Tuesday, June 7, 2016

அம்ரிதா ப்ரிதம்






வாரத்தில் ஒரு முறையாவது அம்ரிதா ப்ரிதம் வாசிக்கவிட்டால்
என்னவோ பித்துப்பிடித்த மாதிரி இருக்கும்.
என்னை வசீகரித்த அந்த எழுத்துகள்.. 
இதோ இந்த நிமிடத்திலும் என்னால் அவளுடைய
ஒரு வரியைக் கூட எழுதிவிட முடியாது.
என் மீள் மீள் வாசிப்புகளில் அவள்
என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக எரித்துக் கொண்டிருக்கிறாள்.
அவளுக்கு சிகிரெட் துண்டுகளை விட்டுச்சென்ற ஷாகிர்
எனக்கு வெற்றிடத்தை விட்டுச்சென்றிருக்கிறான்.
ஜீவராசிகள் வாழ்வதற்கு காற்று இருக்கும்வரை
பூமியில் எதுவும் வெற்றிடமில்லை என்பது மட்டும்தான்
இத்தருணத்தில் ஆறுதல் தரும் உண்மையாக
அணைத்துக்கொள்கிறது.
அந்தக் கடைசிக்க்டிதத்திற்காக நானும் காத்திருக்கிறேன்.
அதை வாசிக்கப்போகிறேனா
எழுதப்போகிறேனா
காலம் இன்னும் முடிவுசெய்யவில்லை.
------
Amrita Pritam
i
There was a pain
That like cigarettes
I inhaled quietly
Just a few poems remain
That I flicked along
With ash from the
Cigarettes

No comments:

Post a Comment