Showing posts with label கவிதை - மொழியாக்கம். Show all posts
Showing posts with label கவிதை - மொழியாக்கம். Show all posts

Sunday, June 21, 2020

எழுகிறேன் நான்..


நான் எழுகிறேன்..
சரித்திரத்தின் கசப்பான பக்கமாக
புனைவுகளின் திருப்பங்களுடன்
என்னை எழுதலாம் நீ
குப்பைகளுக்குள் என்னை அமுக்கி வைத்திருந்தாய்.
ஆனால் நானோ
தூசியைப் போல மேலெழுகிறேன்.
என் மரியாதை இன்மை உன்னைத் தொந்தரவு செய்கிறதா?
ஏன் உன்னைச் சுற்றி இருள் கவிந்திருக்கிறது?
என் வீட்டு அறையில் எண்ணெய்க்கிணறு இருப்பது போல
நான் நடந்து கொள்வதாலா!
நிலவையும் சூரியனையும் போல
மாறாத அலைகளைப் போல
நம்பிக்கைகள் மேல் எழுதுவது போல
இப்போதும் நான் எழுச்சியுடன்.
கண்ணீரில் சரிந்துவிழும் தோள்களை
ஆன்மாவின் அழுகையில் பலகீனமாகிவிட்ட என்னை
கவிழ்ந்த தலையுடனும் குனிந்தப் பார்வையுடனும்
உடைந்துப் போய்விட்ட நிலையில்
பார்க்க விரும்புகிறாயா?
என் அகந்தை உன்னைப் புண்படுத்துகிறதா?
என் கொல்லைப்புறத்தில் தங்கச்சுரங்கம்
கண்ட து போல நான் குதூகலிப்பது
உனக்கு மகா கேவலமாகத் தெரிகிறதா?
உன் சொற்களால் என்னைச் சுடு.
உன் பார்வையால் என்னை வீழ்த்து.
உன் வெறுப்பால் என்னைக் கொலைசெய்.
ஆனாலும் நான்
காற்றைப்போல மேலெழுவேன்.
என் கவர்ச்சி உன்னைக் கலங்கடிக்கிறதா?
தொடைகள் சந்திக்கும் இட த்தில்
வைரங்களைக் கண்டெடுத்தது போல
நான் ஆடும் நடனம்
உனக்கு ஆச்சரியமாக இருக்கிறதா!
சரித்திரக்குடிசைகளின் அவமானத்திலிருந்து
நான் எழுகிறேன்.
கடந்த காலத்தின் வலியுடன் கூடிய வேர்களிலிருந்து
நான் எழுகிறேன்.
கருங்கடல் நான். பரந்து விரிந்தவள்.
கடல் அலைகளில் கேட்கிறது
வாழ்வும் வளமும்.
நடுங்கும் இரவுகளையும் அச்சத்தையும்
விட்டுச்செல்கிறேன்.
நிர்மலமான பகற்பொழுதில் நான் எழுகிறேன்.
மூதாதையர்கள் கொடுத்தப் பரிசுகளைக் கொண்டுவருகிறேன்.
நான் ஒரு கனவு.
அடிமைகளின் நம்பிக்கையாய்.. நான்
எழுகிறேன்..
எழுந்து கொண்டே இருப்பேன்.
- Maya Angelou

Wednesday, June 10, 2020

கவிதையல்ல நான்...

