Wednesday, August 22, 2007

பாவமன்னிப்பு

பாவமன்னிப்பு
-------------

எங்கள் பரமப்பிதாவே!
கரைவேட்டி மின்ன
நீண்ட துண்டு
நெஞ்சில் புரள
மாநாடுகளுக்கு
வரும்போதெல்லாம்
மறக்காமல்
எங்களையும் இரட்சிக்க வந்த
எங்கள் தந்தையே..!
உனக்குத் தெரியுமா..
உன் சூரியனுக்கு
வந்தக் குளிர்க்காய்ச்சல்!

நீ படித்தாயா
உன் பகுத்தறிவுப் பேசும்
அன்னைப் பராசக்தி
'அண்ணா'மலையாகி
ஆருடம் சொல்லும் கதையை?

மன்னித்துவிடு..
அவர்களை மட்டுமல்ல..
உன் வாரிசு சுமையை
சுமக்க மறுக்கும்
என்னையும்
என் எழுத்துகளையும்.
....................

No comments:

Post a Comment