Tuesday, November 11, 2014

அப்பாவின் நினைவுகள்

OUR DADDYS ARE GREAT..
மும்பையிலிருந்து நெல்லைக்கு தனியாக ரெயில் பயணம்.
3 ஏசியில் ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன்.
எப்படியோ ஒரு பகல் பொழுது கழிந்தது, மறுநாள் நான்
கைபேசியில் பேசியதை வைத்துக்கொண்டு என்னருகில் இருந்தவர்
என்னோடு பேசினார். வய்தானவர். மும்பையில் தற்போது பிரபலமாக இருக்கும் டாக்டர் மச்சிவேல் அவர்களின் அண்ணன் என்று தன்னை
அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பின் நானும் என்னை அறிமுகம்
செய்துக் கொண்டேன். தாராவி பகுதியில் வாழ்ந்த பி.எஸ். வள்ளிநாயகம் அவர்களின் மகள் நான் என்று என்னை அறிமுகம் செய்தவுடன் அவர் அழ ஆரம்பித்துவிட்டார்.
அந்தக் காலத்தில் உன்னோட அப்பா திருநெலவேலிக்கு வந்துட்டு திரும்பினார்னா... இந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிற கிராமத்து ஜனங்க எல்லாம் ஸ்டேஷன்ல் வந்து காத்துக்கிடப்பாங்க.
"அய்யா... என் மவன் பம்பாய்க்கு ஓடிவந்துட்டான், ஏய்யா , எம் பிள்ள
வெம்பாயைப் பாத்து போனவன் தான் ஒரு கடுதாசி கிடையாது,
செலவுக்கு மணியார்டர் அனுப்பறதில்லய்யா....இப்படியாக தங்கள்
கதைகளுடன் வந்து நிற்பார்கள். உன் அப்பா அவுங்க எல்லாரையும்
பார்த்து விவரம் கேட்டு மறக்காமல் அவர்கள் பிள்ளைகளைத் தேடி
அவ்ர்களுக்கு உதவுவார். அதுமட்டுமில்ல, ஸ்டேஷனுக்கு த்ன்னைப் பார்க்க வந்திருக்கும் அந்தப் பெற்றோர்கள் திரும்பி தங்கள் ஊருக்குப் போக பஸ் டிக்கட்டுக்கும் காபிச் செலவுக்கும் காசு வேறு கொடுப்பார்.
அந்த மாதிரி மனுஷங்க இப்ப யாரும்மா இருக்கா............."
அந்தப் பயணத்தில் அன்றிரவு எனக்குத் தூக்கம் வரவில்லை.
இப்படி அப்பாவின் மறைவுக்குப் பின் அப்பாவைப் பற்றி நாங்கள் பிறர் சொல்ல கேட்ட சம்பவங்கள்.. பல..
அப்பாவின் நினைவு நாள் இன்று. அப்பா மறைவு: 12 நவம்பர் 1986.
வருடங்கள் பலவாகியும் அப்பாவின் நினைவுகள்....
OUR APPAAS ARE GREAT.
அப்பாவின் நினைவிடம் -
— feeling sad.

1 comment:

  1. போற்றுதலுக்கு உரியவர் தங்கள் தந்தை.

    ReplyDelete