எழுதி முடித்துவிட்ட கவிதையல்ல நான்.
உன் மெட்டுக்குள் அடங்கிவிடும் பாடலும் அல்ல.
மனித கூட்ட த்திலிருந்து வெளியில் நிற்பவள்.
எப்போதும் என்னை ஓரமாக புறம்தள்ளும் உலகத்தில்
தனித்த பாதையில் பயணிப்பவள்.
கடிதங்கள் மின்னஞ்சல்கள் அழகானப் பரிசுகளை அனுப்பும் நீ
நாளை நான் தெருவில் நடக்கும் போது
அடையாளம் கண்டு கொள்ள இயலுமா? கவிதையல்ல.. நான்
களைத்துப்போய்விட்டேன்.
கிழிந்து தொங்குகிறேன்.
நீ பார்க்கும் என் கண்களை
ஓவியமாக தீட்டமுடியாது.
உன்னை வசீகரிக்காது.
சோர்வான வெற்றுபார்வையுடன் நான்.
எல்லா நேரங்களிலும்
குடித்து கும்மாளமிட என்னால் முடியாது.
பாட்டுப் பாடி
புகழ்மிக்க சொற்களைப் பேச
உன் விருந்துகளின் ரசமல்ல நான்.
நான் அதிகமாகப் பேசுவதில்லையே.
ஆரோக்கியமற்ற தூக்கமில்லாத
வாழ்க்கையிலிருந்து வரும்
என் சொற்கள் தட்டையானவை. நிலையற்றவை.
நான் பாடும் போது வந்துவிடுகின்றன என் சொற்கள்.
நான் சில நேரங்களில் அதிகமாகப் பாடுகிறேன்.
சில நேரங்களில் பாடுவதே இல்லை.
அதிலும் என்னைச் சுற்றி மனிதர்கள் இருக்கும்போது
நான் பாடுவதே இல்லை.
ஏன் என்றால் அவர்கள்
கவிதைகளை எதிர்ப்பார்க்கிறார்கள்.
நல்லதொரு இசையை எதிர்ப்பார்க்கிறார்கள்.
நானோ கவிதையல்ல.
ஒப்பாரியாக இருக்கவாவது முயற்சிக்கிறேன்.
திருத்தப்படாத கூர்த்தீட்டப்படாத என்னுடன்
சேர்ந்திருக்க பெரும்பாலோர் விரும்புவதில்லை.
இணைப்புகள் மீள்பதிவு செய்தல் தொழில் நுட்பங்கள்
என்று ஒலிப்பதிவில் செய்வதற்கு நிறைய இருக்கிறது.
ஆனால் நான் பிறவியிலேயே
சிதைந்துப்போனவள். கோளாறானவள்.
எனக்கு அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை.
ஆனால் மற்றவர்களுக்கு அப்படி இல்லையே.!
(― Charlotte Eriksson, )
#கவிதை_மொழியாக்கம்.

Sunday, April 19, 2020

அவன்


(Thanks to Sri N Srivastava)
Introspection and soul-searching lead to self discovery. Who am I? Where am I heading? What am I doing? Is it what I truly want? What is real and what is true? I don't seem to know anything, do you? Perhaps this poem in Tamil by Puthiyamaadhavi Sankaran reproduced here with prior permission from the poet together with an English translation by moi holds a clue:

அவன் அவன் தானா
அவன் என்பது பிரம்மை
அவன் என்பது கனவு
அவன் என்பது புனைவு
அவன் என்பது பொய்

அசத்தியங்களின் மூழ்கிப்போன வனை நீந்தி எடுத்து கரை சேர்க்கும் போது காதல் ஜீவ சமாதி செய்துகொண்டது.

அவன் ......அவன் அல்ல!
அவன் அவனைத் தொலைத்து தொலைதூரம் பயணித்து விட்டான்.
அவனிடம் அவனைத் தேடித் தேடி
களைத்துப்போய் அலுத்துக் கொள்கிறது காலம்.
எப்போதாவது
அவனின் இருள் கிழித்து
வரும் மின்னலாய்
அந்த அவன் வருவானா!
காத்திருக்கின்றன
தரிசு நிலத்தில் விழுந்த
கவிதை விதைகள்
இடி மின்னலுடன் வரப்போகும்
கடைசி மழைக்காக.....

#புதியமாதவி_சங்கரன்

Is he him only?
He is an illusion.
He is a dream.
He is imaginary.
He is a lie.

Love buried itself alive
while swimming to retrieve
and bring ashore
the one who got
drowned in untruths.

He.......is not him.
He has lost him
and journeyed a long way past.
Searching repeatedly
for him in him,
Time is tired and bored.
Like lightning
rending through his darkness,
will that him ever come!
Seeds of poetry
that fell on barren land
await the last rains
to come alongwith
lightning and thunder.

~Sri 1520 :: 19042020 :: Noida 

Tuesday, April 7, 2020

கோவிந்தா கோவிந்தா

THANKS TO Sri N Srivastava.


.Mere mortals celebrate their own birthdays amidst a limited circle only but the birthdays of gods become festivals celebrated by whole communities across continents. Lord Krishna's birthday is called Janmashtami and celebrated with great fervour by his devotees.

In Mumbai, every locality vies with every other locality in organising these celebrations which include the Dahi Handi, which is a clay pot filled with curds and cash prizes suspended high in the air. Teams of young men train together for months to form a human pyramid and grab the pot of goodies.

It came to be a pot of curds because Krishna, as a naughty child, used to climb over the shoulders of his playmates to reach into the pots filled with  fresh butter suspended from the ceiling. The teams that play Dahi Handi would chant and sway rhythmically while forming the human pyramid punctuated with Govinda Govinda, one of the many names of Mahavishnu who took birth as Krishna.

Krishna is also called the Maayaavi or the illusionist, who could make things seem different. At face value, this poem could be taken as one of those rhythmic chants by the Dahi Handi players. But then, the wise never take anything at face value but seek out the implied meaning.

