Wednesday, July 5, 2017

ஊழலை விட ஆபத்தானவை

காங்கிரசும் மகாத்மாவும் இந்திய தேசியமும் சாதிக்க முடியாததை
பிஜேபி சாதித்துவிடுவோ என்று அச்சமாக இருக்கிறது.
ஊழல் செய்த அரசியல் தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
என்ற அரசியல் நியாயங்களுடன் ஒவ்வொரு காயாக ஆட்டத்திலிருந்து
அவுட் ஆகி கட்டத்துக்கு வெளியே தூக்கி எறியப்படுகிறது.
இந்த அரசியல் சதுரங்க வேட்டையில் மாநிலக் கட்சிகளும்
மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் வேட்டையாடப்படுகிறார்கள்.
பொதுவாக நோக்கும் போது பெரிதும் நியாயமாகத் தெரியும் 
இச்செயல்பாடுகள் அனைத்துக்கும் காரண காரியங்கள் உண்டு.
அவை ஊழலையும் விட ஆபத்தானவை.
 ஊழல் தவப்புதல்வர்களையும் தவப்புதல்விகளையும்
காப்பாற்றுவது நம் நோக்கமல்ல என்பதால் கையறுநிலையில்
நாமும் தண்டனையை அனுபவிக்க வேண்டியதுதான்.
நாம் செய்த குற்றமெல்லாம் அவர்கள் ஊழல் செய்த போது
கண்டு கொள்ளாமல்ல் அவர்கள் இலவசமாகக் கொடுத்த தொலைக்காட்சியில்
கையில் ரிமோட்டுடம் உட்கார்ந்திருந்தது மட்டும் தான். !

4 comments:

  1. ///அவை ஊழலையும் விட ஆபத்தானவை///

    மிகச்சரியான வார்த்தை சகோ அருமை
    தவறுக்கு நாமும் தண்டனை பெறுவதே முறை.
    த.ம.1

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

    ReplyDelete