Friday, September 17, 2021

சமூக நீதியின் அரசியல்

 நான் தந்தை பெரியாரைக் கொண்டாடுபவள்.

அவரை ஓரளவுக்கு வாசித்தவள்.
இந்த இரண்டு வரிகளை எழுதித்தான் அடுத்த வரிகளுக்கு
நகர வேண்டியதிருக்கிறது.
தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப் 17
சமூக நீதி நாள் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி தந்தாலும் இம்மாதிரி அறிவிப்புகளின் அரசியல் கவலை அளிக்கிறது.
சமூக நீதி என்பது என்ன?
சமூக நீதி பயணத்தில் நீதிக்கட்சி காலம் தொட்டு
திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது என்ப
தை மறுக்கவில்லை. ஆனால்,
பெரியார் பிறக்கவில்லை என்றால் ?
என்று பேசுவது பகுத்தறிவல்ல.
பெரியார் தான் இந்திய மண்ணுக்கே சமூக நீதியைக் கற்பித்தவர்
என்ற மிகைப்படுத்தல் பெரியாருக்கும்
பெருமை சேர்க்கவில்லை.!
நான் வாழும் மராத்திய மண்ணில் புரட்சியாளர் அம்பேத்கரை
தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளாத ஒடுக்கப்பட்ட மக்கள்
இன்றும் உண்டு. ஆனால் எவரும் இன்றுவரை
அம்பேத்கர் பிறக்கவில்லை என்றால் நீ
செருப்பு போட்டு நடந்திருப்பாயா என்றோ
எல்லாம் அம்பேத்கர் போட்ட பிச்சை என்றோ
பேசுவது இல்லை.
ஆனால் பெரியாரின் திராவிட இயக்கம் வழி வந்தவர்கள்
எல்லோருமே
பெரியார் பிறக்கவில்லை நீ என்னவாக இருந்திருப்பாய்?
என்று கேட்பார்கள். மேம்போக்காக பார்த்தால் அவர்கள் கேள்வி
நியாயம் போல தோன்றினாலும் அந்தக் கேள்வியில்
வெளிப்படுவது நிலவுடமை சமூகத்தின் அதிகாரமும் சூத்திரனின் அதிகாரமுகமும் தான். இதைச் சுட்டிக் காட்டினால் என்னைப் போன்றவர்களை “நன்றி கெட்டவர்கள்’ ஆகிவிடுவோம்.!
இப்படித்தான் இங்கே பெரியார் மண்ணும்
பெரியார் மண்ணின் மைந்தர்களும் இருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு
இந்த அறிவிப்புகளின் ஊடாக வேறொரு அரசியல் நோக்கம்
இருக்கிறது. அது இந்துத்துவ மோதி அரசுக்கு எதிரானதாக
தன்னை இந்திய அரசியலில் காட்டும் ஆயுதமாக
பெரியாரும் சமூக நீதி நாளும் ஆயுதமாகி இருக்கிறதா
என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டியதிருக்கிறது.
சமூக நீதி என்பது
அந்த நாளைக் கொண்டாடுவது மட்டுமல்ல,
சமூக நீதி என்பது
சமூக நீதியைக் கடைப்பிடிக்கப்போகிறேன் என்று
உறுதிமொழி எடுப்பதுடன் முடிந்துவிடுவதல்ல.
சமூக நீதி என்பது
விளிம்பு நிலை மக்களுக்கு
வாழ்வாதாரங்களை வழங்குவது மட்டுமல்ல,
சமூக நீதி என்பது
சமத்துவ புரங்களை கட்டி
வாடகைக்கு விடுவதல்ல.
சமூக நீதி என்பது அதையும் தாண்டி
அரசியல் அதிகாரத்தில் சமபங்கு, சம வாய்ப்பு கொடுப்பது.
அதிகாரப்பங்கீட்டில் சமூக நீதியை நிலை நிறுத்துவது.
திமுக அரசு அறிவிப்புகள் வரும்போது உயர் பதவிகளில்
சமூக நீதி செயல்படுகிறதா ?
சரி.. இதையும் தாண்டி.. சமூக நீதியைப் பேசும் திமுக
என்ற மாபெரும் அரசியல் கட்சியில்
அதிகாரமிக்க பதவிகளில் மாவட்ட வட்ட தலைவர் செயலாளர்களாக
இருக்கும் ஒடுக்கப்பட்டவர்கள்/ சிறுபான்மையினர்/
பெண்கள் எத்தனை பேர்?
சமுக நீதி என்பது ஒரு செயல்திட்டமாகுமா?
எப்படி ?
என்னவெல்லாம் செய்யப்போகின்றீர்கள
ங்கோவன்

1 comment:

  1. மிக அருமை எனது எண்ணோட்டங்களை கண்முன் கொண்டு வந்து வரைந்து விட்டீர்கள் ஒவ்வொரு செயலுக்கும் ஓர் ஆதாயம் தேடும் லாப அரசியல்வாதிகள் அதற்கு ஆய்வும் பின்புலம் அறியா மக்களும் இருக்கும்போது என்ன செய்ய வாழ்த்துகள் வாழ்த்துகள்

    ReplyDelete