Thursday, February 5, 2015

தண்ணீர்க்கொள்ளையில் தாமிரபரணி




சிப்காட் நிறுவனம்  தண்ணீர் தூய்மை செய்கிற நிலையத்தை
பாட்டிலிங் கம்பேனியிடம் ஒப்படைத்தது. இதற்காக சிப்காட்
நிறுவ்னம் 1543 ஏக்கர் நிலத்தை  ஒதுக்கியது.
இத்தொழிற்சாலைக்கு தண்ணீர் மூலாதாரம் தாமிரபரணி.
தாமிரபரணி ஆற்றை ஆதாரமாகக் கொண்டு நாளொன்றுக்கு
900,000 லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொண்டிருந்த கோக்
கம்பேனி 2014 லிருந்து நாளொன்றுக்கு 18,00,000 லிட்டர்
தண்ணீரை எடுக்க ஆரமபித்துவிட்டது. 
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் விவசாயமும்
குடிநீர் வ்சதியும் தாமிரபரணி ஆற்றை மட்டுமே நம்பி
இருக்கும் சூழலில் கோக் இதே அளவில் தண்ணீரை
ஒவ்வொரு நாளும் எடுக்க ஆரமபித்தால் இவ்விரு
மாவட்டங்களும் வ்றண்ட பாழ் நிலங்களாக விரைவில்
மாறிவிடும்.
உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்கள் கோக் தண்ணீர்க்கொள்ளையைத்
தடுக்க தங்கள் மாநிலங்களில் கோக் கம்பேனிக்கு லைசன்ஸ்
வழங்கவில்லை! ஆனால் தமிழ்நாட்டில் எவ்வித சலசலப்பும் இல்லை!
தென் மாநிலங்களில் அக்வாஃபினா என்ற நிறுவனம் மட்டும்
1800 இடங்களில் தண்ணீரை உறிஞ்சும் தொழிற்சாலைகளை
அமைத்துள்ளது. அதில் 615 தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில்
இருக்கின்றன. தென்மாவட்டங்களில் ஒரு பக்கெட் தண்ணீர்
ரூ 3 முதல் 5 வரை விற்பனைக்கு வந்துவிட்டது.
தண்ணீருக்காக ஆற்றை நம்பிவாழ்ந்த மக்கள் இப்போது
தண்ணீர் லாரியை எதிர்ப்பார்க்கும் நிலை வந்துவிட்டது.

கோக் கம்பேனி தண்ணீர் வியாபாரத்தில் அடிக்கும் பகற்கொள்ளை
எவ்வளவு தெரியுமா?

தாமிரபரணி ஆற்றிலிருந்து ஒரு நாளுக்கு 18 லட்சம் லிட்டர் தண்ணீர்
எடுக்க கோக் , அரசுக்கு கொடுக்கும் விலை 1000 லிட்டருக்கு 13 ரூபாய் 50 காசு.
அதாவது 18 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க கொடுக்கும் விலை மொத்தம்
ரூபாய் 24,300/ மட்டும்.ஆனால் பொதுமக்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரை
ரூபாய் 25க்கு விற்கிறது!

சின்னதா ஒரு மனக்கணக்குப் போட்டுப்பாருங்கள்.

1800,000 லிட்டர் தண்ணீரைத் தூய்மைப்படுத்த, பாட்டிலில்
அடைக்க, விளம்ப்ரப்படுத்த , வாகனச்செலவு இத்தியாதிக்கு
ஒரு நாளைக்கு 50 லட்சம் செலவு செய்தாலும் கூட
கோக் ஒரு நாளைக்கு 4 கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கிறது.
நம்ம ஊரு தண்ணீரை எடுத்து நம்மிடமே பாட்டிலில் அடைத்துக்
கொடுத்து விலைக்கு வாங்க வைத்து, நம்ம வயலை வறண்ட
நிலமாக்கி, நம்ம ஊரில் குடி நீர்ப்பஞ்சம் உண்டாக்கி..
நம்ம நீர்வளத்தைக் கொள்ளை அடித்து...
நம் அனைவ்ரையும் அடி முட்டாள்களாக்கி..
... என்ன நடக்கிறது நம்ம ஊரில்.. நம்ம நாட்டில்..

பார்லே, பிஸ்லரி, கோக், பெப்சி, பார்லே அக்ரோ, மோகன் மிக்சிகன்ஸ்..
இந்த வெளிநாட்டு தண்ணீர்க்கொள்ளையர்களுடன் நம் உள்நாட்டு
தண்ணீர்க்கொள்ளையர்கள் ரிலையன்ஸ் அமபானி வகையறா..

மூன்றாவது உலகப்போர் நடந்தால் அது தண்ணீருக்கான
யுத்தமாகத்தான் இருக்கும். இயற்கை வளமாக இருந்த
தண்ணீரை சில ஆண்டுகளுக்கு முன் உலக வங்கி
ஏன் விற்பனைக்குரிய வர்த்தகப்பொருளாக மாற்றியது
என்பது இப்போது புரிகிறது. ரொம்பவும் தாமதமாக...




1 comment:

  1. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் நடப்பதாக்த் தெரியவில்லை
    நாம்தான் வந்தோரை எல்லாம் வாழ வைத்து,
    வாழ வழியின்றித் தவிக்கப் போகின்றோம்

    ReplyDelete