Wednesday, October 8, 2014

இரண்டு செய்திகள்

இரு செய்திகள்:


ஏப்பா...த்லையைச் சுத்துதே!

இந்த இரு செய்திகளையும் இணைத்து வாசிப்பதும் வாசிக்காததும் உங்கள் விருப்பம்.





முதல் செய்தி

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இது அப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துகிறேன்’ என்று அப்போது நரேந்திர மோடியிடம் ரஜினிகாந்த் கூறினார்.

தற்போது தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில், பாரதீய ஜனதா கட்சிக்கு ரஜினிகாந்தை இழுக்கும் முயற்சியில் அக்கட்சியின் மேலிட தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ஏற்கனவே இது குறித்து ரஜினிகாந்திடம் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் ரஜினிகாந்த் இது குறித்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்றார். அங்கு அவர் லதா ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் தினத்தந்தி நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-தமிழகத்தில் பா.ஜனதாவிற்கான வாக்கு வங்கி அதிகரித்து இருக்கிறதா?

பதில்:- நிச்சயமாக, பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிட்ட இடத்தில் மட்டும் 5 சதவீதத்திற்கு மேலான வாக்குகளை பெற்றோம். உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் பல இடங்களில் கணிசமான வாக்குகளை பெற்றிருக்கிறோம். கோவை, தூத்துக்குடி மாநகராட்சியில் வைப்பு தொகையை பெற்று இருக்கிறோம். ஆளும் கட்சியை எதிர்த்து இவ்வளவு வாக்குகளை பெற்று இருப்பதே இதற்கு சாட்சி.

பா.ஜனதாவிற்கு இழுக்க முயற்சியா?
 கேள்வி:- நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு நீங்கள் சென்றீர்களே? இதில் ஏதாவது முக்கியத்துவம் இருக்கிறதா?

பதில்:- ரஜினிகாந்த் தேசிய சிந்தனையுள்ளவர். மக்கள் நலனை முன் வைத்து கருத்துக்களை சொல்பவர். அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் நவராத்திரி விழாவுக்கு அழைத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று சென்றேன். ரஜினிகாந்த் படப்பிடிப்புக்கு சென்றிருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை.

கேள்வி:- ரஜினிகாந்தை பா.ஜனதாவிற்கு இழுக்கும் முயற்சி நடக்கிறதா?

பதில்:- நான் ஏற்கனவே சொன்னது போல, ரஜினிகாந்த் மக்கள் நலனுக்காக குரல் கொடுப்பவர். தமிழகத்தில் எப்போது எல்லாம் மக்கள் நலன் பாதிக்கப்படுகிறதோ? அப்போதெல்லாம் அவர் குரல் கொடுத்து இருக்கிறார். மக்கள் நலனுக்காக வாஜ்பாய் அரசு நதிநீர் இணைப்பு திட்டத்தை அறிவித்தபோது ஒரு கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்தார். இன்றைக்கு தமிழக அரசியலில் அசாதாரண நிலை உள்ளது. தமிழகத்தில் ஊழலற்ற, மக்கள் நலனை காக்கும் ஆட்சி மலருவதற்கு ரஜினிகாந்த் ஆதரவு தர வேண்டும்.

பா.ஜனதாவில் சேரும்படி ரஜினிகாந்தை கட்டாயப்படுத்த முடியாது. அது அவருடைய விருப்பம். பா.ஜனதா தலைமையில் நல்லாட்சி அமைவதற்கு உதவும் வகையில் அவர் ஆதரவு அளித்தால் வரவேற்போம்.


கேள்வி:- பாரதீய ஜனதாவில் ரஜினிகாந்த் இணையும் பட்சத்தில், அவர் பா.ஜனதாவின் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறதே?

பதில்:- பாரதீய ஜனதா கட்சியில் பதவிகளை பொறுத்தவரையில் கட்சியின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். பதவியை எதிர்பார்த்து தான் அவர் ஆதரவு தருவார் என்று சொல்ல முடியாது. அவர் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். ஆகவே இந்த கேள்வியே தேவையற்றது. இருப்பினும் தமிழகத்தை பற்றி இப்போது சொல்ல முடியாது.
அ.தி.மு.க. தலைவர் ஒரு வழக்கில் சிக்கியிருக்கிறார். தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி இருக்கிறது. ஆகவே ஊழலற்ற ஆட்சியை, மக்கள் விரும்பும் ஆட்சியை பா.ஜனதா மட்டும் தான் தர முடியும். 2016-ம் ஆண்டு தேர்தலுக்கு நாங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம்.

