Wednesday, June 29, 2016

அரிவாள் கலாச்சாரம்





ஒரு பெண் கொலை செய்யப்பட்டு துடித்துக்கொண்டிருப்பதை
வேடிக்கைப் பார்த்த சமூகம்.
அவள் உடலில் ஒரு துண்டு கைக்குட்டையைக் கூட
போடாமல் கடந்து சென்ற கூட்டம்.
இறந்துப்போனவளின் சாதி என்ன?
கொலை செய்தவனின் ம்தம்/ சாதி என்ன?
என்று ஆராய்ச்சியில் நாட்டம் கொண்ட சமூகம்.
இதை அரசியலாக்குவதில் சுயலாபம் தேடும்
மானங்க்கெட்ட தலைவர்கள்
இம்மாதிரி சம்பவம் தன்னுடையை பெண்ணுக்கும்
எப்போதும் வேண்டுமானாலும் நடக்கலாம்
என்பதை இன்னும் உணர்ந்து கொள்ளாத பெற்றோர்
யாதர்த்தம் என்ற பெயரில் அரிவாள்
கலாச்சாரத்தை பரப்பி இருக்கும் திரைப்படங்களும்
தொலைக்காட்சி தொடர்களும்.....
கூலிப்படைகளை ஏவிவிட்டு திரைமறைவில்
மறைந்திருக்கும் சமூகம்..
.....
ஒரு கொலையைப் பார்த்து அச்சத்திம் மவுனமாக
இருந்ததாகச் சொல்கிறார்களே..
இந்த அச்சத்தை ஊட்டியது யார்?
காவல்துறையின் கெடுபிடிகள் இவ்வளவு கேவலமான
அச்சம் தருபவையாக இருப்பதற்கு என்ன காரணம்?
கொலை செய்துவிட்டு தப்பித்துவிடலாம் என்ற
எண்ணத்தை ஏற்படுத்தியதில் நம் அரசியல் தலைவர்களின்
ப்ங்கு என்ன?
ஆண் பெண் உறவில் ஒரு பெண்ணுக்கு ஆணை நிராகரிக்கும்
சகல உரிமையும் உண்டு என்ற அடிப்படை தர்மத்தைக்கூட
நம் இளைஞ்ர்கள் ஏன் அறிந்து கொள்ளவில்லை?

நம் கல்வி நிறுவனங்கள் , சமூக ஆர்வலர்கள்..
தொடர்ந்து நடக்கும் இச்சம்பவங்கள் குறித்து இதுவரை
என்ன் செய்திருக்கிறார்கள்.?

பணத்தை எப்படியும் சம்பாதிக்க வேண்டும் என்று மட்டுமே
சொல்லிக்கொடுக்கும் நம் வியாபரக்கல்வி நிறுவனங்கள்
இளைஞர்களின் வாழ்வியலை படுகுழியில் தள்ளி இருக்கின்றன.

அரிவாள் கலாச்சாரத்தை யதார்த்தம் என்ற பெயரில்
கொடி கட்டி பறக்கவிட்ட திரைப்படங்களின் கொடூரமுகமிது.

கேள்விகள் மட்டுமே என் வசம்.
இதற்கான பதிலகளை எவரிடமும் கேட்கவில்லை.

முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை
அனைத்து மாணவர்களுக்கும் யோகா பயிற்சி கட்டாயப்பாடமாக்கப்பட
வேண்டும்.
உடல்வலிமையும் ஒழுக்க கட்டுப்பாட்டையும் தரும் இராணுவக்கல்வியும்
அவசியம் அவசியம் அவசியம்.
10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியப்பின் ஒவ்வொரு மாணவன் மாணவியும்
கட்டாய இராணுவக்கல்வி ஓராண்டு பயிற்சி பெற்ற பிறகுதான்
மேற்படிப்பைத் தொடர முடியும் என்ற ஒரு சட்ட்த்தைக் கொண்டுவர
வேண்டும்.
இது மட்டும் தீர்வல்ல என்றாலும் மாற்றத்திற்கான ஒரு
ஆரம்பமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

No comments:

Post a Comment