Sunday, June 26, 2016

சோமேஸ்வரா



கடலடியில் இன்னும் ஆறாமல் இருக்கிறது
சோமேஸ்வ்ரியின் பெருமூச்சு.
தோட்டத்தின் சிதறிய பன்னீர்ப்பூக்கள்
கடலில் மிதக்கின்றன.
பேரிரைச்சலுடன் இடியும் மின்னலுமாய்
கோட்டையின் மதில்கள் உடையும்
அகால வேளையில்
சென்னி மல்லிகார்ஜூனா
என்னை அழைக்கிறாய்.
விரிந்திருக்கும் உன் வெண்கொற்றகுடைக்குள்
ஒதுங்கும் காலம் கடந்துவிட்டது.
முழுவதுமாக மழையில்
நனைந்துவிட்டேன்.
சிதலமாகிப்போன கடற்கோபுரத்தில்
தீட்டிய ஓவியங்கள்
செதுக்கிய கல்வெட்டுகள்
எதிலும் எனக்கான சாட்சியம் இருக்கப்போவதில்லை.
எப்போதாவது வழிப்போக்கர்கள்
இவ்வழியாக வரக்கூடும்.
அவர்கள் விருப்பப்படி எதையும் எழுதட்டும்.
வாழும்போது எழுதமுடியாத ரகசியங்களை
வழிப்போக்கனாக வந்தவன் எழுதிவிடவா போகிறான்?
சோமேஸ்வரா... ஈஸ்வரா..

No comments:

Post a Comment