Friday, July 23, 2021

தரவுகளின் புனைவுலகம்


 

பிரபலங்களைப் பற்றிய குறிப்புகளில்

அதீதப் புனைவுகள் . ( நாஞ்சில், அம்பை..)
நாஞ்சில் நாடன் ருத்திராட்ச மாலையுடன்
அம்பை "தண்ணியடிக்க" கதை எழுதும் அவசரத்தில்..

நாஞ்சில் நாடன்:
"சில ஆண்டுகளுக்கு முன்னர், இலக்கியச் சந்தையில்
மதிப்பூட்டப்பட்ட மாத இதழ் ஒன்றில் யுவ இலக்கியவாதி
ஒருவர் எழுதினார், நாஞ்சில் நாடன் முறையாக
சைவ இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்த வம்சா வழியில்
வந்தவர் என்று. எனக்கு உடுத்திருக்கும் நாலு முழ வேட்டியையும்
உரிந்து போட்டுவிட்டு ஓடலாம் எனும் அளவுக்கு நகை
பெருகியது. என்னைப் பெற்ற அப்பா ஐந்தாம் வகுப்பு
தோற்ற ஓர்நேர் சம்சாரி. பாட்டம் பயிரிட்டு
ஏழு பிள்ளைகளை வளர்த்தவர். அம்மா கல்யாணமாகி
நாஞ்சில் நாட்டுக்கு வந்தபிறகு தமிழ் எழுத்துக் கூட்டி
வாசிக்கப் பழகினார். ஆனால் நினைத்துக்
கொண்டிருப்பார்கள் போலும்! நாம் ஏதோ மிராசுதார் – ஜமீன்தார் – பண்ணையார் பரம்பரை தலைமுறை தலைமுறையாக
என்று. சைவத் திருமுறைகளை எழுத்தெண்ணிக்
கற்றிருப்போம் என்று. கடவுளே! நாலணாவுக்கும்
எட்டணாவுக்கும் எங்கப்பன் பட்டபாடு! வீட்டு வாசலில்
பூடம் போட்டு அமர்ந்திருந்த புலைமாடனும் புலைமாடத்தியும்
சாட்சி. எவனோ ஒருத்தன் எழுதுகிறான்,
எவனோ ஒருத்தன் வெளியிடவும் செய்கிறான்,
வெட்கமில்லாமல்."
என்ன இப்போ ...???
உங்கள் கழுத்தில் யாரோ ஆசையோடு
ருத்திராட்ச மாலை போட்டு பார்க்கிறார்..
உங்களுக்கு அந்த கெட்டப் எப்படி இருக்கும்னு
கும்பமுனியுடன் சேர்ந்து நானும் சிரிக்கிறேன்..
. ஹாஹாஹா...
இது கூடப் பரவாயில்லை நாஞ்சில்..
எங்க ஊரு அம்பைக்கு வந்த நிலையைப்
பார்த்தீர்களா... ??!!
தமிழ் இலக்கியம் வளர்ப்பதற்கு இப்போ எங்கள் அம்பை
கட்டாயம் ‘தண்ணியடிக்க” என்ற கதையை
எழுதியாக வேண்டும்.
அம்பையின் முக நூல் (15 ஜூலை ) பதிவிலிருந்து
திரு. டி.வி. ராதாகிருஷ்ணன்அவர் எழுதிய
”தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்கள்”
என்ற புத்தகத்தை அனுப்பி இருந்தார். ….
நான் எழுதாத புத்தகங்களும் உள்ளன. "பயணங்கள்"
என்ற நாடகமும் "தண்ணியடிக்க" என்ற கதையையும்
நான் இனிமேல்தான் எழுதவேண்டும்!......
இத்தனை தகவல் பிழைகளும் நாளைக்கு வேறு
யாராவது ஆராய்ச்சி என்ற பெயரில் குறிப்பிட்டு அது
’ஆராய்ச்சித் தரவாகிவிடும். அதைத் தடுக்கத்தான்
இந்தப் பதிவு. இதிலுள்ள மற்ற எழுத்தாளர்களும்
அவரவர் குறிப்புகளைப் பார்த்துக்கொள்ளவும்
இதைப் பதிகிறேன்.
இனி வரும் பதிப்புகளில் என் பெயரை நீக்கும்படி
திரு. ராதாகிருஷ்ணனிடம் கூறியிருக்கிறேன். “
அப்புறம் தமிழ்ப்படங்களில் நடித்த ஒரு சினிமா
நடிகையின் முதல் கணவர் பெயரை விக்கிப்பீடியாவில்
பார்த்துவிட்டு.. அவரிடமே கேட்டபோது….

”இனிமேதான் அந்த ஆளைக் கண்டுப்பிடிச்சி
கல்யாணம் பண்ணிக்கனும்னு ‘ சொன்னது நினைவுக்கு வருகிறது.
வரலாறு ரொம்ப ரொம்ப முக்கியம் சரவணா
மறந்திடக்கூடாது..
தமிழ் , கலை இலக்கிய உலகம் தன் அதீத புனைவுகளில்
தரவுகளைக் காப்பாற்றி வருகிறது.!

No comments:

Post a Comment