Sunday, July 16, 2017

யாதும் ஊரே!

யாதும் ஊரே யாவரும் கேளிர்
அட போங்கப்பா
பொறந்த ஊரில் பொழக்க முடியாமல்
ஊர் ஊரா அலைஞ்சவனின் உளவியல் பேசி
என்னை மயக்காதீர்.
அது என்ன அடுத்த வரி..
ஆங்... தீதும் நன்றும் பிறர்தர வாரா வா..
ஆமாண்டா.. 
ஈழத்தில் விதைச்ச விதையும்
ஈராக்கில்  வெடிச்ச விதையும்
அவனவன் தலைவிதியாடா..?
போங்கடா போங்க
பெரியோரை வியக்காமல்
சிறியோரை இகழாமல்...
ச்சீ ச்சீ ..ரெளத்திரம் பழகாத மானங்கெட்ட பொழப்பு
நாய்கள் குரைப்பதில்லை. ஜாக்கிரதை.




5 comments:

  1. சரியான சவுக்கடி வரிகள் சகோ

    ReplyDelete
  2. //தீதும் நன்றும் பிறர்தர வாரா//
    அருமையான தமிழ் உண்மை. தமது சொந்த தவறுகளினாலேயே தவறான சிந்தனைகளினாலேயே துன்பங்கள் ஏற்படுகிறது. பிறர்களால் இல்லை.

    ReplyDelete