Thursday, October 27, 2011

ஈழத் தமிழச்சிகளின் வீர வாழ்க்கை –





பெயரிடாத நட்சத்திரங்கள் : பெண் போராளிகளின் கவிதைகள் இலத்தீனமெரிக்க-ஆப்ரிக்க பெண் போராளிகளின் கவிதைத் தொகுதிகள் உலக மொழிகளில் நிறைய வெளியாகி இருக்கின்றன. மிகச் சிறு வட்டங்களில், குறுகிய சுற்றில் மட்டுமே இதுவரை இருந்துவந்த ஈழவிடுதலைப் பெண் போராளிகளின் கவிதைகள் முதன் முதலாக ஒரே தொகுப்பாக வெளியாகி இருக்கிறது. 160 பக்கங்களில் பெண்ணிய இணைய சஞ்சிகையான ஊடறுவும், தமிழகத்தின் புகழ்வாய்ந்த பதிப்பகமான விடியலும் இணைந்து பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் பெயரில் இந்நூலினைப் பதிப்பித்திருக்கிறார்கள். சொல்லாத சேதிகள் துவங்கி பெயரிடாத நட்சத்திரங்கள் வரை ஈழக் கவிதைகளின் பன்முகத் தோற்றங்களும் வளர்ச்சியும் குறித்ததாக 21.1011 அன்று www.gtbc.fm வானொலியில் இடம்பெற்ற நிலாச்சோறு நிகழ்ச்சி அமைந்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்த யமுனா ராஜேந்திரன் – கருத்தாளர்களாக பங்கு கொண்ட றஞ்சி – ஆழியாள் – புதியமாதவி ஆகியோரின் குரல்களை கேட்க இங்கே அழுத்துங்கள்.

http://www.youtube.com/watch?v=NCGj891pMVU

http://www.youtube.com/watch?v=z4UPpiFnYxI

http://www.gtntv.net/?p=6825

No comments:

Post a Comment