Here is the poem titled #Govinda penned by Poet Puthiyamaadhavi Sankaran reproduced with her prior permission together with an English translation by moi:

#கோவிந்தா

எங்கள் மேய்ச்சல் நிலம்
எங்கள் கறவை மாடுகள்
எங்கள் தயிர்ப்பானை
புல்லாங்குழலின் இசையில்
ஆடைகளை மறந்தது போல
திருடர்களையும்..!
திருடர்கள் திருடியதைச்
சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
கோவிந்தா கோவிந்தா..

பாற்கடலின் அலைகள் ஆர்ப்பரிக்கின்றன.
கோவிந்தா கோவிந்தா..

உன் கோவிந்தாக்களைத்
தோள்களில் சுமக்கும்
எங்கள் தோள்களுக்கு
இன்னும் எட்டவில்லை
நீ திருடிய தயிர்ப்பானை.
கோவிந்தா கோவிந்தா..

#புதியமாதவி_சங்கரன்

#GOVINDA

Our pasture,
our cows,
our curd pot!
Like clothes were forgotten
in the music of the flute,
the looters too..!
The looters claim
the loot as their own.
Govinda! Govinda!

The waves
of the Milky Ocean
roar
Govinda! Govinda!

Our shoulders
that bear
your Govindas
have not
yet got
to the curd pot
that you looted.
Govinda! Govinda!

~Sri 1915 :: 06042020 :: Noida

Tuesday, March 17, 2020

ஆதிரை ஆங்கிலத்தில் ...

3000 ஆண்டுகால இலக்கிய மரபின் தொன்மையும் யுகங்களாக கடந்துவரும் ஆதித்தாயின் மொழியும் எதோ ஒரு வகையில் என் கவிதைகளிலும் முகம் காட்டும் போது அதை அப்படியே இன்னொரு மொழிக்கு மொழியாக்கம் செய்யும்போது . சொற்களுக்கு நடுவில் புதைந்திருக்கும் பெருமூச்சுகளை எப்படி வெளிப்படுத்துவது ..!அடிக்குறிப்புகளுடன் சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுகிறது. ஆதிரை அதற்கு விதிவிலக்கல்ல. தன் மொழியின் ஊடாக அதைக் கொண்டுவந்திருக்கும் இனிய நண்பர் ஸ்ரீ க்கு என் அன்பும் நன்றியும்.
The five great epics of Sangam Poetry are Silappadhikaaram, Manimekalai, Jeevaka Chintaamani, Valayaapathi and Kundalakesi. Aathirai, the protagonist of this poem, plays a pivotal role in the epic named second in the list above.
When the whole world ticks on hope, this poet, a former banker like me, paints a picture of hope in verse. I am very happy to reproduce this beautiful poem in Tamil penned by Poet Puthiyamaadhavi Sankaran here with prior permission from the poet together with an English translation by moi:
கார்காலத்தை இழந்த முல்லை
மணல்காடுகளின் பெருமூச்சு
கானல் நீரில் மிதக்கும் கவிதையில்
மழைத்துளி குடை பிடித்து நடக்கிறது.
கடற்கரையில் அலைமனிதர்கள்
கையசைத்து நடனமாடுகிறார்கள்.
பாறைகளை ஓங்கி அறையும்
அலையின் கரங்கள்
கடலில் மிதக்கும் மரங்களை எடுத்துச்
சிலம்பம் ஆடுகின்றன.
நட்சத்திரக் கப்பல்கள் ஒதுங்கும் கடற்கரையில்
கருவாடுகள் மீன்களாகின்றன.
ஆதிரை மட்டும் ஈரம் காயாமல்
நெய்தல் நிலத்தில் காத்திருக்கிறாள்.
The sigh of the sandy forests
of Mullai
that lost the monsoon
walks
holding a raindrop umbrella
in the poem
that floats on a mirage.
Wavefolk dance on the seashore
waving hands.
The arms of the wave
that slaps the rocks hard
pick up the trees
floating on the seas
and perform silambam.
On the beach
where starships berth,
karuvaadu become fishes.
Only Aathirai
with her hopes still not dry
waits
in the Neidal land.
~Sri 2245 :: 17032020 :: Noida
Mullai : A pasture of grass and shrubs.
Silambam : A martial art using a sturdy wooden pole.
Karuvaadu : Kippers or dried fish.
Neidal land : Maritime area.
Aathirai : A woman who plays an important role in the Tamil epic Manimekalai. The reference to her waiting is drawn from the epic where she is dissuaded from committing suicide by an Oracle that assures the safe return of her husband .