கேள்வி:- தமிழக அரசியலில் ‘வெற்றிடம்’ ஏற்பட்டுள்ளதாக சில அரசியல் கட்சி தலைவர்கள் கூறுகிறார்களே?

பதில்:- தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று சொல்வதை விட, அது பா.ஜனதாவிற்கான ‘வெற்றி’ இடம் என்று சொல்லலாம். பா.ஜனதாவை பலப்படுத்த 42 மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டம் நடத்தி, கிளை அலுவலங்களில் அமைப்பு ரீதியாக கமிட்டி பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்கும் பணியும் விரைவுபடுத்தப்பட்டு இருக்கிறது. தமிழக அரசியலில் மாற்று அரசியல் கட்சியாக பாரதீய ஜனதா உருவெடுத்துள்ளது.

 (செவ்வாய், அக்டோபர் 07,2014, THANTHI )

 இரண்டாவது செய்தி"

ஊழல்களில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் ஈடுப்பட்டுள்ளது என்பதை கீழ்க்கண்ட பட்டியல் கூறும்.

1. 1987 போர்ஃபர்ஸ் ஊழல் , பேர்பாக்ஸ் ஊழல் - ரூ. 260 கோடி
2. 1992 ஹர்சத் மேத்தா பங்குச்சந்தை ஊழல் - ரூ. 5000 கோடி
3. 1994 சர்க்கரை இறக்குமதி ஊழல் - ரூ. 650 கோடி
4. 1995 பிரபரன்சியல் அபார்ட்மென்ட் ஊழல் ரூ. 5000 கோடி
5. 1995 யூகோய்லேவ் டைனர் ஊழல் - ரூ. 400 கோடி
6. 1995 - காஸ்லாவ் விருந்து ஊழல் - ரூ. 400 கோடி
7. 1995 - மேகாலயா வன ஊழல் - ரூ. 300 கோடி
8. 1996 உர இறக்குமதி ஊழல் - ரூ. 1300 கோடி
9. 1996 யூரியா ஊழல் - ரூ. 133 கோடி
10. 1996 பீகார் மாட்டுத் தீவன ஊழல் - ரூ. 990 கோடி
11. 1997 சுக்ராம் டெலிகாம் ஊழல் - ரூ. 1500 கோடி
12. 1997 - எஸ்.என்.சி. லாவலைன் மின்சாரத் திட்ட ஊழல் - ரூ. 374 கோடி
13. 1997 பீகார் நில ஊழல் - ரூ. 400 கோடி
14. 1997 சி.ஆர். பான்சால் பங்கு மார்க்கெட் ஊழல் - ரூ. 1200 கோடி
15. 1998 தேக்கு மர வளர்ப்பு ஊழல் - ரூ. 8000 கோடி
16. 2001 யு.டி.ஐ. ஊழல் - ரூ. 4800 கோடி
17. 2001 தினேஸ் டால்மியா பங்கு மார்க்கெட் ஊழல் - ரூ.595 கோடி
18. 2001 கேதான் பரேக் செக்யூரிட்டி ஊழல் - ரூ. 1250 கோடி
19. 2001 வீரேத்திர ரஸ்ட்டதி உலக அளவில் ஊழல் - ரூ. 1 பில்லியன் வரை
20. 2002 சஞ்சய் அகர்வால் ஹோமிராடு ஊழல் - ரூ. 600 கோடி
21. 2003 டெல்க்கி பத்திரபபேர ஊழல் - ரூ. 172 கோடி
22. 2003 பிரமோத் மகாஜன் - டாடா விஎஸ்என்எல் ஊழல் - ரூ. 1200 கோடி
23. 2005 ஐ.பி.ஓ.டி. மாட் ஊழல் - ரூ. 146 கோடி
24. 2005 பீகார் வெள்ள நிவாரண ஊழல் - ரூ. 17 கோடி
25. 2005 - ஸ்கார்பென் சப்மைரின் ஊழல் - ரூ. 18, 979 கோடி
26. 2006 பஞ்சாப் சிட்டி சென்ட்டர் ஊழல் - ரூ. 1500 கோடி
27. 2006 தாஸ்காரிடார் ஊழல் ரூ. 175 கோடி
28. 2008 பூனே பில்லியனர் ஜெகன் அலிகான் வரி ஏய்ப்பு ஊழல் - ரூ. 50,000 கோடி
29. 2008 சத்யம் ஊழல் - ரூ. 10, 000 கோடி
30. 2008 ரிலையன்ஸ் பங்கு விற்பனை ஊழல் - ரூ. 513 கோடி
31. 2008 ராணுவ ரேசன் ஊழல் - ரூ. 5000 கோடி
32. 2008 - ஸ்டேட் பாங்க் ஆப் சௌராஸ்ட்ரா ஊழல் - ரூ. 95 கோடி
33. 2009 - ஜார்க்கண்ட் மருத்துவ சாதனங்கள் ஊழல் - ரூ. 130 கோடி
34. 2009 அரிசி ஏற்றுமதி ஊழல் - ரூ. 2500 கோடி
35. 2009 ஒரிசா சுரங்க ஊழல் - ரூ. 7000 கோடி
36. 2009 மதுகோடா சுரங்க ஊழல் - ரூ. 37000 கோடி
37. 2010 எல்.ஐ.சி. வீட்டுக் கடன் வழங்குவதில் ஊழல்
38. 2010 மும்பையில் ராணுவ வீரர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஆதர்ஷ் ஊழல்
39. 2010 புதுடெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற ஊழல்.
40. 2010 ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழல்
41. 2011 - 2 ஜி ஸ்பெக்டராம் ஊழல் - ரூ. 1,76,000 கோடி.
42. 2012- வக்பு வாரிய நிலமோசடி ஊழல் - ரூ. 200000 கோடி
43. 2012 இந்திய நிலக்கரி சுரங்க ஓக்கீட்டு முறைகேடு ஊழல் - ரூ. 185591 கோடி
44. 2012 உத்தரப்பிரதேசம் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் - ரூ. 10000 கோடி
45. ஹவாலா நிதி முறைகேட்டில் 18 மில்லியன் டாலர் ஊழல்.
46. தங்க நாற்கரச் சாலை அமைக்கும் திட்டத்தில் நில மோசடியில் 100 மில்லியன் டாலர் ஊழல்.
47. கார்கில் போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் நிதின் கட்காரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய வேளாண் அமைச்சருமான சரத்பவாரும் சம்பந்தப்பட்ட பாசனக் கால்வாய் திட்ட மோசடியில் ரூ 75,000/- கோடி ஊழல்.
48. கர்நாடகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முதல்வராக இருந்த எடியூரப்பா இரும்புத் தாது வெட்டி எடுப்பதில் ரூ 50 கோடி ஊழல்.
49. கோவாவில் பாரதீய ஜனதா கட்சி முதல்வர் பணிக்கர் அரசின் இரும்புத் தாது ஊழல் ரூ 25 கோடி ஊழல்
50. ஜார்க்கண்ட் மாநிலத்தில் அர்ஜூன் முண்டா மற்றும் மதுகோடாவின் கனிம ஊழல் ரூ 37 ஆயிரம் கோடி ஊழல்.

