Monday, July 4, 2016

நினைவுக்கூட்டல்





நினைவுக்கூட்டலில் பூஜயமாய் எண்களாய்
மாறி மாறி ..
எதைக் கழித்தால் எது மிஞ்சும்
உன்னைக் கழித்துவிட்டால்
என் அனுபவத்தொட்டில் அம்மணமாகிவிடுமோ?
சுயம் தள்ளாடுகிறது.
எதையாவது போர்த்திக்கொள்வதில்
காலம் கழிகிறது.
இருளின் மணம் பகலில் விரட்டுகிறது.
பூக்கள் செடியில் மட்டும் மணப்பதில்லை.
செடியிலிருந்து பிய்த்து எடுத்தப்பிறகும்
அதே மணம்..
இலைகளின் உராய்வுகள் பூக்களின்
இதழ்களில் தெரிவதில்லை.
அதனாலேயே பூக்கள் காயப்படவில்லை
என்பதை உண்மையாக்கிவிட்டார்கள்..
மழைக்காக ஒதுங்க்கிய மைனாவின்
அழுகுரல்
துணை அருகில் அமர்ந்தவுடன்
மவுனத்தில் உறைந்து போகிறது.
கொட்டும் மழையில்
இருள் மேகலை....விலகி
இன்னொரு நாட்டியம்

No comments:

Post a Comment