார்.
அந்த வேண்டுகோள் தான் நிராகரிக்கப்படுகிறது! என்று
புரிந்து கொள்ளவா?

இதை எப்படி புரிந்து கொள்வது?!!!

1 comment:

  1. அறியாத செய்திகள் சகோதரியாரே நன்றி

    ReplyDelete