Monday, April 8, 2019

தேர்தல் அறிக்கைகள் ..

மோதி


தோளில் கை போட்டு சிரிப்பதெல்லாம் பார்க்க
நல்லாதான் இருக்கு. ஆனா தேர்தல் அறிக்கைகள்’
கை குலுக்கவில்லையே!
1)   பொதுசிவில் சட்ட த்தை அமுல் படுத்தக்கூடாது – அதிமுக.
பொதுசிவில் சட்ட த்தைக் கொண்டு வந்தே தீருவோம் – பா.ஜ.க

2)   ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் – அதிமுக.
பா.ஜ. க அறிக்கை அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை

மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு
தேசியக் கட்சிகள் முரண்படும் புள்ளிகள்

பாரதிய ஜனதா கட்சி
1)ஆயோத்தியில் ராமர் கோவில் கட்ட விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.
.
2)சமஸ்கிருத மொழியை முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் சமஸ்கிருத மொழி கற்றுத்தரப்படுவது உறுதி செய்யப்படும்.
3)அழியும் நிலையில் இருக்கும் மொழிகளுக்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
4)சபரிமலை தொடர்புடைய நம்பிக்கை, மரபு, வழிபாடு ஆகியவற்றை விரிவாக உச்சநீதிமன்றத்தின் முன் எடுத்துரைப்பதை உறுதி செய்வதற்காக எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும். நம்பிக்கை தொடர்புடைய பிரச்சனைகளில் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு வழங்கப் பாடுபடுவோம்.
5)ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படும்

காங்கிரசு கட்சியின் அறிக்கையில்..
1). படைப்பாற்றலின் சதந்திரத்தை பாதுகாப்பது உறுதி செய்யப்படும்.
2)கலைத்துறையினரின் சுதந்திரம் உறுதி செய்யப்படும். தணிக்கை குறித்த எந்த அச்சமும் இல்லாமல் அவர்கள் சுதந்திரத்தை அனுபவிக்கலாம். அதனை தடுக்க நினைக்கும் குழுக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
3) பதிப்புரிமை சட்டம் வலிமையாக்கப்படும்.
4)   ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்படுள்ள சிறப்பு அந்தஸ்து அவ்வாறே நீடிக்கும். எந்த மாற்றமும் அதில் ஏற்படுத்தப்படாது.

( நன்றி . பிபிசி தமிழ்)

No comments:

Post a Comment