Monday, April 15, 2019

நாய்கள் ஜாக்கிரதை..


நாய்கள் சிலருக்கு அந்தஸ்தின் அடையாளமும் கூட
நாய்களுக்குப் பைத்தியம் பிடிக்க
பருவ நிலை காரணமில்லை.
எப்போது வேண்டுமானாலும் எந்த நாய்க்கும்
பைத்தியம் பிடிக்கலாம்.
நாய்கள் ஜாக்கிரதை.
இந்தப் பைத்தியக்கார நாய்கள் கடித்தால்
ஐந்து வருஷம் தொப்புளைச் சுற்றி
ஊசிப்போட வேண்டும்.
எப்படிப் பார்த்தாலும்
நாய்க்கடி வைத்தியம் தான்..
உங்களைக் காப்பாற்றிக்கொள்ள
பைரவனைக் கும்பிடுங்கள்..
ஸ்ரீ பைரவ நமஹ.
கொஞ்சம் நன்றியுள்ள நாய்க்கடி என்றால்
தொப்புளைக் காப்பாற்றி விடலாம்.
இல்லை என்றால் தொப்புள் வீங்கி
வெடித்துவிடும்..
தொப்புள் வீங்கி வீங்கிப் பெரிதாகித்
தரையில் தொங்கும்.
முகத்தைக் கூட மறைத்துவிடும் அபாயம் உண்டு.
நாய்கள் ஜாக்கிரதை..
நாய்களின் கழுத்துச் சங்கிலியை இழுத்துப் பிடித்துக்
நடக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
நாய்ச்சங்கிலி அழகாக இருக்கிறது என்பதற்காக
உங்கள் கழுத்தில் மாட்டிக்கொள்ளாதீர்கள்,
நாய்கள் குரைத்துக் கொண்டே
கூட்டம் கூட்டமாக வருகின்றன..
நாய்கள் ஜாக்கிரதை.

2 comments:

  1. ஸ்ரீ பைரவ நமஹ...
    ஸ்ரீ பைரவ நமஹ...
    ஸ்ரீ பைரவ நமஹ...

    ReplyDelete
  2. அனைத்து நாயும் பைத்தியக்கார நாயாக இருக்குது
    எந்த நாய் கடிச்சாலும் 5 வருஷம் ஊசி நிச்சயம்

    ReplyDelete