Tuesday, March 23, 2021

வெண்டைக்காய் அரசியலும் கவிதையும்

 



சென்னையில் 1906 ஆம் ஆண்டின் நீர் நிலை கணக்கெடுப்பின்

படி இருந்த குளம் ஏரிகள் எண்ணிக்கை 474. அதன் பின் 2013

கணக்கெடுப்பின் படி 43.இப்போ தமிழ் நாடு முழுவதும் கணக்கெடுத்த என்ன நிலைமையா இருக்கும்னு தெரியல. தேர்தல் நேரத்தில் இந்தக் கணக்கெடுப்பு வேண்டாம்னு தோணுது.

ஒரு அணையைத் திறந்து தண்ணீர் விட அணையைப் 

பராமரிக்கும் எஞ்சினியருக்கு அதிகாரமில்லை. 

ஏன் அந்த மாவட்ட கலைக்டருக்கும் அதிகாரமில்லை. 

முதல்வரின் அனுமதிக்கு காத்திருக்கும் நீர்மேலாண்மை 

அரசியல் நிலவுகிறது.


இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலைக்குறித்து

ஆவணப்படுத்தும் எழுத்துகள் கூட  நீர்மேலாண்மை

குறித்து கவலைப்படுவதில்லை.


 

இந்திய தலை நகரம் டில்லியில் விவசாயிகளின் போராட்டம்

தொடர்கிறது.09 ஆகஸ்டு 2020ல் டில்லியில் கூடிய விவசாயிகள் இன்றோடு 7 மாதம் 2 வாரங்கள் ஆகப்போகிறது.

தீர்வு கிடைக்கவில்லை.

இந்தியாவில் சில மா நிலங்களில் தேர்தல் களம் சூடு

பிடித்துவிட்ட தால் விவசாயிகளைப் பற்றி கவலைப்பட

பொதுஜனத்திற்கு நேரமில்லை.

1000 முதல் 2000 வரை போட்டிப்போட்டுக்கொண்டு குடும்பத்தலைவிக்கு பணம் பட்டுவாடா செய்ய தேர்தல்

அறிக்கைகள் உறுதி அளித்துவிட்டதால்.. பொதுஜனம்

மகிழ்ச்சியில்.

 

 மராத்திய மாநிலத்தின்  மிதியாலா மாவட்டத்தையே

தன் கதைக்கான களமாக தேர்வு செய்து விவசாயிகளின்

தற்கொலையைப் பற்றிய புதினம், அரசியல் புதினம் என்று

கொண்டாடப்பட்ட கோட்டா நீலிமாவின்

இறந்தவர்களின் செருப்பு - shoes of the dead .

 

இப்புதினத்தை எழுதி இருக்கும் நீலிமா ,

"ஒருவன் தன்னையே சாகடித்துக் கொள்கிறான் என்றால்

இதன் பொருள் அத்தனிமனிதனின் இறப்பல்லஅவனுக்குள்

இருக்கும் விவசாயி தன்னை சாகடித்துக்கொள்கிறான்

என்றுதான் பொருள்என்று சொல்கிறார்.

 அரசியல் தலைவர்களின் வாரிசுகள்

அதிகாரத்தை வாரிசுடமையாகப் பெறுவது போல

ஏழைகளின் வாரிசுகள் ஏழ்மையைத்தான் வாரிசுடமையாக

பெறுகிறார்கள்க்டன்சுமையில் தற்கொலை செய்து கொள்ளும்

விவசாயி தன் மனைவி மக்களுக்கு அக்கடன்சுமையை வாரிசுடமைஆக்கிவிட்டு செல்கிறான்ஓர் அரசியல்வாதியின் மகனுக்கு

தன் தந்தையின் மரணத்தைக் கடந்து செல்வது எளிதாக

இருக்கிறதுகடன்சுமையில் தற்கொலை செய்து கொள்ளும்

விவசாயி மகனுக்கு அதுவே ரொம்பவும் சங்கடமானதாக

அமைந்துவிடுகிறது. இதுதான் நீலிமா முன்வைக்கும் அரசியல்

நாவலின் அரசியல். இப்புதினம் முன்வைக்கும்  தீர்வுகளுடன் எனக்கு உடன்பாடில்லை எனினும் இப்புதினம் முக்கியமானது.

 

 நன்செய் நிலத்தில் புன்செய் பயிர்களை பயிரிடும் விவசாயி..

அதன் காரணங்கள், அரசியல், நீர்மேலாண்மை , சூழலியல் என்று

பல்வேறு கோணங்களில் அணுக வேண்டியதாக இருக்கிறது.

அண்மையில் தங்கத்துரையரசி கவிதை நூல்

“சொற்களால் நிறமேறும் பொழுதுகள்” வாசித்தேன்.

அதில் ஒரு கவிதை..

“விலையும் விவசாயி நிலையும்” என்ற தலைப்பில்.

 

காய்கறிக்கடையில்

கலக்கத்தோடு நுழைந்தேன்.

தோட்ட்த்துக்காய்

வந்திருப்பத்தாய் சொன்னார்

அண்ணாச்சி.

………

வெண்டைக்காய் விலை

கிலோ பதினைந்தென்றார் அண்ணாச்சி.

அகமும் மலர்ந்த து.

 

ஒடித்தபடி முற்றல் நீக்கிய கைகளோடு

முறுக்கிக்கொண்ட சிந்தனையில்]

ஒருமுகம் வந்துப்போக’

 நொந்தது சிந்தை

 

நஞ்செய்யில்

புஞ்செய்ப் பயிரிட்டவன்

நஞ்சையும் கயிற்றையும்

தேடாமல் என்ன செய்வான்?

வாயிடிடாமலே கசந்தது

வெண்டைக்காய்.

 

No comments:

Post a Comment