Saturday, February 15, 2020

அவளும் நானும்

அவள் இளமையின் உச்சத்தில்
எப்போதும் கல்யாணக்கனவுகளில்
மிதக்கிறாள்.
அவன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும்
எப்படி அவளைக் கொஞ்ச வேண்டும்
அவளை எங்கெல்லாம் கூட்டிச்செல்ல வேண்டுமென
அவள் சதா கற்பனையில் ..
கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆடுகிறாள்.
முற்றுப்பெறாத விடிகாலை கனவைப் போல
அவள் என்னைத் துரத்திக் கொண்டே
இருக்கிறாள்.
அவள் எப்போதும் சொல்கிறாள்
நான் உனக்குத்தான் மகளாக பிறக்க வேண்டும்
அடுத்தப் பிறவியிலாவது
உன்னைப் ப்டிச்சிருக்கு.மம்மி...
மழலை மாறாத மொழியில்
அவள் சொற்களின் வீரியம்
எனக்குள் மின்னலாய் இறங்கி
அடிவயிற்றைப் பிசைகிறது.
அவளை இறுக அணைத்துக் கொள்கிறேன்.
இப்போதும் நீ என் மகள் தானே செல்லம்..
சுருட்டை முடி தவழும் முன் நெற்றியில்
முத்தமிடுகிறேன்
அவளைப் போலவே நானும் ..
வளர்ச்சி அடையாமல் அதே நினைவுகளில்.
தேங்கிக் கிடக்கிறேன்.
அவள் குளத்தில் கல்லை எடுத்து வீசுகிறாள்
அலை அலையாய் நீரில் அவன் நினைவுகள்
மிதக்கின்றன.
தண்ணீருக்குள் நானும் அவனுமாய்
அவள் கைப்பிடித்து நடக்கிறோம்.
அவள் கைகொட்டி சிரிக்கிறாள்.
மகேந்திர மலையடிவாரத்தில்
மழை கொட்டுகிறது.
கருவறையில் உறங்கிக்கொண்டிருந்த தேவி
கனவுகளிலிருந்து விழித்துக் கொள்கிறாள்.
அவளுக்கு வளர்ச்சி இல்லையாம்
அப்படித்தான் அவர்கள் சொல்கிறார்கள்.
அவள்.. ஒரு பிரமாண்ட வெளியாய்
என் கைப்பிடிக்குள் அடங்க மறுக்கும்
பேருலகமாய் ஆட்சி செய்வதை
எப்படிச் சொல்லட்டும்?

No photo description available.


A lot of us may recall the character played by the late Sridevi in the Tamil film Moondraam Pirai remade in Hindi as Sadma where she regressed into a childlike state after severe trauma and regains normality in the course of the film. That's of course fiction with the possibility of being translated into celluloid imagery. Life is far from fiction and poses unimaginable twists and turns that cannot be straightened. It's like what has been cast into a mold cannot be reshaped by hammering in a smithy.
The differently-abled are complete beings in creation and not at all handicapped. It is only us with parochial views and inability to think beyond ourselves who are handicapped. They do not seek our pity or sympathy but merit compassion and empathy.
Here is a very poignant poem in Tamil by Puthiyamaadhavi Sankaran reproduced with her prior permission together with an English translation by moi:

She floats
in wedding dreams
at the peak of youth
always.
Imaging all the time how
should he be,
which way
should he pamper her
and where all
should he take her to,
she hugs the neck
and waltzes.
Like an unfinished early morning reverie
she keeps chasing after me.
She says
always:
In the next birth at least
I should be
born as your daughter.
I like you Mummy.
The power of her words
in a baby's prattle like voice
strikes like lightning
and rolls around low
in my tummy.
I hug her tightly.
"Even now you are my daughter only
darling".
I kiss on the forehead where her curly bangs hang.
I also stagnate
in those same memories
with stunted growth
like her.
She picks up a stone
and flings into the tank.
His memories
float on the water
in wave after wave.
Holding her hands,
he and I
walk in water.
She claps her hands and laughs.
It rains at the foot
of Mahendra Hills.
The goddess
sleeping in the womb
wakes up from dreams.
She has no growth.
That is what they say.
How do I say
that she rules
like a huge world
in a universal space
refusing to be
restrained by handhold?
~Sri 1205 :: 15022020 :: Noida
thanks to Sri N Srivastava

