Wednesday, August 4, 2010

கோவிந்தா !.க்கோவிந்தா!! .. யாருக்கு?




திருப்பதி பாலாஜிக்குச் சொந்தமான நகைகளின் மதிப்பு ரூபாய் 35000 கோடி.
ஆபரணங்களைத் தவிர்த்து பாலாஜிக்குச் சொந்தமான அசையும், அசையா
சொத்துகளை எல்லாம் சேர்த்து கூட்டிக்கழித்தால் இன்றைக்கு ஒரு தனி மாநிலத்தின் வருவாயை விட அதிகம் வருவாய் ஈட்டும் நபர்
திருப்பதி பாலாஜிதான்!
பாவாம் இவ்வளவு வருவாய் வந்தும் அவர் குபேரனிடம் வாங்கிய கடனுக்கு
வட்டியைத் தான் கட்டிக்கொண்டிருக்கிறார் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது!

இப்போதெல்லாம் அடிக்கடி பாலாஜியின் சொத்து மதிப்புகள் குறித்து
பத்திரிகைகள் எழுதி எழுதி என்னைப் போன்றவர்களையும் பாலாஜியைப்
பற்றி நினைக்க வைத்துவிட்டார்கள்.
மனவளக்கலை வேதாந்திரி ஷேசாத்திரி அவர்கள் மலையில் சமாதியான மகானின் அருள் சூழ்ந்த தளமாக திருப்பதியைக் காட்டுகிறார்.
கொஞ்சம் அறிவியலும் கொஞ்சம் தத்துவமும் கலந்து கொடுக்கும்
சித்த மருத்துவம் அது
.

புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
பிட்சுகளும் பிக்குகளும் திருப்பதி மலையிலிருந்து இறங்கி வருகிறார்கள்.
கூட்டம் இல்லை. மலைச்சூழந்த அந்த தளத்தில் மனம் தியானத்தில்
மிதக்கிறது. மயிலிறகாய் மலைக்காற்று நம்மைத் தொடுகிறது.
பெரிய பெரிய உண்டியல்கள் இல்லை. கருவறை தரிசனத்திற்கு காத்திருப்புகள் இல்லை. அருகில் சென்று சாந்தம் தவளும் புத்தனின் காலடியை மலர்களால் அர்ச்சித்த மனம் இலகுவாகிறது. திருப்பதியில் இருப்பது புத்தர்தான் என்று இன்றும் பவுத்தர்கள் உரக்கத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்காக அவர்கள் சொல்லும் காரணங்கள்:

> திருப்பதி சிலையை யாரும் அலங்காரமில்லாமல் பார்க்க அனுமதி இல்லை.

> இந்தியாவிலேயே மனைவி/துணைவி இல்லாமல் தொண்டர்கள் வரிசை
இல்லாமல் தனித்திருக்கும் விஷ்ணு ,திருப்பதி பாலாஜி தான். ஏன்?

> மலையை விட்டு கீழே இறங்கியதும் திருச்சானூர் என்ற இடத்தில் தான்
பாலாஜியின் மனைவி பத்மாவதி இருப்பதாகக் காட்டுகிறார்கள்.

> விஷ்ணுவின் திருவுருவச்சிலைகளுக்கு நான்கு கைகள், அதில் இரண்டு
கைகளில் சங்கு சக்கரம் இருக்கும். ஆனால் திருப்பதி பாலாஜிக்கு
இருப்பது இரண்டு கைகள் மட்டும் தான். அதுவும் சங்கு சக்கரம் கைகளில் இல்லை. அவர் தோள்பட்டையில் தொற்றிக்கொண்டிருக்கிறது.

புவுத்தர்கள் சொல்லும் இக்காரணங்களை 'இந்துமதம் எங்கே போகிறது?'
கட்டுரைகளில் அக்னிஹோத்ரம் ராமனுஜ தாத்தாச்சாரியாரும் சொல்லுகிறார்.
ஆனால் அவர் திருப்பதி பாலாஜிக்குள் மறைந்திருப்பது மலைவாழ்
மக்களின் தெய்வம் "காளி அம்மன் " என்கிறார். மனிதர் இன்னும் கொஞ்சம்
ஓவர்டோஷாக திருப்பதி வேங்கடாஜலபதியை அருகில் சென்று ஒரு
யூதயுவதியுடன் பார்த்ததாகவும் திருப்பதி பெருமாளுக்கு அழகான கூந்தல்,
தலையைச் சீவி சிங்காரித்து பின்னல் செய்து போட்டிருந்தார்கள்
என்றும் எழுதி இருக்கிறார்.
யூதப் பெண் இசையரசி எம்.எஸ்.க்கு வேண்டியவராம். தாத்தாச்சாரி சிற்சில
பராக்கிரமங்கள் நிகழ்த்தி யூத மதத்தைச் சார்ந்த பெண்ணைக் கோவில்
கருவறைக்குள் அழைத்துச் சென்று பெருமாளின் கூந்தல் ஆராய்ச்சி
செய்தாராம்!

காளி அம்மனை முதலில் ஆக்கிரமித்தவர்கள் சிவனடியார்கள் தானாம்.
காளி அம்மனை உருவாக்கி வழிபட்டு வாழ்ந்த காளி தெய்வத்தின் மக்கள்தான் இன்றைக்கு கோவிலுக்கு வெளியே தலைமுடி இறக்கும் தளத்தில் வரிசையாக இருக்கும் மக்கள் (அம்பட்டர்கள்)!

காளி அம்மன்-சிவனாகியாகக் கதை
அம்மனின் மக்களை அனாதைகள் ஆக்கியது.

ஸ்ரீராமானுஜர் புண்ணியத்தால் சிவன் விஷ்ணுவாகி..
சங்கு சக்கரத்துடன்...


இன்று திருப்பதி பாலாஜி பணக்கடலில் மிதக்கிறார்..
திருப்பதிக்குப் போனால் திருப்பம் ஏற்படும் என்று பக்தர்கள் கூட்டம்
அலை அலையாக..
இதை எல்லாம் கண்டும் காணாமல்
சித்தனின் சமாதியில் புத்தர் சிரிக்கிறார்
.

2 comments:

  1. அங்கு பச்சிளங்குழந்தைகளையும் பெற்றோர்கள் படுத்தும் பாடு,மற்ற நாடுகளில் குழந்தை துன் புறுத்தும் சட்டத்திலே தண்டித்து விடுவார்கள்.அந்தக் குழந்தை எனக்குத் திருப்பதியில் முடியெடுங்கள்,24 மணி நேரம் போல் வரிசையில் நின்று வாட்டி வதக்குங்கள் என்று வேண்டியதா?

    ReplyDelete
  2. அடிக்கடி புத்த விகார் போனதின் தாக்கமா..?

    ReplyDelete