Monday, February 14, 2022

பில் கேட்ஸ்.. ஸ்மைல்ஸ்

 மர்மக்கதைகளுடன் விடியும் பொழுது

2022 க்குள் கோவிட் அலைகள்
முடிவுக்கு வந்துவிடும் என்று பில்கேட்ஸ் சொல்லிவிட்டார்.
அவர் சொல்லிட்டா..?
அவர் என்ன ஆண்டவனா?




அவருக்கும் கோவிட்டுக்கும் என்ன சம்பந்தம்?
அவர் ஏன் கோவிட் எப்போ வரும்
எப்போ வருவதை நிறுத்திக்கொள்ளும்
என்று ஆருடம் சொல்கிறார்?
தெரியாது..
ஆனால்
அவர்தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்.
அவர்தான் உலக சுகாதர அமைப்பிற்கு 2018-2019ல்
மிக அதிகமாக நிதி கொடுத்திருக்கிறார்.
(அதுக்கும் கோவிட் க்கும் சம்பந்தமே இல்லை,
நம்பனும் !)
பாருங்கள்:
Bill and Melinda Gates Foundation USD 455 milion
GAIL foundation USD 389 million.
யாரு இந்த கெயில்?
இந்த கெயில் பில்கேட்ஸ் வளர்த்த பூனைக்குட்டி.
GAIL தான் தடுப்பூசிகளுக்கு தாயகம்.
அதை ஆரம்பிக்க பில்கேட்ஸ் கொடுத்த நிதி
USD 750 Million.
இப்படி எல்லாம் இருக்கிறப்போ
அவர் வா என்று சொன்னால் வரும்.
போடா என்று சொன்னால் போய்டும்
அதுதான் கொரொனாவின் மர்மக்கதை.
பயப்படாதீங்க..!
**
அதிகாலையில் இப்படி ஒரு மர்மக்கதை எழுதவேண்டியதாகிவிட்ட்து.
நேற்று காக்கைச்சிறகினிலே இதழில் (பிப் 2022)வெளிவந்திருக்கும்
‘சொல்லாக்கியன்’ கனடாவிலிருந்து எழுதியிருக்கும்
கட்டுரை வாசித்தேன். வழக்கம்போல அவர் கொடுத்திருக்கும் புள்ளிவிவரங்கள் சரியானதுதானா என்று
சோதித்துப் பார்த்தேன்.
(இப்படி ஒரு கெட்டப்புத்தி என்னை விட்டுப் போக
மாட்டேங்கு.. !)
அப்புறம் இந்த funding and NGO , health , WHO இதெல்லாம்
நம் கற்பனைக்கு எட்டாத மர்மங்களைக் கொண்டிருக்கிறது..
இரவெல்லாம் இந்த பெரிய பெரிய மில்லியன் டாலர்கள்
என்னைத் துரத்திக்கொண்டே இருந்தன.
ச்சே.. பில்கேட்ஸ் ஸ்மைல் எனக்குப் பிடிக்கும்.
இப்போ பாருங்க அதையும் ரசிக்க முடியாம போயிடுச்சு.
இப்போதைக்கு இதுதான் எனக்கு கவலை!
சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன.
வேதா நிறுவனத்திற்கு
புற்றுநோய் மருத்துவமனைகள் !
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கும்
அறக்கட்டளை உண்டு.
சோழியன் குடுமி சும்மா ஆடுவதில்லை.
மர்மக்கதைகள் தொடர்கின்றன.
$$$$$$$$

2 comments:

  1. பில்கேட்ஸ் பில்லை நம்ம தலையில் வச்சுட்டான்...

    ReplyDelete
  2. எல்லாமே உலகத்தை வணிகமயமாக்கி மக்களை சுரண்டி வாழும் சில கார்பரேட் கூட்டனிகளே காரணிகள்..

    ReplyDelete