Wednesday, September 11, 2019

ஜெயமோகனின் விஷ்ணுபுர பிம்பம்

Image result for ஜெயமோகன்
ஜெயமோகன் என்ற எழுத்தாளருக்கு அவருடைய
 கருத்தை முன்வைப்பதற்கான கருத்து சுதந்திரம் 
இருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை. 
ஆனால் ஜெயமோகன் என்ன சொல்கிறார்
 என்பதைச் சுற்றியே எப்போதும் வலம் வந்து 
கொண்டிருப்பதும் ஜெயமோகனை அனைத்துக்குமான 
விஷ்ணுபுர அவதாரமாக மாற்றியது 
ஜெயமோகனோ ஜெயமோகனைச் சுற்றி இருக்கும்
 ஒளிவட்டமோ அல்ல. 
மாறாக ஜெயமோகனை விமர்சிக்கிறோம் பேர்வழி 
என்று எதற்கெடுத்தாலும் ஜெ.மோ வை
 ஓர் அளவுகோலாக மாற்றிக் கொண்டிருப்பவர்கள் தான்!
ஜெ.மோ தன்னைப் பற்றி விமர்சிக்கும் எவரையும்
எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து
களத்தில் நிற்பதன் மூலம் அவர் தன் பிம்பத்தை
மிகவும் கனமாக கட்டமைத்திருக்கிறார்.
ஆனால் தொடர்ந்து ஜெ.மோ வை விமர்சனம்
 என்ற பெயரில் கவனக்குவிப்பை அவர் மீது
 தொடர்ந்து எல்லா விடயத்திலும் செலுத்துவதன் மூலம்
 அவர் தன் படைப்புகளையும் தாண்டிய
 இன்னொரு பிம்பமாக மாற்றம் பெறுகிறார். 
இதை ஏனோ அவரை விமர்சிக்கும் ஆளுமைகளும் கூட 
கவனிக்கத் தவறி இருப்பதாகவே நினைக்கிறேன்.

ஜெ.மோ வை நானும் வாசிக்கிறேன். ரசிக்கிறேன்.
விமர்சிக்கிறேன். முரண்படுகிறேன்.
முரண்வெளி உரையாடல்களை சாத்தியப்படுத்த
முயற்சிக்கிறேன்.
இறுதியாக,
அளவுகோல்கள் எப்போதுமே ஆபத்தானவை தான்.

No comments:

Post a Comment