Tuesday, February 17, 2015

மனநிலை பிறழ்ந்தவர்கள்.. யார்?




மனநிலைப் பிறழ்ந்தவர்களை நம் சட்டம் எந்த அளவுக்குப்
பாதுகாக்கிறது? அவர்களுக்கு உடல் ரீதியாக இழைக்கப்படும்
கொடுமைகளை அவர்களால் உணர முடியாது..யார் தன்னை
இந்த நிலைக்கு ஆளாக்கினார்கள் எனப்தை அவர்களால்
அடையாளம் காட்டமுடியாது..ஏன்.. தனக்கு என்னன் நடந்திருக்கிறது
என்பதையும் அவர்களால் முழுமையாக உணர்ந்து கொள்ளவும்
முடியாது. இந்த "எல்லா முடியாது" களும் நம் சமூகத்தில்
சட்டம் அவர்களைப் பாதுகாக்க "முடியாது " என்று
சொல்வதற்கும் காரணமாக இருக்கிறது. இது சரியா..?

இந்த "முடியாதுகளின்" இன்னொரு பககத்தில் மிகவும்
கோரமாகத் தெரிகிறது பெண்களைத் தெய்வமாகக்
கொண்டாடும் நம் சமூகத்தின் கொடூரமான முகம்.
BANYAN அமைப்பின் கள ஆய்வு தமிழகத்தில்
இம்மாதிரி பாதிக்கப்பட்ட பெண்கள் எய்ட்ஸ் மற்றும்
சில பால்வினை வியாதிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
என்று சொல்கிறது. சில பெண்கள் கர்ப்பமடைந்திருக்கிறார்கள்.
50% மேலான் பெண்களின் நிலை இதுதான்.என்று உறுதி
செய்கிறார் இந்த அமைப்பின் வந்தனா கோபி குமார்.
மேலும் இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் தான்
இப்பெண்கள் மிகவும் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
என்று டாடா நிறுவனத்தின் சமூகவியல் ஆய்வுக்குழு
புள்ளிவிவரத்துடன் தங்கள் முடிவுகளை முன்வைத்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட இப்பெண்களின் வழக்குகளை எந்தக் காவ்ல்நிலையமும்
எடுத்துக்க்கொள்ள தயாராக இருப்பதில்லை. அவர்கள் நிராகரிக்கும்
ஒரே காரணம்.. "ப்ப்பாகல் ஹை.. அவ பைத்தியக்காரி.., கிறாக்கு.."

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தீர்வு காண நியமிக்கப்பட்ட
வர்மா கமிட்டி சில பரிந்துரைகளை வைத்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் இருப்பிடத்திற்கு பெண் போலீஸ்
அதிகாரி வரவேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இருக்கும்
உடல்/மன நிலையைக் கருத்தில் கொண்டு பயிற்சிப் பெற்ற
பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கபப்ட்டிருக்க வேண்டும்.
இவை அனைத்தும் வீடியோ காட்சியாகவும் பதிவு
செய்யப்பட்டிருக்க வேண்டும்.. என்று சில மாற்றங்கள்
criminal Law Amendment Act 2013 ல் இடம் பெற்றிருக்கின்றன.
எனினும் , NPRD (National Platform for the Rights of the Disabled)
 அமைப்பின் தலைவர் முரளிதரன்
"மாற்றுத்திறனாளிகளுக்கு நீதி
கிடைக்கச்செய்வது என்பது இப்போதும் கடினமான
செயலாகவே இருக்கிறது " என்கிறார்.

மனநிலைப் பிறழ்ந்தப் பெண்ணின் உடலையும்
வேட்டையாடும் மனிதர்களை என்ன செய்யலாம்?
எப்படி இவர்களை நம்மில் ஒருவராக ஏற்றுக்கொள்வது?
எனக்கு உண்மையிலேயே சந்தேகமாக இருக்கிறது,
உண்மையில் , யார் மனநிலை பிறழ்ந்தவர்கள்?

No comments:

Post a Comment