Tuesday, August 25, 2020

ஞானப்பெண்ணை வாழவிடுவதில்லையே ..ஏன்?

 அறிவான பெண்களுக்கு

அதுவே சுமையாகிவிடுகிறதா?
 
Wisdom is differ from knowledge.. 
 
எல்லா மனிதர்களுக்கும் பசி உண்டு
தாகம் உண்டு.. காதல் உண்டு
கண்ணீர் உண்டு.
அது அவளுக்கும் உண்டு.
ஆனால் அவளுடையை சாதாரண 
அபிலாஷைகளை அவளைச் சுற்றி 
இருக்கும் ஆண்கள் எந்த மாதிரி 
எடுத்துக் கொள்கிறார்கள்?
ஏன் அவளை விலக்கி வைக்கிறார்கள்?
அவள் தனித்துவமானவள் என்று
சொல்லுவதன் ஊடாக அதன் அடித்தளத்தில்
அவள் தனித்துவிடப்பட வேண்டியவள்
என்பதும் சேர்ந்தே வெளிப்படுகிறது.
அவளுடன் உரையாடுகிறார்கள்
விவாதம் செய்கிறார்கள்
ஏன் காதலிப்பதாக கூட பாவனை
செய்கிறார்கள்.
ஆனால் அவளின் சூடு தாங்காமல்
போட்டு உடைத்துவிட்டு கடந்து
சென்றுவிடுகிறார்கள்.
அவர்களால் அவளை நெருங்கமுடிகிறதே தவிர
அவளை தங்களுக்குள் ஏற்றுக்கொள்ள
முடியாமல் அல்லது தெரியாமல்
அவஸ்தைப் படுகிறார்களோ?!!

Sakthi Vikatan - 06 July 2009 - காரைக்கால் ...

 

எனக்குப் பிரியமான என் புனிதவதிக்கு
அதுதானே நிகழ்ந்தது?
 
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்நெஞ் சவர்க்கு.”
 
(திருவந்தாதி)

No comments:

Post a Comment