Friday, September 24, 2021

அவுரி அரசியலான கதை

 தாவர மண்டலத்தின் அரசியல்

காலனி ஆட்சி கால த்தில் மிகவும் முக்கியமானது.

வெட்ப மண்டலத்தில் விளையும் தாவரங்களை
தங்கள் குளிர்ப்பிரதேசத்தில் தங்களின் அதிகாரத்தாலும்
பயிரிட முடியாது என்பதால்
மனிதர்களும் விதைகளும் காலனி ஆதிக்கத்தில்
புலம்பெயர்ந்திருக்கின்றன.
அதில் முக்கியமானது அவுரியும் கரும்பும்.
அவுரி இலையிலிருந்து துணிகளுக்கு சாயம் பூசும்
இயற்கை வண்ணத்தை அறிந்த ஆங்கிலேயர்கள்
ஆப்பிரிக்காவில் விளைந்திருந்த அவுரி விதைகளை
இந்தியாவுக்கு கொண்டு வந்து இந்திய விவசாயிகளிடம்
கட்டாயப்படுத்தி அவுரி விளைச்சலை அறுவடை செய்தார்கள்.
தங்கள் விளை நிலங்களிலும் அவுரி போட்டு அவர்கள்
நிர்ணயித்த விலைக்கு கொடுக்க வேண்டிய நிலைக்கு
இந்திய விவசாயிகள் நசுக்கப்பட்டார்கள்.

தமக்குத் தேவையான அவுரியைப் பெற ‘திங்காத்தியா’
என்னும் ஒப்பந்த முறையை ஆங்கிலேயர்கள் உருவாக்கியிருந்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1830-1895)
அவுரி வாணிபம் மிகுந்த ஆதாயத்தை ஆங்கிலேயர்களுக்கு
அளித்து வந்தது. உலக அளவிலான சந்தை அவுரிக்கு இருந்தது.
துணிகளுக்கு நீலச்சாயம் தோய்க்க உதவும் மூலப்பொருளாக
இது இருந்தமையே இதற்குக் காரணமாகும்.
1890இல் வேதியியல் சாயத்தை ஜெர்மனி கண்டுபிடித்த பின்னர்
அவுரியின் மதிப்புக் குறையலாயிற்று என்றாலும்
முதல் உலகப்போரின்போது ஜெர்மானியரின்
வேதியியல் சாயங்கள் அருகிப் போன நிலையில்
மீண்டும் அவுரிப் பயிர், விலை ஏற்றம் அடைந்தது.
இதனால் ஆங்கிலேயர்கள் கொள்ளை இலாபம் ஈட்டினர்.
அவுரி பயிரிடமாட்டோம் என்று பெரிய போராட்டம் நடந்திருக்கிறது.
இந்தப் போராட்டம் “சம்ப்ரான் சத்தியாகிரகம்”
என்றழைக்கப்படுகிறது.
காந்தியின் விடுதலைப் போராட்டத்தில் அவுரியும் குரல்
கொடுத்த வரலாறு முக்கியமானது.
அப்படித்தான் கரும்பும்.
தங்கள் குளிர்ப்பிரதேசத்தில் பீட்ரூட்டிலிருந்து சர்க்கரை தயாரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு சர்க்கரை அதிகமாக கொடுக்கும் கரும்பை விளைவிக்கமுடியவில்லை.
பீட்ரூட்டிலிருந்து எடுக்கமுடியும் சர்க்கரையின் அளவு
கரும்புடன் ஒப்பிடும் போது சொற்பம். சர்க்கரை
ஒரு சிலருக்கான நுகர்ப்பொருளாக மட்டுமே இருந்தது
அவர்கள் தேசத்தில் அதனால் தங்கள் காலனி ஆதிக்கத்திலிருந்த
இந்து மகாசமுத்திர தீவுகளான ஜாவா, சுமுத்திரா, மொரிஷியஷ்
பகுதிகளி ல் கரும்பு பயிரிட்டு கரும்புத்தோட்டத்தில் வேலை செய்ய
கப்பல் கப்பலாக நம் மனிதர்களை ஏற்றுமதி செய்தார்கள். .
கரும்புத் தோட்டத்திலே - ஆ!
கரும்புத் தோட்டத்திலே
ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும்
மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
கண்ணற்ற தீவினிலே - தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார் - அந்தக்
கரும்புத் தோட்டத்திலே.
என்று பாரதி கண்ணீர்விட்டது அதிகாரத்திலிருப்பவர்களின்
சர்க்கரை இனிப்பை
எதுவும் செய்யமுடியவில்லை!!

தேயிலை காஃபி ரப்பர் கொக்கோ என்று அவர்களின் கச்சாப்பொருள்
தேவைகளுக்கு தங்கள் காலனி ஆதிக்க மக்களின் வாழ்க்கையை
சிதைத்தார்கள். இன்றும் அதுவே வேறொரு வேடத்துடன்
அரங்கேறி கொண்டிருக்கிறது. அவர்கள் தூங்கி ஓய்வெடுக்கிறார்கள்.
நம் பிள்ளைகள் தங்கள் தூக்கம் கெடுத்து அவர்களுக்காக
கணினி அடிமைகளாய் இருக்கிறார்கள்.
தாவர அரசியல், பூகோள அரசியல் . கனிம அரசியல்,
எண்ணெய் அரசியல் எல்லாமும் தான்
அதிகார அரசியலின் முகமாக இருக்கின்றன
அன்றும் இன்றும்..

1 comment:

  1. //நம் பிள்ளைகள் அவர்களுக்கு இப்போ கணனி அடிமைகளாக உள்ளார்கள்//
    உண்மை. மூளை உழைப்பை சுரண்டலுக்கு பலியிடும் இவர்களை "கணனி கூலிகள்" எனவும் அவர்கள் சுட்டுவதை அறிந்திருக்கிறேன்.

    வரலாற்று ரீதியான உண்மையை சொல்லும் நல்ல பதிவு.

    ReplyDelete