Wednesday, July 24, 2013

காங்கிரசு பயப்படும் ஹோட்டல் "பில்"

ஹோட்டல் பில்லைப் பார்த்தெல்லாம் காங்கிரசு பயப்பட ஆரம்பித்துவிட்டது
ஏதொ உங்களையும் என்னையும் போல மத்திய தர வர்க்கம் பயப்பட்டால்
அதில் காரணம் இருக்கிறது..
இந்தியாவையே விலைக்கு வாங்கி சுவிஸ் வங்கியில் டெபாசிட் பண்ணுகிற
அளவுக்கு பணத்தில் புரளும் காங்கிரசுக் கூட்டணி.. போயும் போயும்,
ஒரு சின்ன , நட்சத்திர அந்தஸ்த்து கூட் இல்லாத ஹோட்டல் பில்லில்
இருந்த வாசகங்களைக் கண்டு ரொம்ப்வும் கொதித்துப் போய்விட்ட
நிகழ்வு  தொலைக்காட்சி காமெடியை எல்லாம் விஞ்சி விட்டது.

அப்படி என்ன அந்த ஹோட்டல் பில்லில் விசேஷம் என்கிறீர்களா?
அட, ஏதொ இரண்டு வரியை ஹோட்டல் சொந்தக்காரர் தன் வயித்தெரிச்சலைக் காட்டுகின்ற மாதிரி அச்சடித்து "மீண்டும் வருக"
என்ற வாசகத்தின் கீழ் போட்டிருக்கிறார்.




"யுபிஏ கூட்டணி அரசு 2G மற்றும் நிலக்கரி சுரங்கங்களில் அதிகமாக பணத்தை
சாப்பிட்டுவிட்டதால் ஏசி ஹோட்டலில் சாப்பிடுவது என்பது லக்சுரியாகிவிட்டது"

இதற்குப் போய் இளைஞர் காங்கிரசுக்காரர்கள் கோபித்துக் கொண்டு
டில்லியின் ஆதரவுடன் ஹோட்டலை நோக்கி படை எடுத்துச் சென்று
ஹோட்டல் அதிபரைச் சிறைப்பிடித்து  அவரை தோப்புக்கரணம் போட
வைத்துவிட்டார்கள்!

மும்பை, பரேல் பகுதியில் கே யி எம் மருத்துவமனைக்கு எதிராக இருக்கும்  ஆதித்தி வெஜ் ஹோட்டலில் தான் இச்சம்பவம் நடந்திருக்கிறது
 இந்தச் சம்பவத்தை நம்ம மோதி சார் தன் டிவிட்டரில் ரொம்பவும்
கண்டித்து  சகிப்புத்தன்மை இன்மையின் உச்சம் என்று எழுதியிருக்கிறார்.
சாத்தான்  வேதம் ஓதுகிறது என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

2 G யின் தாயகமாக இருக்கும் தமிழ்நாட்டில் ஹோட்டல் அதிபர்கள் இதைப் பின்பற்றி விதம் விதமாக தங்கள் பில்லில் அச்சடிக்கும் ஐடியா உதயமாகலாம்!

அதை எதிர்த்து  சிலர் அச்சடிக்கலாம்.!!

பாவம் தமிழ்நாட்டு ஹோட்டல் பிரியர்கள்!


No comments:

Post a Comment