Monday, February 2, 2015

அறிஞர் அண்ணாவின் நினைவுகள்



தினமும் அழுகை வருகிறது..அழ முடியவில்லை.
அன்றும் 1969 இதே நாளில்
அழுகை வந்தது. அழுது தீர்த்தேன்.
ஆனால் அன்று ஏன் அழுதேன் என்பதெல்லாம்
புரியவில்லை.
அண்ணா போய்விட்டார்... என்று கதறிக்கொண்டு
அப்பாவின் நண்பர்கள் அழுதார்கள்..
இழப்பின் வேதனை என்னவென்று தெரியவில்லை.
அவ்ர்களுடன் சேர்ந்து நானும் அழுதேன்.
இன்று இழப்பின் வேதனை என்ன்வென்று புரிகிறது.
அழுகை வருகிறது... அழவேண்டும்..
என்னைக் கொஞ்சம் அழவிடுங்கள்.

என் அழுகையில் கரைந்திருக்கிறது
இந்த இயக்கதிற்காக தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த'
ஒரு தலைமுறையின் சோகம்

*அண்ணா உயிருடன் இருக்கும்வரை திமுக வின் தலைமை
நாற்காலி காலியாகவே இருந்தது.

*தான் வகித்த தி.மு.க பொதுச் செயலாளர் பதவியைச் சுற்று முறையில்
பலருக்கும் போகவேண்டும் என்று நினைத்தார்,
 "தலைமையிடம் அதிகாரம் குவியக் கூடாது.
 எந்த தனி நபரின் செல்வாக்கிலும் இயக்கம் இருக்கக் கூடாது" என்றார்!.

*அண்ணா இறந்தபோது அவரிடம் இருந்த சொத்துகள்
இறந்த மாதத்தில் சென்னை நுங்கம் பாக்கம் இந்தியன் வங்கியில்
 5,000 ரூபாய் மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய்
இதுதவிர..காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் ஒரு ஏக்கர் நிலம்,
காஞ்சிபுரத்தில் ஒரு வீடு,  சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு
மூன்றும் தான் அண்ணா வைத்துவிட்டுப் போன சொத்துக்கள்!

அண்ணா ...இப்படி என்னவெல்லாமோ நினைவுக்கு வருகிறது

என் நினைவுகளின் சுவடுகளில் உன்னை அழிப்பதோ
மறப்பதோ அவ்வளவு எளிதல்ல.
உன் நினைவுநாளில் மட்டும் உன்னை நினைக்கும்
தலைவர்களின் கூட்டத்திலோ
அவ்ர்கள் வாரிசுகளின் வரிசையிலோ நானில்லை.

அண்ணா ...என்னை மன்னித்துவிடு..
நீ கொண்டாடிய உன் தம்பியரை - (என் தந்தை உட்பட)
நானும் கொண்டாட விருப்பம் தான்.
ஆனால் முடியவில்லை.
காரணம் நானல்ல
அவர்கள் தான் என்பதை
அவர்கள் மறுக்கலாம்.!
நீ..?

1 comment:

  1. ////நீ கொண்டாடிய உன் தம்பியரை - (என் தந்தை உட்பட)
    நானும் கொண்டாட விருப்பம் தான்.
    ஆனால் முடியவில்லை.
    காரணம் நானல்ல
    அவர்கள் தான் என்பதை
    அவர்கள் மறுக்கலாம்.!
    நீ..?///
    நிச்சயம் ஆண்ணாவும் மறுக்க மாட்டார் சகோதரியாரே
    அண்ணா போற்றுவோம்

    ReplyDelete