Sunday, February 20, 2022

புத்தகத் திருவிழாவில் சாமியாடிகள்

                 

புத்தகத் திருவிழாவில் "சாமியாடிகள்"

புத்தகத்திருவிழாவை முன்னிட்டு
எழுத்தாளர்களுக்கு பரவி இருக்கும் “ஓசிடி”
MIFF , Tata Literary Festival, IFFI , Kala Ghoda Arts festival
இத்தியாதி பல கலை இலக்கிய திருவிழாக்கள் மும்பையில்
ஒவ்வொரு ஆண்டும் நடந்து கொண்டிருக்கின்றன.
அதில் கூடும் மக்கள் கூட்டம்
ஒவ்வொரு நாளும் சற்றொப்ப 150,000.
அத்துடன் உலகில் சிறந்த கலை இலக்கியவாதிகள்
கலந்து கொள்ளும் கூட்டமாகவும் இருக்கும்.
புத்தக வெளியீடுகள் உண்டு.
ஒன்றிய அரசு , மாநில அரசு நிதி உதவிகளும் உண்டு
என்றாலும் அரசியல் தலைவர்கள் முகம்
காட்டுவதும் இல்லை.
அவர்கள் அதிலிருந்து ஒதுங்கி இருப்பார்கள்.
ஒவ்வொரு நிகழ்விலும் பொதுஜன பங்களிப்புடன்
நடக்கும் விவாதங்கள் உண்டு.
பிரபலங்கள் வருவார்கள் போவார்கள் பேசுவார்கள்
விவாதம் செய்வார்கள். அவ்வளவுதான்.
மும்பை ஜனத்திரள் அந்தப் பிரபலங்களுடன்
சேர்ந்து புகைப்படம் எடுப்பதும் உண்டு.
அது அவர்களின் நினைவுகளுக்காக
என்பதாக இருக்கும்.
அந்த நிகழ்வுகள் நடக்கும் காலங்களில்
மும்பை கூட்டமே புகைப்படங்களைப் போட்டு தங்கள் சமூக வலைத்தளங்களை நிரப்பிக்கொள்வதில்லை.
எதொ ஓரிரு நாள் போடுவார்கள். அவ்வளவுதான்.
பெரும்பாலும் நிகழ்வு குறித்த கருத்துரையாடலாக
இருக்கும்.
பிறமொழியினரின் விளம்பர உளவியலும்
தமிழரின் விளம்பர உளவியலும்
பெருத்த வேறுபாடுகள் கொண்டிருக்கிறது.
தன்னைப் பற்றியே எழுதி, புகழ்ந்து படம்போட்டு
காட்டிக்கொண்டே இருக்க வேண்டிய உளவியல் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். பார்க்க ரொம்பவும்
பரிதாபமாக இருக்கிறது.
புத்தக கண்காட்சி முடிகிறவரை தூக்கமின்றி
தவிக்கின்றார்களோ என்னவோ!
தங்கள் புத்தகத்தைப் பற்றி அது கிடைக்கும்
அரங்கு எண் பற்றி ஒரு நாள் சொன்னால் போதாதா!
தினம்தினம் போட்டுக்கொண்டே இருப்பதற்கு ??!!
காரணம் என்ன?
இதில் எவரும் புத்தகங்கள் பற்றியோ
தாங்கள் வாசித்த அல்லது வாசிக்க விரும்பும்
புத்தகங்களையொ அதன் காரணங்களுடன்
பதிவு செய்வது குறைவு.! ஏன்?
பிரபலங்களின் அலட்டல் போடுகின்ற போட்டோ
அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதம்…
எழுத்து மீதிருக்கும் மரியாதையை சிதைக்கிறது.
வேறு என்னத்தைச் சொல்ல?
புதுமைப்பித்தன் கதைகள் ரூ 525 க்கு
அச்சிட்டு விற்பனையானது.
நாங்கள் எல்லாம் வாங்கி இருக்கிறோம்.
இன்றைக்கு அதுவே ரூ 100 அல்லது ரூ 150
அடக்கவிலைக்கு அச்சிட்டு விற்பனை
செய்ய முடியும் என்று காலம் உணர்த்திவிட்டது.
இதை கணக்குப் பார்த்தால்..
எழுத்தின் பெயரால் அடித்தப் பகற்கொள்ளைக்கு
என்ன பெயர்?!!
இலக்கியத்தாகமா?
தமிழ் வளர்ச்சியா!
இது பதிப்பு துறைக்கு மட்டுமல்ல,
புத்தகக் கண்காட்சியில் கடைவிரித்திருக்கும்
முதலாளிகள் அனைவருக்கும் தான்!
எனக்கென்னவோ… சமூக வலைத்தளங்கள்
வருகைக்குப் பின் சென்னை புத்தகத்திருவிழா காலத்தில்
எல்லா தமிழ் எழுத்தாளர்களுக்கும் “ஓசிடி”
மன நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்
என்பதை அவர்களின் பதிவுகளே காட்டுகின்றன.
ஓசிடி எழுத்தாளர்களுக்கும் ஆபத்தானது.
சரவணா..
நம்ம ஊர்ல கோவில் கொடை நடக்கும்போது மட்டும்
அந்த 3 நாட்களும் சாமி வந்து ஆடி அருள் கொடுப்பவர்
கடைசி நாளில் மஞ்ச தண்ணி தெளிச்சப்பிறகு
நார்மலாகிவிடுவார்.
ஆனால்.. எழுத்தாளர்களுக்கு
யார் மஞ்ச தண்ணி தெளிப்பது??!!
Kandasa

No comments:

Post a Comment