Wednesday, April 24, 2019

மும்பை பாமரனின் கேள்வி

தேர்தல் ஆணையம் கைப்பற்றும் பணத்தை
என்ன செய்கிறார்கள்?
இதுவரை ரூ 1400 கோடி கைப்பற்றி இருப்பதாக
செய்தி வந்திருக்கிறது.
சட்டப்படி சரியான ஆவணங்களைக் கொடுத்துவிட்டு
கைப்பற்றிய பணத்தை உரியவர்கள்
 பெற்றுக் கொள்ளமுடியும். 
ஆனால் வேடிக்கை என்னவென்றால்
கைப்பற்றிய பணம் தன்னுடையது இல்லை என்று
சொல்லிவிடுகிறார்கள்! 

இன்று என் நண்பர் மும்பை பாமரன் 
இது பற்றி என்னிடம் பேசினார். சட்டப்படி
யாரும் உரிமைக்கோராத பணத்தை அரசாங்க
கருவூலத்தில் செலுத்த வேண்டும் .என்று சொன்னேன்.
அப்படி இதுவரை எவ்வளவு பணம் கணக்கு
வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.
இவை தவிர மூக்குத்தி, வேட்டி, சேலை, கஞ்சா,
பீர், செல்போன், கிரடிட் டோக்கன்…இப்படி 
வகைவகையாக தேர்தல் ஆணையம் கைப்பற்றி
இருக்கிறது. இதை எல்லாம் என்ன செய்வார்கள்
என்று கேட்கிறார் என் நண்பர். 
என்ன செய்வார்கள்?????
கைப்பற்ற பட்ட தெல்லாம் பொதுமக்கள் பணமாம்
எனவே பொதுமக்களுக்கே அதை எல்லாம் திருப்பிக்
கொடுக்க வேண்டுமாம்.. என்று தீர்வு சொல்ல ஆரம்பித்தார்.
நான் அவரிடம் சொன்னேன்..
என்னுடைய பணமில்லை என்று சொல்லியதை
உங்களுடைய பணம் என்று ஆதாரத்துடன் கேட்டால்
கொடுத்துவிடுவார்கள்.. முயற்சி செய்து பாருங்கள்!
என்று சொன்னேன்.
மனுஷனுக்கு ரொம்பவும் கோவம் வந்துவிட்ட து.
அது என்ன.. எங்களைப் போல பாமரன் மட்டும்
எதைக் கேட்டாலும் ஆதார் கார்ட், ரேஷன் கார்ட்,
பான் கார்ட் , பொண்டாட்டி இருந்தா அவளோட
ஆதார் கார்ட் என்று எல்லா ஆவணமும் கேட்கிறவர்கள்
இவ்வளவு பணம் மட்டும் எப்படி ஆவணமே
இல்லாமல் வந்த துனு கேட்க மாட்டார்களா?
அவுங்களுக்கு மட்டும் எப்படி ஆவணம் இல்லாமல்
இம்புட்டு பணத்தை எடுக்க முடியுது..
உங்க சட்டம், உங்க பேங்க் எல்லாமே பாமரனுக்கு
எதிரானவை..என்று பேச ஆரம்பித்துவிட்டார்…
நான் "கப் சிப்"
ஆனால் அவர் கேள்வியில் தொனித்த நியாயத்தின்
குரலை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியவில்லை.
#election_commission

No comments:

Post a Comment