Monday, February 10, 2020

நாம்தேவ் தாசல்


Image result for namdeo dhasal
இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கவிஞர்களின் வரிசையில் 
இடம் பெற்றிருப்பவர் நாம்தேவ் லக்‌ஷ்மண் தாசல்
மராத்திய கவிதையை நோக்கி உலகக்கவிஞர்களைத் திரும்பிப்
 பார்க்க வைத்த அதிசயம் அவரும் அவர் கவிதைகளும்
அவர் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்று
 திலீப் சித்ரேயால் வாசிக்கப்பட்ட போது அயல்தேச இலக்கிய வட்டத்தில்
 ஏற்பட்ட அதிர்வுகளின் அலைகள் இன்னும் அடங்கவில்லை.
 மராத்திய கவிதை மொழியை மாற்றி
அமைத்தது மட்டுமல்ல, அவர்  கவிதையின் பாடுபொருள்கள் 
ஏற்படுத்திய அதிர்வுகளிலிருந்து இலக்கிய பிதாமகன்கள்
 இன்னும் வெளிவரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்ந்தக் காலத்திலும் மறைந்தப் பிறகும் நாம்தேவ்
 ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் பார்வையில்  
தன் விசவரூபத்தைக் காட்டுகிறார். நான் நாம்தேவ் தாசலை
 அறிந்தப் போது அவர் நான் விரும்பாத ஒரு கூடாரத்தில் இருந்தார்
அதனாலோ என்னவோ அவரை எளிதில் பார்க்கவும் பழகவும்
 கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்த தவறிவிட்டேன்
(காலம் கடந்து அதற்காக வருத்தப்படுகிறேன்.)

இலக்கிய விமர்சனங்கள் ஆகட்டும் 
அரசியல் விமர்சனங்கள் ஆகட்டும் அவற்றை வாசித்துவிட்டு 
ரசித்துவிட்டு தன் போக்கில் தனக்கு சரி என்று படுவதை 
தொடர்ந்து எழுதியும் செயலாற்றியும் வந்தார்
தலித்துகளைப் பற்றிய எழுதிய, தலித்துகளுக்காக 
எழுதிய தலித் கவிஞர் என்று கவிதை விமர்சகர்கள் 
அவரை ஒரு வட்டத்திற்குள் அடக்கிவிட
முயற்சி செய்தார்கள்
எப்போதும் ஜொலிக்கும் மும்பையின் கண்கூசும் வெளிச்சம்
பலதரப்பட்ட இன மொழி மக்களின் வாழ்விடம் மும்பை.
வானுயர்ந்தக் கட்டடங்களுடன் கம்பீரமாக நிற்கும் 
மும்பையின் அடிவயிற்றிலிருந்து அலங்காரங்கள்
 எதுவுமின்றி மும்பையின் ரவுடிகளை,
தாதாக்களை கஞ்சா அபின் கடத்தல்களை, குவிந்து கிடக்கும் 
குப்பைகளைகுப்பைகளின் ஓரமாக களவில் ஈடுபடும் காதலை
 எப்போதும் அணையாத சிவப்பு விளக்கின் காமட்டிபுரத்தை என்று... 
நாம்தேவ் தன் படைப்புலத்தின் காட்டிய மும்பை 
கற்பனை அல்ல. அது நிஜம்
அந்த நிஜங்களைக் கண்டும் காணாது நடந்து சென்ற
 படைப்புலகம் நாம்தேவின் கவிதைகளை அணுக
இப்போதும் அச்சம் கொள்கிறது என்பது தான் உண்மை
நாம்தேவுடன் அரசியல் பேசுபவர்களும் தலித் இயக்கம் குறித்து 
பேசுபவர்களும் கூட அவர் கவிதைகள் குறித்து பேச முன்வரவில்லை 
என்பதற்கு அவர் கவிதைகளின் பயங்கரமான
நிஜம் மட்டுமே காரணம்.

மராத்தி இலக்கிய உலகம் தாண்டி நாம்தேவின் படைப்புகள் குறித்து 
எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதைக் 
கணக்கில் கொண்டால் அது ஒன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை
அதற்குநாம்தேவின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் 
செய்த திலீப் சித்ரே
சொல்லும் காரணத்தையும் புறம்தள்ளிவிட முடியாது.
"நாம்தேவின் கவிதைகள் மொழியாக்கம் செய்பவரை மருட்டும்
அந்த தலித் மொழி, குறிப்பாக மொழியாளுமை அப்படி" என்கிறார்.

நாம்தேவின் சமகாலத்தில் வாழ்ந்தவர்களான 
அருண் கொலட்கர், கிரண்நகர்கர், விலாஸ் மற்றும் திலீப் சித்ரே 
போன்றவர்கள் மராத்தி மொழியில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் எழுதிக் கொண்டிருந்தார்கள்.. ஆனால் சர்ரியலிஸமும் எக்ஸிஸ்டென்டலிஸமும் 
நாம்தேவின் கவிதைகளில் தான் மிக இயல்பாகவும் சுயமாகவும்
 இடம் பெறுகின்றன. . நாம்தேவுக்கு மராத்தி மொழி தவிர 
பிற மொழிகள் எதுவும் தெரியாது என்ற உண்மையை அறிய வரும் போது
அவர் கவிதைகள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன
பிறமொழி கவிஞர்களின்  மராத்தி மொழியாக்க கவிதைகளை
 அவர் தொடர்ந்து வாசிக்கும் வாசகனாக இருந்தார் 
என்பதையும் பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

"
எனக்கென்று எந்தச் சொத்துகளும் இல்லை, என் கவிதைகளைத் தவிர.
என் கவிதைகளை கற்களைப் போல வீசி இருக்கிறேன், குவித்து வைத்திருக்கிறேன் உங்களுக்காக, தெருச்சண்டைகளுக்கு ஆயுதங்களாக"
என்று தன்னைப் பற்றியும் தன் கவிதைகள் குறித்தும்
 அறிமுகப்படுத்திக் கொண்டார்
கவிதை என்பது அழகியல் சார்ந்தது, அழகியல் சார்ந்தது தான்
கலை, கலை கலைக்காக மட்டும் தான்... என்றெல்லாம்
 தலையில் ஒளிவட்டத்துடன் திரியும் அறிவுஜீவிகள் 
இன்றும் நம்முடன் இருக்கத்தான் செய்கிறார்கள்
இலக்கியம் அவர்களுக்கும் அவர்களின் அடிவருடி  
வாரிசுகளுக்கும் பட்டா போட்டு எழுதிவைத்த சொத்து போல
ஒரு பாவனை! தலித் கவிதைகளின் உரத்தக் குரல்கள் அவர்களை
முகம் சுளிக்க வைக்கிறது. அரசியல் பேசிவிட்டால் 
கவிதை தற்கொலை செய்து கொள்ளும் என்று
 அந்தப் பிதாமகன்கள் பயம் காட்டுகிறார்கள்.
நாம்தேவ் தாசல் தான் 
" என் கவிதை என் அரசியல், என் அரசியல் என் கவிதை"
என்று கடைசிவரை உரக்கச் சொல்லி உண்மையாகவே
வாழ்ந்து காட்டி மறைந்திருக்கிறார்.

நாம்தேவ் தாசலின் கவிதை 


கொடூரம்
------------------

மொழியின் அந்தரங்க உறுப்பில்
நான்
பால்வினை வியாதியின் ஆறாதப் புண்.
துன்பம் மிகுந்த கருணைத்ததும்பும்
நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான விழிகளில்
வாழ்வின் ஜீவன் எட்டிப்பார்க்கிறது.
அந்தப் பார்வை என்னை அதிரவைக்கிறது.
எனக்குள் இருக்கும் கலகக்காரன்
எனக்குள் வெடிக்கிறான்.
என்னைச் சிதைக்கிறான்.
எங்கும் இல்லை  நிலவின் வெளிச்சம்.
எங்கும் இல்லை தண்ணீர்.
வெறிப்பிடித்தக் குள்ளநரி தன் பற்களால்'
என் சதைகளைக் கிழிக்கிறது.
என் குரங்கு எலும்பிலிருந்து பரவுகிறது
பயங்கரமான விஷம் போன்ற கொடூரம்.

