Monday, March 4, 2024

ஒரு கோணல் மரத்தின் கதை

     புதிய இந்தியா வரவேற்கிறது. வாருங்கள். வருவதற்கு முன், ஜனநாயக அடிப்படையிலான குடியுரிமை, அடிப்படை உரிமைகள் என்ற சிந்தனைகளைக் கதவுக்கு வெளியே கழற்றி வைக்கவும்

ஸ்டாண்டப் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்டார்டப் இந்தியா, மேக் இன் இந்தியாமாபெரும் நம்பிக்கையைத் தந்த இந்தபுதிய இந்தியாவின் திட்டங்களைக் காணவில்லை! யாரும் தேடவும் இல்லை.

ஏன் இத்திட்டங்களின் நோக்கம் நிறைவேறவில்லை?

இவை ஏன் மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவரவில்லை?!

மிகையான விளம்பரங்களுடன் மேடை பேச்சுகளுடன் வெளியான இத்திட்டங்கள் இப்போது எங்கே இருக்கின்றன? அப்படியே இருந்தாலும்

இதன் பயனாளிகள் யார்?

     இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி நமக்கு நம்பிக்கை தருகிறது.

இந்தியாவில் கல்வித்துறை வளர்ச்சியும் இந்தியாவின் திறங்கள் குறித்த வளர்ச்சியும் ஏன் தலைகீழ் விகிதமாக இருக்கின்றன? நம் நாட்டிலிருக்கும் 53% தொழில் நிறுவன ங்களில் வேலை இருக்கிறது என்றாலும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் தேவையான திறன்கள் இல்லை!! எனவே யாரையும் வேலைக்கு எடுக்கமுடியவில்லை என்று இந்திய திறன் அறிக்கை வெட்கமின்றி சொல்கிறது. 2030ஆம் ஆண்டிற்குள் திறன் குறைபாட்டில் ஒரு பெரும் நெருக்கடியை இந்தியா எதிர்கொள்ள வேண்டி இருக்குமென சர்வதேச தொழிலாளர் அமைப்பு கணித்திருக்கிறது. அதன்விளைவாக இந்தியா தன் மொத்த பொருள் உற்பத்தியில் (GDP) சுமார் 1.6 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் ! ஆனால் அதைப் பற்றி ஆள்வோருக்கு எந்தக் கவலையும் இல்லை. இதுதான்புதிய இந்தியா’ .

     ஒருபக்கம் நம் தரவுகள் கருப்பு சந்தையில் விற்கப்படுகின்றன. இணைய கட்டுப்பாடு கண்காணிப்பு என்ற பெயரில் ஜன நாயகத்தின் குடியுரிமை குரல்வளை நெறிக்கப்படுகிறது.

     ஒவ்வொரு பிரச்சனைகளையும் தரவுகளுடன் அணுகி இருக்கிறார் பரகால பிரபாகர். அதிகாரத்திற்கு நெருக்கமாக இருப்பவர்கள் கூட அதிகாரத்திடம் உண்மையைப் பேச அச்சப்படுகிறார்கள் என்பதை இப்புத்தகம் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. புதிய இந்தியா ஒரு கோணல் மரம். இந்த கோணலுக்கு காரணம் ஆளும் கட்சி மட்டுமல்ல, திராணியற்ற எதிர்க்கட்சிகளும் தான்.

     சமகால அரசியலைப் பற்றி பேசுபவர்களுக்கும் எதிர்கால இந்தியாவைப் பற்றி உண்மையான தேசப்பக்தியுடன் அணுகுபவர்களுக்கும் இப்புத்தகம் ஒரு தீர்க்கமான பார்வையைக் கொடுக்கும். பக்கத்திற்கு பக்கம் அடிக்கோடிட்டு வாசிக்க வேண்டிய புத்தகமாகவும்  நம்மை அதிகம் யோசிக்க வைக்கும் புத்தகமாகவும் இருக்கிறது.

     இக்கட்டுரைகளை எழுதி இருக்கும் பரகால பிரபாகர் அவர்கள் இன்றைய நம் இந்திய அரசின் நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமனின் கணவர் என்பதையும் ஒரு தகவலாக மட்டும் என்னால் கடந்து செல்ல முடியவில்லை. பரகால பிரபாகருக்கும் அக்கட்டுரைகளை தமிழாக்கம்ச் செய்திருக்கும்ப்ரெண்ட்லைன் ஆர், விஜயசங்கர் அவர்களுக்கும் புதிய இந்தியாவின் வாழ்த்துகளும் நன்றியும்.

தமிழில் எதிர்வெளியீடு..

 



No comments:

Post a Comment