Sunday, April 28, 2019

பொன்பரப்பியும் உங்கள் மனசாட்சியும்

பொன்பரப்பி
உள்ளிட்ட அனைத்து
சாதி மதவாத பாசிச வன்முறைக்கு
எதிராக எனது குரல்

Image result for பொன்பரப்பி ஜெயமோகன்
அண்மையில் நிகழ்ந்த இக்கூட்ட த்தில்
பேசியவர்களின் உரைகளைக் கேட்டேன்.
பொதுவாக இக்கூட்டம் குறித்து எழுந்த
சர்ச்சைகள் ஒரு பக்கம்,
இதன் மறுபக்கமாக எப்போதுமே பாதிக்கப்பட்ட
சாதியினரின் கண்டனக்குரலை மட்டுமே அறிந்த
பொதுவெளியில் தமிழ்ச்சமூகத்தின் கண்டனக்குரல்
ஒலித்தாக வேண்டும் என்பதும் அக்கண்டனக்குரல்
தமிழ்ச் சமூகத்தின் பொது அறமாக மாற்றும்
முயற்சியும் முன்னெடுக்கப் பட்டிருக்கிறது என்பதற்காகவும்
சம்பந்தப் பட்டவர்களுக்கு நன்றி சொல்வது
ஜன நாயக கடமை என்று நினைக்கிறேன்.
இனி….
இந்தக் கண்டனக்கூட்டம் காலத்தின் தேவையாகி
இருக்கிறது. இந்தக் கண்டனக்கூட்ட த்தில் தன்னுடைய குரல் நேரடியாக ஒலிக்க வேண்டும் ,
தன் எதிர்ப்பும் கண்டனமும் இந்தக் கூட்ட த்தின்
ஒரு பதிவாக இருந்தாக வேண்டும் என்று கலந்து கொண்டவர்கள் இருக்கிறார்கள்.
இக்காட்சியும் மாற்றமும்
தோழர் தொல். திருமாவளவன்
முன்வைக்கும் ஜன நாயக அறத்தின் வெற்றியாக
கருதுகிறேன். ஆனால் இதுவே தனிமனிதனின்
மனசாட்சியின் குரலாக ஒலித்து மனசாட்சியின்
தார்மீக வெற்றியாக மாறி இருக்கிறதா என்று
பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மீண்டும் முதல் வரிகளை வாசிக்கவும்.
அந்த வரிகள் தான் பொன்பரப்பி கண்டனக்
கூட்ட த்தின் பதாகையில் இருந்த வரிகள்.
இந்த வரிகளை மனசாட்சியுடன் அணுகும்
நாள்.. வர வேண்டும்.

2 comments:

  1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்
    பாராட்டுகள்

    ReplyDelete