வெறுக்கத்தக்க என் அடையாளங்களிலிருந்து
என்னை விடுதலை செய்யுங்கள்.
நட்சத்திரங்களைக் காதலிக்க விடுங்கள்.
மலரும் ஊதா ஒன்று தொடுவானம் நோக்கி நகர்கிறது.
வறண்ட வெடிப்புகள் நிறைந்த முகத்திலிருந்து
ஒரு பாலைவனச்சோலை  எழுகிறது.
சூறாவளி ஒன்று தணியாத யோனியுடன்
முதலிரவு நடத்துகிறது.
பூனை ஒன்று தாங்கொணா வேதனையின் கூந்தலை
வருடத்துவங்குகிறது.
இரவு என் குமுறல்களுக்கு இடமளிக்கிறது.
சன்னல்களின் கண்களில் தெருநாயின் ஆட்டம் ஆரம்பமாகிறது.
நெருப்புக்கோழி தன் அலகுகளால் குப்பையைக் கிளறுகிறது.
எகிப்திய கேரட் தேகத்தின் உண்மையான நறுமணமாகிறது.
கவிதை ஒன்று பிணத்தைக் கல்லறையிலிருந்து எழுப்புகிறது.
சுயத்தின் கதவுகள் மோதி திறக்கின்றன.
எல்லா பெயர்களின்  ஊடாகவும் பரவுகிறது ரத்த ஓட்டம்.
இலக்கண மதில்களைத் தாண்டி மேல் எழுகிறது
எனக்கான நாள்.
படைப்புகளின் படுக்கையில் கடவுளின் மலம்
ஒரே அடுப்பில் சுடப்படுகிறது
வேதனையும் ரொட்டியும்.
ஆடைகளற்ற அக்னி புராணங்களிலும்
நாட்டுப்புறக்கதைகளிலும் வாழ்கிறது
பின்பற்றி சோரம்போன பாறைகள் வாழ்வின் வேர்களைச் சந்திக்கின்றன.
நொண்டிக்கால்களின் மீது நின்று கொண்டிருக்கிறது பெருமூச்சு.
சாத்தான் நீண்ட வெறுமையின் பறையை அடிக்க ஆரம்பித்துவிட்டான்.
ஆசைகளின் கதவில் ஊசலாடுகிறது அந்தப் பச்சை இளந்தளிர்.
நிராசைகளின் பிணம் சேகரிக்கப்படுகிறது.
அழிவற்ற நித்தியத்தின் சிலையை ஒரு சைக்கோ மனநிலை
நெருக்கித்தள்ளுகிறது.
தூசி கவசத்தை தோலுரிக்கிறது.
இருட்டு தலைப்பாகை வருகிறது.
நீ... உன் கண்களைத் திற.
இவை எல்லாம் பழைய வார்த்தைகள்.
இந்த ஏரி ஆர்ப்பரிக்கும் அலைகளால் நிரம்பிக்க்கொண்டிருக்கிறது.
கரையோரங்களைத் தொடுகிறது அலைமுறி
இருந்தாலும்,
என் குரங்கு எலும்பிலிருந்து
பரவுகிறது நச்சுப்போன்ற கொடூரம்
நர்மதா நதியின் நிர்மலமான நீரைப்போல தெளிவாக.

Monday, February 11, 2019

கறுப்பி நான்..

