Sunday, February 11, 2018

பார்வதீ

Image result for lord shiva paintings artமழையும் வெயிலும் 


மண்ணும் மனிதர்களும்
 பயமுறுத்துகிறார்கள்.
கடலடியின் பவளப்பாறைகள்
காலடியில் அசைகின்றன.
வெற்றிடத்தில் ராகுவும் கேதுவும்
மோதிக்கொள்கின்றன
பிரபஞ்ச வெளியில் பரணி
மேஷத்திடம் தோற்றுப்போகிறாள்
காந்தாரி கட்டவிழ்க்கிறாள்.
கர்ப்பகிரகத்தில் சூர்யகிரஹணம்.
அடியே பார்வதீ.. தீ..
சுடலையாண்டவன்  மயானத்தீயில்
எரிவது தெரியாமல்
என்ன தவம் செய்கிறாய்..?


1 comment: