Saturday, August 15, 2020

இந்திய தேசியக்கொடியின் பயணம்

 கொடி எண்: 1

 

ஆக 07, 1906ல் கொல்கொத்தா க்ரீன்பார்க்கில் ஏற்றப்பட்ட கொடி.

 

கொடி எண்: 2

 

1907ல் பாரீசில் Madame Coma ஏற்றிய கொடி.

கொடி எண் : 3

அன்னிபெசண்ட் அம்மையாரும் லோகமான்ய திலக் அவர்களு 1917 ஏற்றிய கொடி.

கொடி எண்: 4

1921ல் விஜயவாடா காங்கிரசில் இளைஞர்கள் கொண்டுவந்தக் கொடி. ஆரஞ்சு இந்துக்களையும் பச்சை இசுலாமியர்களையும் குறிக்கிறது என்பதை ஏற்றுக்கொண்ட காந்தியடிகள் இந்து இசுலாமியர்கள் அல்லாத இந்தியர்களை நடுவில் வெள்ளையாக சேர்க்க சொல்கிறார்! கொடி எண் 5ஐப் பாருங்கள்!

கொடி எண்: 5

  1931ல் கொடியில் வெள்ளை நிறம் இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் நடுவில் வந்து விடுகிறது. காந்தியின் இராட்டை வெள்ளை நிறத்தின் மீது

ஏற்றி வைக்கப்பட்டு இராட்டை சுழல ஆரம்பிக்கிறது.

கொடி எண்: 6

ஜூலை 22, 1947 ல் இந்திய தேசியக்கொடி காந்தியின் இராட்டை சின்னத்தை அகற்றிவிட்டு அசோகரின்

தர்ம சக்கரத்தை கொண்டு வந்து கொடியின் மையத்தில் வைத்துவிடுகிறது. 

இப்படியாக தர்மசக்கரம் சுழல ஆரம்பிக்கிறது.

நியாயம் தர்மங்கள் எல்லாமே ஏன் வெள்ளை நிறத்தில்

.. வெள்ளை நிறம் யாரை அடையாளப்படுத்துகிறதோ

அவர்களுக்கு மட்டும் தான் தர்மசக்கரம்.. கட்டுப்படுத்தும்

என்பதாலா..

அல்லது தர்மசக்கரத்தை மூவண்ணங்களுக்கும் மையமாக்கியதும் அதை நோக்கிய விடுதலையும் தான்

தேசியக்கொடி முன்வைக்கும் விடுதலை அடையாளமா..

..ரொம்ப யோசிக்க வேண்டியதில்லை.

இப்படியாக தேசியக்கொடி இன்றைய வடிவத்தைப்

பெற்றுவிட்டது. இதை மாற்ற வேண்டும் என்று இன்றுவரை

யாரும் குரல் கொடுக்கவில்லை!  இப்படியாக தேசியக்கொடி

காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஜெய் ஹிந்த்.

ஜனகண மன.


No comments:

Post a Comment