Monday, June 6, 2016

மழைக்கவிதை




குடைகள் விரிவதற்கு தயாராகிவிட்டன..
மழைக்கால காலணிகள் வாங்கியாகிவிட்டது.
சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணி
வேகமாக நடக்கிறது.
தண்டவாளங்களில் சிதறிக்கிடக்கும் குப்பைகளை
அவசரமாக அள்ளிக்கொண்டிருக்கிறார்கள்
அப்பளமும் வடகமும்
டப்பாக்களில் பொரிவதற்கு காத்திருக்கின்றன.
கோபுரத்தில் விழுந்த காக்கையின் எச்சத்திலிருந்து
ஆலமரத்தின் விதை முளைவிட விழித்திருக்கிறது...
புழுக்கம் தாளாமல் புறாக்கள்
தனித்தனியாக பெருமூச்சில்.
இன்றொ நாளையோ
இன்னும் இருபத்திநாலு மணிநேரத்தில்
மழை வந்துவிடும்.
அறிவித்துவிட்டார்கள் அவர்கள்.
படபடப்புடன் கண்ணாடி சன்னலைத் திறக்கிறேன்.
சூல்கொண்ட கருமேகங்கள் மெல்ல அசைகின்றன.
தொட்டில் அழுகிறது
அணுகுண்டுகள் துளைத்த என் பூமியில்
பூக்கள் பூக்காவிட்டாலும் பரவாயில்லை.
புல் முளைக்குமா .,,?.
காத்திருக்கின்றன  என் கவிதைகள்

No comments:

Post a Comment