Friday, March 5, 2021

வாசிக்க விரும்பும் புத்தகம்(கள்)

 


வீட்டில் புத்தகங்கள் வைப்பதற்கான இடமில்லை தான்

. வாழ்க்கை அப்படித்தான் எனக்கு வரமளித்துவிட்டது.

முன்பெல்லாம் நான் வாசிக்க விரும்பும் புத்தகங்கள்
என்று ஒரு நீள்பட்டியல் இருக்கும். அதில் பாதியாவது
தாண்டிவிடுவேன். இப்ப்போது...?
ஏனோ தெரியவில்லை..
நீளம் ரொம்ப ரொம்ப குறைகிறது..
வாசிக்கும் காலமும் குறைந்துவிட்டதோ என்னவோ!

மனம் எதை வசப்படுத்த/அடைய விரும்புகிறதோ
அதை எப்படியும் அடைந்தே தீரும்..
இப்படியான ஒரு விசித்திரமான நம்பிக்கை
கொண்டவள் நான்!
இந்த ஆண்டு 3 புத்தகங்கள் மட்டும்
வாங்கி வாசித்துவிட வேண்டும் என்று காத்திருக்கிறேன்.
*தஞ்சை பிரகாஷ் எழுதிய :
புரவி ஆட்டம் (வெளிவராத சிறுகதைகள் )
*ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து
ரமேஷ் பிரேதன் எழுதியது.

*உடலும் உணவும்.
கலைமாமணி. டாக்டர். எஸ். அமுதகுமார் எழுதியது.


****
என் உலகம் ரொம்பவும் சுருங்கிவிட்டது.
நட்புகளுடன் உரையாடலும் மவுனித்துவிட்டது.
உறவுகள் பொய்த்துவிட்டன.
புத்தகங்கள் இன்றுவரை ஏமாற்றவில்லை.
பிரபலங்களின் புத்தகவரிசையைக் கொண்டாடும்
உலகத்தில் என் வாசிப்பும் என் உலகமும் எறும்பைப் போல இயங்கிக்கொண்டிருக்கிறது.

#myreadings_puthiyamaadhavi
Like
Comment
Share

No comments:

Post a Comment