நான் கறுப்பு பெண்
இந்தப் ‘பெண்” - நான் பெண் என்று சொல்வதிலிருந்து
வித்தியாசமானது.
நான் “கறுப்பு” என்று சொல்வதிலிருந்தும்
வித்தியாசமானது.
‘கறுப்பி’ என்று சொன்னால்
என் சருமத்தின் நிறத்தைச் சொல்வதல்ல அது.
நான் கறுப்பி.
கறுப்பு நான் என்பதால்
அணுகுவதற்கு கடினமானவள் என்பதல்ல.
கறுப்பு நான் என்பதால்
காதுவளையத்தைப் பிடித்து திருக தயாராக வேண்டும் என்பதல்ல.
நான் கறுப்பு என்பதால்
கற்பித்தல் கடினம் என்பதல்ல.
நான் கறுப்பு என்றால் என்ன பொருள்
தெரியுமா?
எல்லாவகையிலும் தனித்துவமானவள்
என்னால் முடியாத து எதுவுமில்லை
நீங்கள் அறியாத தையும் அறிந்து கொள்ளும்
தகுதிப்படைத்தவள்.
நான் தனித்துவமானவள்.
நான் கறுப்பு பெண்.
‘கறுப்பு” என்ற சொல்லை அழுத்தமாகச் சொல்லும்போது
அது வெறும் இனக்குறியீடு மட்டுமல்ல.
அது நான் வாழும் எங்கள் வாழ்க்கையின் அர்த்தம்.
எதைச் செய்து பழக வேண்டும்
எதைச் செய்யக்கூடாது
என்ற எதிர்ப்பார்ப்புகளில்
கறுப்பு என்றால் என்னவென்று
இந்த உலகத்திற்கு பாடம் புகட்ட
நாங்கள் தயாராகிறோம்.
எப்படி என்றால்…
சில கடைவீதிகளில் நீங்கள்
ஓரக்கண்ணால் பார்க்கும் பார்வை,
மின் தூக்கியில் அவளைக் கண்டவுடன்
உங்கள் பணப்பையை இறுகப்பிடித்துக் கொள்ளும் தருணம்..
இலக்கணப்பிழையின்றி பேசினால்
‘வெள்ளையர்களைப் போல நடிப்பதாக’
உங்கள் விமர்சனம்.
மிடுக்கான உடையில் அறைக்குள் நுழைந்தவுடன்
ஆச்சரியமாகப் பார்க்கும் உங்கள் முகங்கள்
மூன்றாம் வகுப்பு சரித்திரப்பாட த்தில்
‘அடிமைகள்’ அத்தியாயம் வந்தவுடன்
திரும்பிப் பார்க்கும் உங்கள் பார்வை…
கறுப்பு பெண் நான்.
நான் கறுப்பி என்பதால்
உங்கள் தகுதிப்படி நிலையில் என்னைப் பொருத்திக்கொள்ள
கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது.
பரந்த உலகத்தில் எனக்கான இட த்தைக்
கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது.
இனிப்பு க் குச்சி மீது பரவிய
ஒரே ஒரு கறுப்பு சாக்லெட்டாய் நான்.
இந்தக் கறுப்பு இனத்தின் ஒரே அடையாளம்
நான் மட்டுமா?
புரிந்து கொள்ள முடியாத இந்தக் குழப்பத்திலிருந்து
வெளியில் வந்துவிட்டேன்.
சிலரால் இன்னும் வரமுடியவில்லை.
எனக்கு கிடைத்த ஆதரவு
அவர்களுக்கு இல்லாமல் போய்விட்ட தே!
எல்லோரும் வாழ்க்கையில் எல்லா தருணங்களிலும்
கறுப்பு ஆளுமையாய் இருப்பது
சாத்தியமில்லை தான்.
எல்லோருக்கும் வரப்போகும் ஆபத்துகளிலிருந்து
பாதுகாக்கும் பெற்றோரின் கரங்கள் கிடைப்பதில்லை.
வளர்ச்சியைச் செதுக்கும் வளர்ப்பு
வளரும் பருவத்தில்
வாய்ப்பதில்லை எல்லோருக்கும்.
வாய்த்துவிடுவதில்லை எல்லோருக்கும்
என்னைப் போல வாய்ப்புகளும்
நான் கறுப்பு பெண்.
ஆம்…
கடைவீதியிலோ மால்களிலோ
கேட்கிறது அவர்களின் குரல்.
எனக்குப் புரிகிறது
என்னிடம் இருக்கும் எதோ ஒன்றை
அவர்கள் விரும்புகிறார்கள் என்பது.
அது என்னிடம் இருக்கிறது என்பதால்
அதை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள
வேண்டுமா என்ன?
எனக்கு வயது 16… என்பதும்
இன்னும் இந்த வயதுக்கான அது நடக்கவில்லை
என்பதும்
அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
எனக்குத் தெரியும்
நான் மற்றவர்களைப் போல இல்லை.
ஆனால் எனக்குப் புரியவில்லை
இதற்காக ஏன் வருத்தப்படுகிறேன் என்று.
நான் கறுப்பு பெண்..
ஆதலால்
கடந்த காலத்தை வெளியிலிருந்து பார்க்க
கடினமாக இருக்கிறது.
ஆனால் சற்று யோசித்துப் பார்த்தால்
குழப்பம் தெளிகிறது.
“இந்த உலகம் என் வரவுக்காக காத்திருக்கிறது”
பணம் சம்பாதிக்க கடவுள் என்ன கொடுத்திருக்கிறார்?
நான் வேலிகளைத் தாண்டுவேனா?
உலக மேன்மைக்காக அமையுமா என் வாழ்க்கை?
இப்படியாக நான் என்னவாகப் போகிறேன்
என்று அறிந்துகொள்ள
இந்த உலகமே ஆர்வமாக இருக்கிறது.
நான் கறுப்பு பெண்.
என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு
நானே வழிகாட்டி.
மாதா பிதாவுக்கு
அவர்களின் இலட்சிய வடிவம்.
வயதுக்கு மீறிய அறிவானவள் நான்.
இருண்ட அறையில் வெளிச்சம் நான்
உங்கள் விழிகளின் மகிழ்ச்சி நான்.
உள்ளத்தில் எரியும் அணையா நெருப்பு நான்.
என் குடும்பத்தின் விடுதலை கீதம் நான்.
எனக்கு முன் வாழ்ந்தவர்களின் உழைப்பு நான்.
கடினமான காலமும் நான்.
மகிழ்ச்சியான நேரமும் நான்.
தேவைப்படுபவர்களுக்கு எப்போதும் நான்.
ஏனேனில்…
நான் வலிமையானவள்
சுதந்திரமானவள்
கறுப்பி.
நான்…
இதுதான் நான்.
இந்தக் கவிதையின் நான்..
என்னைப் பற்றியது தான்.
( நன்றி.. POWER POETRY.ORG.
 .. IAM A BLACK GIRL)
இந்த மாதம் - பிப்ரவரி - கறுப்பு இனத்தின் சிறப்பு மாதம்.
அப்பெண்ணின் இனத்தின் கறுப்பு கவிதையை
 மொழியாக்கம் செய்திருக்கிறேன்..அவள் முகம்
 என்னுடன் பயணிக்கும் இருள் சூழந்த
 இரவு நேரம் 12.24... நாளை விடியும் தானே.
. நம்பிக்கையுடன் அவளுடன் நானும் ...