51. சத்தீஸ்கரில் கனிம வளங்களை வெட்டி எடுக்க ஒப்பந்தம் வழங்குவதில் மற்றும் மின் திட்டங்களில் ராமன்சிங் அரசு செய்த முறைகேடு ரூ 40 ஆயிரம் கோடி ஊழல்.
52. கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் கனிம வளங்கள் வெட்டி எடுப்பதற்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுஸ்மாசுவராஜ் பெற்றது ரூ 1500 கோடி ஊழல்.

ref:  எழுத்தாளர்: சுகதேவ்
 http://www.keetru.com/index.php/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85/26629-2014-06-03-05-21-56) 




 ஏப்பா...த்லையைச் சுத்துதே!

இந்த இரு செய்திகளையும் இணைத்து வாசிப்பதும் வாசிக்காததும் உங்கள் விருப்பம்.சொல்லாதச் செய்தியைக் கண்டுபிடித்து வாசித்துக்கொள்வது கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்ளும் அவரவர் திறமை பயிற்சி அனுபவம் சார்ந்தது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்


 நான் சொல்ல வருவதெல்லாம்

ரஜினிகாந்த எப்போதுமே எம்ஜிஆராக முடியாது என்பதுதான் பிஜேபி கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.




No comments:

Post a Comment